20 ஆண்டுகளாக கட்டி எழுப்பப்பட்ட ஐடி நிறுவனம்.. தட்டி தூக்கிய எல்&டி நிறுவனம்..

தற்போது இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமாக இருந்து வருகிறது எல்டிஐ மைன்ட் டிரீ நிறுவனம். எல்&டி என்றாலே கட்டுமான மற்றும் பொறியியல் பணிகளுக்கும் நாட்டின் உள்கட்டமைப்பு பணிகளுக்கும் பெயர் போன நிறுவனம் என்பது தான் நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் தங்களுடைய அடையாளத்தை மாற்றிக்கொள்வதற்காக எல்&டி நிறுவனம் ஐடி துறையிலும் கால் பதிக்க விரும்பியது.

ஐடியில் கால்பதிக்க விருப்பம்: ஏற்கனவே ஐடித்துறையில் கால் பதித்து படிப்படியாக வளர்ச்சி அடைந்து வந்த நிறுவனத்தை மிகச் சரியாகத் திட்டமிட்டு தட்டி தூக்கியது எல்&டி. எல்&டி நிறுவனம் ஐடி துறையில் கால் பதித்தது 2019 ஆம் ஆண்டு தான். இந்தியாவின் மிகப்பெரிய பொறியியல் மற்றும் கட்டுமான நிறுவனமாக இருந்த எல்&டி ஐடி துறையில் நுழைய முடிவு செய்தது. ஆனால் இந்த நிறுவனத்தை சேர்ந்தவர்களுக்கு ஐ டி துறையில் பெரிய அளவில் அனுபவம் கிடையாது .எனவே ஆரம்பத்திலிருந்து ஒரு நிறுவனத்தை தொடங்குவது என்பது இவர்களுக்கு சரிப்பட்டு வராது என்பதால் ஏற்கனவே இதில் வளர்ந்து வரக்கூடிய ஒரு நிறுவனத்தை கையகப்படுத்தலாம் என திட்டம் தீட்டியது.

20 ஆண்டுகளாக கட்டி எழுப்பப்பட்ட ஐடி நிறுவனம்.. தட்டி தூக்கிய எல்&டி நிறுவனம்..

4 நண்பர்கள் தொடங்கிய மைண்ட் டிரீ: அப்பொழுதுதான் மைண்ட் டிரீ என்ற ஒரு நிறுவனம் படிப்படியாக ஐடி துறையில் வளர்ச்சி அடைந்தது எல்&டி கவனத்திற்கு சென்றது. 1999 ஆம் ஆண்டு கிருஷ்ணகுமார் நடராஜன் , ராஸ்டோ ராவணன், சுப்ரதோ பாக்சி, பார்த்தசாரதி ஆகிய நான்கு நண்பர்கள் இணைந்து மைண்ட் ட்ரீ என்ற ஒரு ஐடி சேவை நிறுவனத்தை தொடங்கினார்கள். சிறிய அளவில் தொடங்கப்பட்டு படிப்படியாக வளர்ந்தது. நிறுவனத்தை தொடங்கிய நான்கு நண்பர்களுமே தங்கள் வசம் 13. 3% பங்குகளையும் மீதமிருந்த பங்குகளை முதலீட்டு நிறுவனங்களும் வைத்திருந்தன.

சரியாக திட்டமிட்டு நடத்து காட்டிய எல்&டி: இந்த சூழலில் எல்&டி நிறுவனத்தில் அதிகளவு பங்கு வைத்திருந்த காஃபி டே நிறுவன உரிமையாளர் சித்தார்த்தாவுக்கு மிகப்பெரிய கடன் பிரச்சனை ஏற்பட்டது . தன்னுடைய கடனை தீர்ப்பதற்காக மைண்ட் ட்ரீ நிறுவனத்தில் தன் வசம் இருந்த 20 சதவீத பங்குகளை விற்பனை செய்வதாக அவர் அறிவித்தார் .இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டது எல்&டி நிறுவனம். 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எல்&டி நிறுவனம் சித்தார்த்தாவிடமிருந்து 20 சதவீத பங்குகளையும் 3000 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது . இதன் மூலம் மைண்ட் டிரீ நிறுவனத்தில் அதிக பங்குகளை கொண்டிருக்கும் ஒரு பங்குதாரராக எல்&டி மாறியது.

20 ஆண்டுகளாக கட்டி எழுப்பப்பட்ட ஐடி நிறுவனம்.. தட்டி தூக்கிய எல்&டி நிறுவனம்..

3 மாதங்களில் வாங்கியது: இதன் பிறகுதான் எல்&டி நிறுவனம் பங்குச்சந்தையில் மைண்ட் டிரீ நிறுவனத்தின் பங்குகளை படிப்படியாக வாங்க தொடங்கியது. இந்த முயற்சியை எதிர்த்து மைண்ட் ட்ரீ நிறுவனர்கள் போராடினர். ஆனால் எல்&டி தான் வென்றது. 2019 ஜூன் மாதம் எல்&டி நிறுவனம் மைண்ட் டிரீ நிறுவனத்தின் 60 சதவீத பங்குகளை தனக்கு சொந்தமானதாக மாற்றி இருந்தது. நிறுவனத்தை தொடங்கிய கிருஷ்ணகுமார் நடராஜன், ராவணன், சுப்ரதோ பாக்சி , பார்த்தசாரதி ஆகிய நான்கு பேரும் நிறுவனத்தை விட்டு வெளியேறினார். கிட்டதட்ட 20 ஆண்டு காலமாக தாங்கள் கட்டி எழுப்பிய கோட்டையை எல்&டி இடம் ஒப்படைத்து விட்டு அவர்கள் கனத்த இதயத்துடன் வெளியேறும் சூழல் உண்டானது.

2019ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்த கையகப்படுத்தலை ஆங்கிலத்தில் Hostile take-over என அழைக்கின்றனர். அதாவது ஒரு நிறுவனத்தை நிறுவியவர்களின் அனுமதி இல்லாமல் வலுக்கட்டாயமாக அவர்களிடம் இருந்து பறிப்பது என அர்த்தம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+