இந்தியாவின் முதல் குடிமகனான குடியரசு தலைவரை எவ்வாறு தேர்தெடுக்கின்றனர்? இந்த தேர்தல் எப்போது நடக்கும்? இதில் யாரெல்லாம் வாக்களிப்பார்கள்? இதில் ஏன் மக்கள் நேரிடையாக தேர்தெடுப்பதில்லை? உள்ளிட்ட சில முக்கியமானவற்றை பார்க்கலாம் வாருங்கள்.
இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவருக்கான தேர்தல் ஜூலை 18ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன் வாக்கு எண்ணிக்கையானது ஜூலை 21 அன்று நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவி காலம் முடிவு
குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24வுடன் முடிவடையவுள்ள நிலையில், அடுத்த புதிய குடியரசு தலைவருக்கான தேர்தல் நடத்தப்படவுள்ளது.
உலகின் மிகப்பெரிய ஜன நாயக நாட்டின் முதல் குடிமகனை மக்கள் ஏன் நேரடியாக தேர்தெடுப்பதில்லை என்று என்றேனும் யோசித்துள்ளீர்களா? உண்மை தான் மக்கள் நேரடியாக தேர்தெடுப்பதில்லை தான். ஆனால் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தான் குடியரசு தலைவரை தேர்தெடுக்கின்றனர்.
யாரெல்லாம் தேர்தெடுக்கலாம்?
பொதுவாக இந்திய குடியரசு தலைவர் தேர்தலில் மாநில சட்டபேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற மக்களை உறுப்பினர்கள், மாநிலங்களை உறுப்பினர்கள் வாக்குகளிக்க தகுதியானவர்களாவர். இவர்களுடன் டெல்லி மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களின் தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் குடியரசு தலைவர் தேர்தெடுக்கும் உறுப்பினர்களாவர்.
எத்தனை பேர்?
எம்பி - க்கள் - (மக்களை) - 543 பேர்
எம்பி - க்கள் - ( மாநிலங்களவை) - 233 பேர்
எம் எல் ஏ-க்கள் - 4033 பேர்
ஆக ஒட்டுமொத்தம் எம் எல் ஏ-க்கள் மற்றும் எம்பிக்களின் எண்ணிக்கை 4809 பேராகும்.
மொத்த ஓட்டுக்களின் எண்ணிக்கையானது 10,86,431 ஆகும்.
எம் எல் ஏ-க்களின் வாக்கு பதிவு?
தேர்தலில் எம் எல் ஏ-க்களின் வாக்குககுக்கான மதிப்பானது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும்.
ஒரு மாநிலத்தின் மக்கள் தொகையை, அந்த மாநில எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கையால் வகுக்க வேண்டும். அதில் வரும் விடையினை 1000ல் வகுத்தால் வரும் எண் தான், ஒரு எம் எல் ஏவின் வாக்கு மதிப்பாக கணக்கிடப்படுகின்றது.
மாநிலத்தின் மக்கள் தொகை/ மாநில எம் எல் ஏ-க்களின் எண்ணிக்கை*1000
இது மாநிலத்திற்கு மாநிலம் மாறும்.
எம்பி -க்களின் வாக்கு மதிப்பு?
எம்-பிக்களின் வாக்கு மாநிலத்துக்கு மாநிலம் மாறாது.
எம்பி-க்களின் வாக்கு மதிப்பு = ஒட்டுமொத்த எம் எல் ஏ-க்களின் எண்ணிக்கை/ஒட்டுமொத்த எம்பி-க்களின் எண்ணிக்கை
எம்பி-க்களின் வாக்கு மதிப்பு * மொத்த எம்பிக்கள் வாக்குமதிப்பு = ஒட்டுமொத்த எம்பி-க்களின் வாக்கு மதிப்பு
மொத்த வாக்கு மதிப்பு
மொத்த வாக்கு மதிப்பு = எம் எல் ஏ-க்களின் வாக்கு மதிப்பு + எம்பி-க்களின் வாக்கு மதிப்பு
யார் தகுதியானவர்?
குடியரசு தேர்தலில் நிற்க ஒரு இந்திய குடி மகனாக இருக்க வேண்டும். இவர்களின் வயது கட்டாயம் 35 வயது முடிந்திருக்க வேண்டும். எந்த அரசு மற்றும் அரசு சார்ந்த எந்த நிறுவனங்களிலும் பணிபுரியக் கூடாது. மக்களவை உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பதற்குரிய தகுதியுடையவாராக இருக்க வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications