சீனாவின் சூழ்ச்சியில் காங்கோ.. கட்டம் கட்டி தூக்க இதுதான் காரணமா..?!

ஒரே ஒரு ஒப்பந்தத்தின் மூலம் உலகின் 80 சதவீத கோபால்ட்டை சீனா தன்வசப்படுத்தி ஒரு நாட்டையே ஏமாற்றி இருக்கிறது. ஜெயந்த் முந்த்ரா என்பவர் தன்னுடைய லிங்குடின் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் சீனா எப்படி இந்த சூழ்ச்சியை அரங்கேற்றியது என விவரித்துள்ளார்.

உலக அளவில் மிகவும் தேவை படக்கூடிய ஒரு பொருள்தான் கோபால்ட். நாம் மின்சார வாகனங்களில் பயன்படுத்தக்கூடிய பேட்டரிகளில் கோபால்ட் மிக முக்கிய உறுப்பாக பயன்படுத்தப்படுகிறது. அதேபோல சூப்பர் அலாய்களில் பயன்படுத்தப்படும் முக்கியமான ஒரு பொருள் கோபால்ட் தான். இது ஜெட் என்ஜின் மற்றும் கேஸ் டர்பைன்களில் பயன்படுத்தப்படுகிறது.

சீனாவின் சூழ்ச்சியில் காங்கோ.. கட்டம் கட்டி தூக்க இதுதான் காரணமா..?!

சில இடங்களில் கோபாலிட்டி 60ஐ பயன்படுத்தி புற்றுநோய் சிகிச்சை மேற்கொள்லப்படுகிறது. எனவே சர்வதேச அளவில் கோபால்ட்டிற்கான டிமாண்ட் எப்பொழுதும் இருந்து வருகிறது. இதனை முன்கூட்டியே உணர்ந்து கொண்ட சீனா கிட்டத்தட்ட உலகின் 80 சதவீத கோபாலட்டை ஒரு சிறிய ஒப்பந்தத்தின் மூலம் தனக்கு சொந்தமானதாக மாற்றியுள்ளது. உலக அளவில் 80 சதவீத கோபால்ட் இருக்கக்கூடிய ஒரு நாடு தான் காங்கோ.

2008 ஆம் ஆண்டு சீன அரசு காங்கோ நாட்டு அரசுடன் ஒரு ஒப்பந்தத்தை கையெழுத்து. அதன்படி காங்கோ நாட்டில் இருக்கும் கோபால்ட் , காப்பர் உள்ளிட்டவற்றை தோண்டி எடுப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அதற்கு ஈடாக சீன அரசு காங்கோ நாட்டில் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்று உடன்பாடு ஏற்படுத்தப்பட்டது. இதனை அடுத்து காங்கோ நாட்டில் இருக்கும் 19 சுரங்கங்களில் தற்போது சீனாவின் வசம் 15 சுரங்கங்கள் சென்று விட்டன.

இங்கு பிரிக்கப்படும் கோபால்ட் அனைத்தும் சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அங்கே அவை மதிப்பு கூட்டப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதன் மூலம் சீனா பல கோடிகளை சம்பாதிக்கிறது. இது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு கவலை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் சீனாவோ தாங்கள் உறுதி அளித்தபடி காங்கோ அரசுக்கு முதலீடுகளை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தை கையெழுத்திடும்போது காங்கோ நாட்டு அரசு தங்கள் வசம் இருக்கக்கூடிய கோபாலிட்டின் மதிப்பை உணராமல் கையெழுத்திட்டு விட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 3 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்வதாக தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது ஆனால் காங்கோ அரசு உண்மையாக தங்கள் வசம் இருக்கும் கோபால்ட்டின் மதிப்பை உணர்ந்து இருந்தால் அது 20 மில்லியன் டாலர்கள் என உயர்ந்திருக்கும் என சொல்லப்படுகிறது.

சீன அரசு தாங்கள் உறுதி அளித்த 3 பில்லியன் டாலரில் இதுவரை 822 மில்லியன் டாலர்களை மட்டுமே முதலீடு செய்துள்ளது. அதாவது உறுதியளித்த தொகையில் 27 சதவீதத்தை மட்டுமே இதுவரை முதலீடாக மேற்கொண்டு இருக்கிறதாம். இதனால் தவறு செய்து விட்டோமோ என காங்கோ அரசு தற்போது வருத்தப்பட்டு வருகிறது. ஆனால் சீனாவோ மற்றொரு நாட்டின் ஆதாரத்தைக் கொண்டு கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து வருகிறது.

Story Written By: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+