இந்தியாவில் சிலர் கிரிப்டோகரன்சியை பயன்படுத்தி சிலர் மளிகைப் பொருட்கள், பெட்ரோல், மொபைல் ரீசார்ஜ், உணவு டெலிவரி, தங்க நகைகளை கூட வாங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக கிரிப்டோகரன்சியை உள்நாட்டு பரிமாற்றத்தில் பயன்படுத்த முடியாத நிலையில் எப்படி இவர்கள் மட்டும் பயன்படுத்தி வருகிறார்கள் என்ற தகவலை எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.
இந்திய கிரிப்டோகரன்சி உரிமையாளர்கள் தங்களிடம் இருக்கும் கிரிப்டோவை நேரடியாக இந்திய வங்கிகளிலோ, உள்நாட்டு கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் தளங்களிலோ பயன்படுத்தாமல், வெளிநாட்டு தளங்களை இடைத்தரகராக பயன்படுத்தி செலவிட்டு வருகின்றனர்.

இந்தியாவில் இருந்து பெரும்பாலான மக்கள் தங்களிடம் இருக்கும் USDT போன்ற Stablecoin-களை ஸ்வீடன், ஜெர்மனி, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருக்கும் பின்டெக் மற்றும் ஈகாமர்ஸ் நிறுவனங்கள் மூலம் கிரிப்டோவை கிப்ட் கார்டாகவோ, வவுச்சாராக மாற்றி அதன் மூலம் தங்களுடைய கிரிப்டோகரன்சியை செலவு செய்து வருகின்கின்றனர்.
இந்த வெளிநாட்டு பின்டெக் தளங்கள், இந்தியாவில் உள்ள வவுச்சர் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் அக்ரிகேட்டர் நிறுவனங்களிடமிருந்து Gift Voucher-களை மொத்தமாக வாங்கி அதை இந்திய பயனர்களுக்கு கிரிப்டோவை வாங்கிகொண்டு வவுச்சர்களாக கொடுத்து வருகின்றனர்.
இந்த கிஃப்ட் வவுச்சர்கள் குறிப்பிட்ட பிராண்ட் அல்லது கடைகளில் மட்டுமே பயன்படுத்தக்கூடிய க்ளோஸ்டு லூப் ப்ரீபெய்டு கார்டு என்பதால் அந்த கடையில் மட்டுமே இந்த பணத்தை செலவு செய்ய முடியும் கட்டமைப்பை கொண்டது.
இதனால் பணம் அனுப்பவோ அல்லது ஏடிஎம் மூலம் பணம் எடுக்கவோ இந்த வவுச்சர்களை பயன்படுத்த முடியாது. இதனால் இவை ரிசர்வ் வங்கயின் வழக்கமான பணப் பரிவர்த்தனை கட்டுப்பாடுகளுக்கு வெளியே இருக்கிறது.
இந்த முறையைப் பயன்படுத்துவோர், கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்களில் தங்களுடைய வேலெட்களில் இருக்கும் பணத்தை எடுப்பதைத் தவிர்த்து, பிளாக்செயின் வழியாக வெளிநாட்டு தளங்களுக்கு நேரடியாக கிரிப்டோவை அனுப்புகின்றனர். இதன் மூலம் இந்திய வங்கிக் கணக்கு வழியாக பணப் பரிவர்த்தனை நடக்காமல் தடுக்கப்படுகிறது.
இந்த பரிவர்த்தனை வங்கி அமைப்புகள், வருவமான வரி அமைப்பு, ஆர்பிஐ உள்ளிட்ட அனைத்து முக்கிய நிதி கட்டுப்பாட்டு கண்காணிப்பில் இருந்தும் தப்புவதாக கூறப்படுகிறது. இத்தகைய கட்டமைப்பின் மூலம்
சட்டவிரோதமாகவோ அல்லது சட்டப்பூர்வமாகவோ கிரிப்டோ மூலம் வருமானம் பெறும் ஒருவர் கூட, இந்த வழிமுறையை பயன்படுத்தி இந்தியாவில் ஷாப்பிங் செய்ய முடியும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பரிமாற்ற அமைப்பில் கமிஷன் மூலம் பல தரப்பட்ட அமைப்புகள் சம்பாதிக்கிறது. இதுக்குறித்த தகவல்களை சமீபத்தில் நிதி அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு Blockchain Research Organisation என்ற அமைப்பு கொண்டு சென்றுள்ளது.


Click it and Unblock the Notifications
