இந்தியாவில் கொரோனா தொற்று மே மாதம் துவக்கம் முதல் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உச்சத்தைத் தொடத் துவங்கிய காரணத்தால் மாநில அரசுகள் அடுத்தடுத்து லாக்டவுன் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்தது.
வருமானம் இல்லாமல் தவிக்கவிட்ட மே மாதம்
இதனால் வகைப்படுத்தப்படாத துறையில் பணியாற்றும் கோடிக்கணக்கான மக்கள் தங்களது வேலை, வருமானத்தை இழந்துள்ளனர். இதன் மூலம் நாடு முழுவதும் பல கோடி ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் வருமானம் குறைந்துள்ளது.
இதனால் மக்கள் தங்களது அடிப்படைத் தேவைகளைக் கூட முழுமையாகப் பூர்த்திச் செய்துகொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.
1.5 கோடி பேர் வேலை இழப்பு
மே மாதம் மட்டும் இந்தியா முழுவதும் சுமார் 1.5 கோடி பேர் தங்களது வேலைவாய்ப்பை இழந்துள்ளனர், இதன் மூலம் 2020 மார்ச் லாக்டவுன்-க்குப் பின் தற்போது வேலைவாய்ப்பின்மை அளவீடு புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
மே மாத வேலைவாய்ப்பின்மை
இதன் மூலம் நாட்டின் வேலைவாய்ப்பின்மை மே மாதத்தில் 11.90 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. குறிப்பாக நகரங்களில் வேலைவாய்ப்பின்மை ஏப்ரல் மாத 9.78 சதவீத வேலைவாய்ப்பின்மை அளவில் இருந்து 14.73 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கிராமங்கள், டவுன் பகுதிகள்
மேலும் கொரோனா தொற்றின் முதல் அலையை விடவும் 2வது அலை இந்தியக் கிராமங்கள், டவுன் பகுதிகளில் அதிகரித்துள்ளதால் மே மாதத்தில் ஊரகப் பகுதிகளிலும் வேலைவாய்ப்பின்மை 7.13 சதவீதத்திலிருந்து 10.63 சதவீதமாக அதிகரித்துள்ளது.
வருமானம் குறைந்து
இதனால் நகரங்கள் முதல் கிராமங்கள் முதல் பல கோடி குடும்பங்கள் வருமானத்தை வர்த்தகச் சரிவு வாயிலாகவோ, வேலைவாய்ப்பு இழப்பு வாயிலாகவோ இழந்துள்ளது. இது மூலம் மக்களின் நுகர்வு அளவு பெரிய அளவில் குறைந்து, நாட்டின் வர்த்தகம், பொருளாதாரமும் சரிவடைந்துள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications