கொரோனா தொற்றில் இருந்து உலக நாடுகள் மீண்டும் வரும் நிலையில் ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க நிற்கிறது, இதைத் தடுக்க அமெரிக்கா முதல் பல நாடுகள் முயற்சி செய்த முக்கியமான காரணம் உண்டு.
ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்தால் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா என வல்லரசு நாடுகள் அனைத்தும் ரஷ்யா பொருளாதார வர்த்தகத் தடை விதிக்கத் தயாராக உள்ளது. இதன் மூலம் அதிகம் பாதிக்கப்படுவது ரஷ்யா மட்டுமல்ல ஒட்டுமொத்த ஆசிய, ஐரோப்பிய சந்தையும் பாதிக்கப்படும்.
இதன் வாயிலாக அமெரிக்காவும் பாதிக்கப்படும், இதனால் ஒட்டுமொத்த சர்வதேச பொருளாதாரமும் நங்கூரம் போட்டது போல் நின்றுவிடும் என்பது தான் உண்மை.
அப்படியென்றால் இந்தியா, ரஷ்யாவை எதற்காக நம்பியிருக்கிறது.
இந்தியா - ரஷ்யா
இந்தியாவில் மின்சார உற்பத்திக்குத் தற்போது அதிகளவில் நம்பியிருக்கும் ஒரு பொருளாக நிலக்கரி இருக்கும் வேளையில் 2021ஆம் ஆண்டில் மட்டும் இந்தியா, ரஷ்யாவில் இருந்து சுமார் 1.8 மில்லியன் டன் அளவிலான நிலக்கரியை இறக்குமதி செய்துள்ளது. இது 2020ல் 2.5 மில்லியன் டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அளவீடு
இந்தியா எப்படித் தனது பெட்ரோல் தேவையை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து பூர்த்திச் செய்கிறதோ, அதேபோலத் தான் நிலக்கரியும். இப்படியிருக்கையில் இந்தியா வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் மொத்த நிலக்கரியில் 1.3 சதவீத நிலக்கரி ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்கிறது.
2020ல் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யும் அளவீடு 1.6 சதவீதமாக இருந்து, 2021ல் 1.3 சதவீதமாகக் குறைந்துள்ளது.
கச்சா எண்ணெய்
இந்தியா அரபு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது போல் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்கிறது. 2021ஆம் ஆண்டில் மட்டும் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து 43,400 பேரல் கச்சா எண்ணெயை வாங்கியுள்ளது. இது இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் வெறும் 1 சதவீதம் மட்டுமே.
இயற்கை எரிவாயு
நிலக்கரி, கச்சா எண்ணெய் ஆகியவற்றை ரஷ்யாவிடம் இருந்து இந்தியா இயற்கை எரிவாயுவையும் இறக்குமதி செய்கிறது. 2021ல் இந்தியா செய்த மொத்த எரிவாயு இறக்குமதி அளவீட்டில் இது 0.2 சதவீதம் மட்டுமே.
மேலும் 2018ஆம் ஆண்டில் கெயில் நிறுவனம் Gazprom நிறுவனத்துடன் 2.5 மில்லியன் டன் LNG-ஐ இறக்குமதி செய்யும் 20 வருட ஒப்பந்தத்தைச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
போர்
தற்போது ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்தால், ஒருபக்கம் ரஷ்யா மேற்கத்திய நாடுகளை எதிர்த்து போர் செய்ய வேண்டும், காரணம் உக்ரைன் நாட்டுக்கு அனைத்து வல்லரசு நாடுகளும் துணையாக நிற்கிறது. ஏற்கனவே உக்ரைன் நாட்டில் நேட்டோ படைகள் களமிறக்கப்பட்டு உள்ளது.
வர்த்தகத் தடை
இதைத் தாண்டி அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் இணைந்து ரஷ்யா மீது வர்த்தகம் மற்றும் பொருளாதாரத் தடை விதிக்கும். அப்படித் தடை விதிக்கும் பட்சத்தில் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றுடன் நட்புறவு கொண்ட நாடுகள் ரஷ்யா உடன் வர்த்தகம் செய்ய முடியாது. இதனால் ரஷ்யாவின் நிதிநிலை பாதிக்கப்படுவதோடு, ரஷ்யாவை பல்வேறு விஷயத்திற்காக நம்பியிருக்கும் பிற நாடுகளும் பாதிக்கப்படும்.
More From GoodReturns

டிரம்புடன் கைகோர்த்த அம்பானி!! ஈரான் போருக்கு மத்தியில் அமைந்த சர்ப்பிரைஸ் கூட்டணி!!

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!



Click it and Unblock the Notifications