ஷாங்காய், சீனா: சீனாவின் ஷாங்காய் நகரில் ஒரு நிறுவனத்தின் மனித வளத்துறை மேலாளர் ஒருவர் ஊழியர்களை பணிக்கு அமர்த்தாமலேயே நிறுவனத்திடம் இருந்து 20 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஷாங்காயை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரக்கூடிய ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில் மனிதவளத்துறை மேலாளராக பணிபுரிந்து வந்தவர் யாங். இவர் 8 ஆண்டு காலமாக மோசடி செய்து 20 கோடி ரூபாயை சுருட்டி இருக்கிறார். இது தொடர்பாக சீன நாளிதழில் வெளியாகி இருக்கக்கூடிய செய்தியில் ஹெச்ஆர் மேனேஜர் யாங் , 2014 ஆம் ஆண்டு நிறுவனத்தில் 22 ஊழியர்களை புதிதாக பணிக்கு அமர்த்தியதாக கணக்கு காட்டியிருக்கிறார்.

எட்டு ஆண்டுகளாக இவர்களுக்கான ஊதியம் மற்றும் பிற கொடுப்பனவுகளை இவரே பெற்று இருக்கிறார். பல வங்கிகளிலும் இந்த போலி ஊழியர்கள் பெயரை கொண்டு கணக்குகளை தொடங்கி இருக்கிறார். ஊதியத்தை இந்த வங்கி கணக்குகளில் வரச் செய்து இவர் எடுத்து பயன்படுத்தி ராஜ வாழ்க்கை வாழ்ந்துள்ளார். கிட்டத்தட்ட 8 ஆண்டு காலம் இவர் இவ்வாறு நிறுவனத்தை ஏமாற்றி வேலைக்கு ஆட்களையே எடுக்காமல் போலியாக பெயர்களை உருவாக்கி மோசடி செய்து வந்திருக்கிறார்.
இவ்வாறு இவர் போலியாக உருவாக்கிய ஒரு ஊழியர் 100 சதவீதம் வருகை கொண்டிருந்ததால் நிறுவனத்திற்கு சந்தேகம் வந்திருக்கிறது. ஒரு ஊழியர் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் அலுவலகத்திற்கு வந்துள்ளார் என சந்தேகம் அடைந்த நிறுவனம் விசாரணை நடத்த தொடங்கியது. அப்பொழுதுதான் அங்கே பணியாற்றிய மற்ற ஊழியர்கள் இப்படி ஒரு ஊழியரை நாங்கள் பார்க்கவே இல்லை இப்படி பெயர் கொண்ட ஒரு நபர் இங்கு இல்லவே இல்லை என கூறினார்கள்.
இதனை அடுத்து நிறுவன தலைமை அந்த மனித வள மேலாளரிடம் கடுமையாக விசாரணை நடத்திய போது தான் அவர் இத்தனை ஆண்டு காலம் ஊழியர்களை பணி அமர்த்தாமலேயே போலியாக கணக்கு காட்டி 20 கோடி ரூபாயை சுருட்டியது தெரியவந்துள்ளது. இவ்வாறு நிறுவனத்திடம் இருந்து ஏமாற்றி பெறப்பட்ட பணத்தில் இவர் சுமார் இரண்டரை கோடி ரூபாயை திருப்பி தந்து இருப்பதாக தெரிகிறது.
இதனை அடுத்து இவர் மீது நிறுவனம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தது. அவருக்கு 10 ஆண்டுகாலம் சிறை தண்டனை தற்போது கிடைத்திருக்கிறது. இவ்வாறு மோசடி செய்வதற்கு ஏதுவாக யாங் இந்த நிறுவனத்தில் புதிதாக ஆட்களை தேர்வு செய்வது, அவர்களுக்கான ராஜினாமா மீது முடிவெடுப்பது , அவர்களின் ஊதியத்தை நிர்ணயம் செய்வது என அனைத்தும் தன்னிடமே இருக்கும் படி பார்த்துக் கொண்டிருக்கிறார். இதுதான் இவர் மோசடி செய்வதற்கு பெருமளவில் உதவி இருக்கிறது.
Story written by: Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications