மும்பை: வெற்றிகரமான ஒரு தொழிலதிபராக இந்திய மனங்களில் இடம் பிடித்தவர் தான் ரத்தன் டாடா. தொழில் வாழ்க்கையில் இவ்வளவு பெரிய வெற்றி அடைந்தவர் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற கேள்வி எழுகிறது. அவரிடம் நடத்தப்பட்ட பல்வேறு நேர்காணல்களிலும் கூட ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது.
அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்தபோது காதல் வயப்பட்டு திருமணத்திற்கு தயாராக இருந்த நேரத்தில் இந்தியா சீனா இடையில் ஏற்பட்ட ஒரு போர் ரத்தன் டாடாவின் காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது தெரியவந்துள்ளது.

ரத்தன் டாடா : ஏ லைஃப் என்ற புத்தகத்தில் ரத்தன் டாடாவின் காதல் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. 1960களில் ரத்தன் டாடா அமெரிக்காவில் கல்வி பயில்வதற்காக சென்றிருந்தார். அப்போது உலக புகழ்பெற்ற கட்டிட வடிவமைப்பாளர் Frederick Earl Emmons அவர்களின் அறிமுகம் ரத்தன் டாடாவுக்கு கிடைத்தது. அவருடைய மகளான கேரோலின் எம்மான்சுக்கும் ரத்தன் டாடாவுக்கும் இடையே நட்பு மலர்ந்தது. பின்னாளில் அது காதலாக மாறியது.
இருவரின் காதலுக்கும் கேரோலினின் பெற்றோர் பச்சைக் கொடி காட்டினார். இந்தியாவிலும் ரத்தன் டாடாவின் குடும்பத்தினர் இவர்களின் காதலை ஏற்றுக் கொண்டனர். இந்நிலையில் 1962 ஆம் ஆண்டு ரத்தன் டாடாவின் பாட்டிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதனை அடுத்து அவர் அவசரமாக அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு திரும்பவேண்டிய சூழல் உண்டானது. அவர் இந்தியா வந்த பிறகு கேரோலினும் இந்தியாவிற்கு வந்து டாடாவின் குடும்பத்தினருடன் இணைந்து பின்னர் திருமணம் செய்து கொள்வதாக திட்டமிட்டு இருந்தனர் .
ஜூலை மாதம் ரத்தன் டாடா இந்தியா வந்தார் , அக்டோபர் மாதத்தில் இந்தியா சீனா இடையே சண்டை ஏற்பட்டது. இந்த இந்த போர் காரணமாக இந்தியாவில் ஒரு பதட்டமான சூழல் காணப்பட்டது. எனவே இப்படிப்பட்ட பதட்டமான சூழலில் தங்களுடைய மகளை இந்தியாவிற்கு அனுப்ப வேண்டாம் என கேரோலினின் பெற்றோர் முடிவு செய்தனர். இந்த முடிவு ரத்தன் டாடாவுக்கும் கேரோலினுக்கும் இடையே பிரிவை ஏற்படுத்தியது.
பின்னர் கேரோலின் ஓவன் ஜோனஸ் என்ற ஒரு கட்டிட வடிவமைப்பாளரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர் ஒரு பேட்டின் போது ரத்தன் டாடாவை போலவே இருந்ததற்காகவே ஜோனஸை தான் திருமணம் செய்து கொண்டேன் என கூறினார். தி டார்ஜிலிங் லிமிடெட் என்ற ஹாலிவுட் திரைப்படம் 2007 ஆம் ஆண்டு வெளியானது.
அந்த திரைப்படத்தை பார்த்தபோது தனக்கு ரத்தன் டாடா உடனான நினைவுகள் திரும்ப வந்தன என கேரோலின் கூறியுள்ளார். அப்போதுதான் ரத்தன் டாடா திருமணமே செய்து கொள்ளாமல் இருப்பதும், டாடா சன்ஸ் தலைவராக உயர்ந்திருப்பதும் தெரிய வந்ததாம்.
உடனடியாக ரத்தன் டாடாவிற்கு வாழ்த்து தெரிவித்து ஒரு மின்னஞ்சலை அனுப்பி தான் இந்தியா வர விரும்புவதாக கூறினாராம் கேரோலின். இதனை அடுத்து 2008 ஆம் ஆண்டு கேரோலின் இந்தியா வருகை தந்தார். ரத்தன் டாடா அவரை வரவேற்றார். இதனை அடுத்து இருவரும் நட்பு பாராட்ட தொடங்கினர்.
2017 ஆம் ஆண்டு ரத்தன் டாடாவின் 80ஆவது பிறந்தநாளுக்கு கேரோலின் இந்தியாவிற்கு மீண்டும் ஒருமுறை வருகை தந்தார். பின்னர் 2021 ஆம் ஆண்டு மற்றொரு வேலைக்காக இந்தியா வந்தபோதும் டாடாவை நேரடியாக சென்று சந்தித்தார். இந்தியா – சீனா இடையிலான போர் ஏற்படாமல் இருந்திருந்தால் ரத்தன் டாடாவுக்கு என தனிப்பட்ட வாழ்க்கை இருந்திருக்கும்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications