சென்னை: தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை தொழில் ரீதியாகவும் உள்கடமைப்பு ரீதியாகவும் பெரிய அளவிலான மாற்றங்களை அடைந்து வருகிறது. விமான நிலையம், துறைமுகம் என பல சாதகமான அம்சங்கள் இருப்பதால் பெரிய பெரிய நிறுவனங்கள் எல்லாம் சென்னையை நோக்கி ஓடி வருகின்றன.
சென்னை ஐடி, ஜிசிசி என ஒரு புறம் வளர்கிறது, மறுபுறம் சரக்கு போக்குவரத்து, எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி, வாகன உற்பத்தி என கெத்து காட்டி வருகிறது. இந்த வளர்ச்சிக்கு ஊக்கம் தரும் வகையில் மத்திய மாநில அரசுகள் சென்னை மற்றும் சென்னையை சுற்றி பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் இந்தியாவின் மிக முக்கியமான ஒரு இண்டஸ்ட்ரியல் பவர் ஹவுஸ் ஆக மாறும் வகையில் சென்னை உருவெடுத்து வருகிறது.

சென்னை - பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே: சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய இரண்டு நகரங்களையும் இணைக்கக் கூடிய பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெறு வருகின்றன. இந்த திட்டம் தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகா என மூன்று மாநிலங்களை இணைக்கிறது. 17 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரக்கூடிய இந்த திட்டப்பணி மூலம் சென்னை பெங்களூர் இடையிலான பயண நேரம் வெகுவாக குறைய இருக்கிறது 2026 ஆம் ஆண்டின் மத்தியில் இந்த சாலை முழுவதுமாக பயன்பாட்டுக்கு வந்து விடும் என சொல்லப்படுகிறது.
சித்தூர் தாச்சூர் எக்ஸ்பிரஸ்வே: ஆறு வழி பாதையாக சித்தூர் தாச்சூர் எக்ஸ்பிரஸ்வே திட்டமிடப்பட்டிருக்கிறது. பெங்களூர் சென்னை எக்ஸ்பிரஸ்வேயில் இருந்து பிரியக்கூடிய இந்த சாலை சென்னை பெரிஃபெரல் ரிங் ரோடு வழியாக காட்டுப்பள்ளி துறைமுகம் வரை செல்கிறது. இந்த திட்டத்திற்கு 4000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் 2026 ஆம் ஆண்டின் மத்தியில் பணிகள் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூரத்- சென்னை எக்ஸ்பிரஸ்வே: குஜராத் மாநிலம் சூரத்தையும் சென்னையும் இணைக்க கூடிய வகையில் எக்ஸ்பிரஸ்வே கட்டமைக்க அரசு மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது. 45 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சென்னை தொடங்கி திருப்பதி, கடப்பா, கர்நூல், கலாபுராகி, சோலாப்பூர்,நாசிக் ,சூரத் ஆகிய நகரங்களை இணைக்க கூடிய வகையில் இந்த எக்ஸ்பிரஸ்வே திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இந்த திட்டத்திற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை மற்ற மாநிலங்களில் இதற்கான டெண்டர் விடும் பணிகள் தொடங்கி இருக்கின்றன.
சென்னை பெரிபெரல் ரிங் ரோடு: காட்டுப்பள்ளி துறைமுகத்தில் தொடங்கி மாமல்லபுரம் வரை இணைக்கக்கூடிய வகையில் பெரிபெரல் ரிங் ரோடு என்பது கட்டமைக்கப்பட்ட வருகிறது. பனப்பாக்கம் ,தாமரைப்பாக்கம், திருவள்ளூர் ,ஸ்ரீபெரும்புதூர் ,ஒரகடம், சிங்கப்பெருமாள் கோயில் என சென்னையில் உற்பத்தி ஆலைகள் அமைந்திருக்கக்கூடிய அனைத்து பகுதிகளையும் இணைக்கக்கூடிய வகையில் இந்த சாலை திட்டமிடப்பட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
மதுரவாயல் - துறைமுகம்: சென்னை துறைமுகத்திலிருந்து மதுரவாயல் இடையே இரண்டடுக்கு மேம்பால பணிகள் நடந்து வருகின்றன. மதுரவாயிலில் இருந்து கோயம்பேடு வழியாக சென்னை துறைமுகத்தை அடையும் வகையில் இந்த சாலை கட்டமைக்கப்பட்டு வருகிறது. 2027 ஆம் ஆண்டுக்குள் இந்த பணிகள் முடிந்துவிடும் என அரசு எதிர்பார்க்கிறது.

மெட்ரோ ரயில் திட்ட பணிகள்: சென்னையில் ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் மெட்ரோ ரயில் சேவைகள் பயன்பாட்டில் இருக்கின்றன. இதனை மேலும் அரசு விரிவாக்கம் செய்ய இருக்கிறது. 116 கிலோ மீட்டர் தொலைவுக்கு 3 முக்கிய வழித்தடங்கள் அறிமுகம் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. மாதவரத்தில் இருந்து சிறுசேரி, மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர், பூந்தமல்லியில் இருந்து கலங்கரை விளக்கம் என மூன்று வழிதடங்களில் தற்போது கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை அடுத்து விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை, கோயம்பேடு முதல் ஆவடி, பூந்தமல்லியில் இருந்து பரந்தூர் புதிய விமான நிலையம் வரை என மேலும் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் கட்டமைப்பை விரிவாக்கம் செய்ய அரசு முடிவு செய்திருக்கிறது.
பரந்தூர் விமான நிலையம்: ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை உள்ளிட்ட தொழில் பூங்காக்களுக்கு அருகிலேயே சென்னையின் புதிய விமான நிலையம் அமைய இருக்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் பரந்தூர் விமான நிலையம் மற்றும் அதனை சுற்றி இருக்கக் கூடிய பகுதிகளில் பெரிய அளவிலான வளர்ச்சி இருக்கும் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே இந்த பகுதியில் தொழில் நிறுவனங்களும் ஆலைகளும் அதிகமாக உள்ளன, இது தவிர பெங்களூரு எக்ஸ்பிரஸ்வேயும் அமைய இருப்பதால் பிரம்மாண்ட வளர்ச்சிக்கான வாய்ப்புள்ளது.
இப்படி சாலை பணிகள், விமான நிலையம், மெட்ரோ பணிகள் என பல உள்கட்டமைப்பு பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. இவை அனைத்துமே சரக்கு போக்குவரத்தை எளிமையாக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளன என்பதால் அடுத்த 5முதல் 10 ஆண்டுகளில் இந்தியாவின் தொழில் மையமாக சென்னை மாற இருக்கிறது.
More From GoodReturns

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

துபாய் விமான நிலையத்தில் விபத்து..? எமிரேட்ஸ் சொன்ன குட் நியூஸ்..!! இந்தியர்கள் ஹேப்பி..!!

போயஸ்கார்டனே இனி நம்ம ஏரியா தான்!! லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பக்கா பிளான்!!

துபாயில் இருக்கும் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! ஏர்போர்ட் புறப்படும் முன் இதை செய்ய வேண்டும்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications