வருடா வருடம் கோடைக் காலம் மோசமாகிக்கொண்டு இருக்கும் வேளையில், தற்போது மிகப் பெரிய பிரச்சனையாக மாறி வருவது 'வெப்ப அலைகள்' (Heat Waves) தான். கடும் வெப்ப நிலை காரணமாக ஏற்படும் இந்த வெப்ப அலைகள், எதிர்காலத்தில் இந்தியாவில் அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என பருவநிலை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதனால், கோடை வெளியில் வெறும் அசௌகரியத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், வணிகம், பொருளாதாரம் மற்றும் வீட்டு செலவுகளைக் கூட பாதிக்கும் அபாயம் உள்ளது. எப்படின்னு பார்க்கலாம் வாங்க.

அதிகரிக்கும் வெப்ப அலைகள்: இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) தலைமை இயக்குனர் திரு. மிருத்யுஞ்சய மொஹாபத்ரா அவர்கள், "வரும் மாதங்களில் இந்தியாவில் வழக்கத்தை விட அதிக வெப்பநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஜூன் 30ம் தேதி வரையிலான மூன்று மாத காலகட்டத்தில், பல்வேறு பகுதிகளில் பொதுவாக ஏற்படும் 4 முதல் 8 நாட்கள் வெப்ப அலைகள், 10 முதல் 20 நாட்கள் வரை நீடிக்கும் அபாயம் உள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாகவே இருக்கும்." என்று கணித்துள்ளார்.
பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்புகள்: வெப்ப அலைகள் நீண்ட நாட்கள் நீடித்தால், அது பல்வேறு பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தும்.
விவசாய பாதிப்பு: கடும் வெப்பம் காரணமாகப் பயிர்கள் பாதிக்கப்படும். இது உணவு உற்பத்தியைக் குறைத்து, உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தும்.
தண்ணீர் தட்டுப்பாடு: வெப்பம் அதிகரிப்பதால், தண்ணீர் ஆவியாதல் அதிகரிக்கும். இதன் காரணமாக நீர் நிலைகள் வறண்டு, குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும்.
மின்சார தேவை அதிகரிப்பு: வெப்பம் அதிகரிக்கும் போது, ஏர் கண்டிஷனர்கள் மற்றும் பேன், ஏர் கூலர்களை அதிகம் பயன்படுத்தப்படும். இதனால் மின்சார தேவை அதிகரித்து, மின்சார தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மின்சார உற்பத்திக்கு அதிக அளவு நிலக்கரி தேவைப்படுவதால், சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரிக்கும் அபாயமும் உள்ளது.
வீட்டு செலவு அதிகரிப்பு: வெப்பம் அதிகரிப்பதால் விவசாய உற்பத்தி பாதித்து, விளைப்பொருட்கள் உயரும். வெயிலைத் தணிக்க ஏர் கண்டிஷனர்கள், பேன், ஏர் கூலர்களை அதிகம் பயன்படுத்துவதால் மின்சார கட்டணங்கள் அதிகரிக்கும் இதற்குக் காரணம். இது மொத்தமாக மாதாந்திர வீட்டு செலவுகளை அதிகரிக்கும்.
முன்னேற்பாடு அவசியம்: வெப்ப அலைகளின் தாக்கத்தைக் குறைக்க, தனிநபர் மற்றும் அரசு என அனைத்து தரப்பும் முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். மரங்களை நட்டு வளர்ப்பது, நீர்வள மேலாண்மை மேம்படுத்துதல், மின்சார சேமிப்பு நடவடிக்கைகள் மூலம் ஆகியவை கணிசமான பாதிப்பை குறைக்கலாம்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications