ரிசர்வ் வங்கி சமீபத்தில் இந்தியாவில் அதிக மதிப்புடைய கரன்சியான 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது. இதன் மூலம் 2000 ரூபாய் நோட்டுக்களை ரொக்கமாக வைத்திருப்பவர்கள் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் அதைத் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்தோ அல்லது வங்கியில் பிற ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து புழக்கத்தில் 4 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு வர உள்ளது. மக்கள் தங்களிடம் இருக்கும் 2000 ரூபாய்க்கு நோட்டுக்கு மாற்றாக பிற நாணயங்களை பெற்றாலும், கணிசமான தொகை வங்கியில் டெபாசிட் ஆகவும் வந்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை நாட்டின் பல வங்கிகளில் நிதி இருப்பை அதிகரிக்கும், பொதுவாக வங்கி வர்த்தகத்தை தாண்டி கூடுதலாக டெபாசிட் தொகை வரும் போது சில முக்கியமான மாற்றங்கள் நடக்கும். இதில் முக்கியமான ஒன்று வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்வது.
பொதுவாக வங்கிகள் தனது கடன் வர்த்தகத்திற்காக கூடுதல் நிதி தேவை ஏற்படும்போது, எளிதாக நிதி திரட்டும் ஒரு வழி டெபாசிட், வங்கி வைப்பு நிதியின் வட்டி விகிதத்தை சிறிய அளவில் உயர்த்தினால் கூட பல ஆயிரம் கோடி நிதியை வங்கிகளால் சில நாட்களில் திரட்டி விட முடியும்.
வங்கி வைப்பு நிதியின் வட்டி விகிதத்தை உயர்த்தும் போது சாமானிய மக்கள் பயன்பெறுவார்கள். ஆனால் தற்போது 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவது மூலம் வங்கிகளிடம் போதுமான நிதிஆதாரம் டெபாசிட் மூலம் பெற்றுள்ளதன் வாயிலாக வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் இல்லை. இதன் மூலம் வங்கிகளும் அதிகப்படியான கடனை கொடுத்து கூடுதல் வருமானத்தையும் பெற முடியும்.

சொல்லப்போனால் இந்த மாதம் ஆர்பிஐ தனது இரு மாத நாணய கொள்கையை நடத்த உள்ளது, இதில் ரெப்போ விகித்தை உயர்த்தினால் கூட வங்கிகள் டெபாசிட் மீதான வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புகள் மிகவும் குறைவு. காரணம் 2000 ரூபாய் நோட்டுகள் டெபாசிட் ஆக மாறியுள்ளது தான். ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு (எம்பிசி) கூட்ட 6-8 ஜூன் 2023 தேதிகளில் நடக்கிறது.
இதைவிட முக்கியமாக சில வங்கிகள் தங்களிடம் அடுத்த 6 மாதத்திற்கு தேவையான நிதியை டெபாசிட் வாயிலாக பெற்றால், தற்காலிகமாக வங்கி வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை குறைக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது என Transcend Consultants தலைவர் கார்டிக் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications