ஆதார் கார்டு நம் நாட்டில் மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. எதற்கெடுத்தாலும் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டை தான் அதிகாரிகள் கேட்கின்றனர். அரசாங்க மானியங்கள், சலுகைகள் என பலவற்றுக்கும் ஆதார் கார்டு இன்றியமையாததாக மாறிவிட்டது. இந்நிலையில் பலருக்கும் ஒரு கேள்வி எழலாம். அது என்னவென்றால் ஒரே ஒரு மொபைல் நம்பரை வைத்து எத்தனை ஆதார் கார்டுகளை இணைக்கலாம்? அதே வேலை ஒரு ஆதார் கார்டுக்கு எத்தனை ஆதார் நம்பரை இணைக்கலாம்? என்று.. இதற்கான பதிலை இந்த பதிவில் பார்ப்போம்.
ஒரே ஒரு மொபைல் நம்பரை எத்தனை ஆதார் கார்டுடன் இணைக்கலாம்?: இதற்கு எந்தவித வரம்பையும் UIDAI வைக்கவில்லை. அதாவது ஒரே ஒரு மொபைல் நம்பரை குடும்ப உறுப்பினர்கள் எத்தனை பேர் வேண்டுமானாலும் இணைத்துக் கொள்ளலாம். ஆனால் இதில் இருக்கும் சிக்கல் என்னவென்றால் ஒரே ஒரு நம்பரை வைத்து OTP பெறுவது தான். சில சேவைகளை பெறுவதற்கு OTP விவரங்கள் தேவைப்படும்.

OTP விவரங்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் பயன்படுத்த வேண்டும். அப்படி இல்லை என்றால் அந்த OTP எக்ஸ்பைரி ஆகிவிடும். உதாரணமாக ஒருவருடைய நம்பரை மற்றொருவரும் ஆதார் கார்டில் இணைத்து இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த சிம் கார்ட் OTP பெறுபவரிடம் இருந்தால் எந்தவித பிரச்சனையும் இல்லை. அதுவே வேறு ஒருவரிடம் இருந்து OTP பெற்று அதனை தொலைபேசியில் கேட்டு பயன்படுத்த வேண்டும் எனும் பட்சத்தில் சில சிக்கல்கள் எழலாம்.
ஒரு ஆதார் கார்டுடன் எத்தனை மொபைல் நம்பரை இணைக்கலாம்?: சிலருக்கு என்னிடம் 2 மொபைல் நம்பர்கள் உள்ளன. இரண்டையும் ஆதார் கார்டுடன் சேர்க்கலாமா? என்ற குழப்பம் வரும். அப்படி செய்ய முடியாது. ஒரு ஆதார் கார்டுக்கு ஒரே ஒரு நம்பரை மட்டும்தான் இணைக்க முடியும். எந்தவித சேவையை பெற வேண்டும் என்றாலும் அந்த ஒரு நம்பருக்கு தான் OTP அனுப்பப்படும். உங்களிடம் 2 சிம் கார்டுகள் இருந்தாலும்.. அதில் ஏதேனும் ஒன்றைத்தான் ஆதாருடன் இணைத்து பயன்படுத்த முடியும்.
ஆனால் நீங்கள் தற்போது ஆதாருடன் இணைத்திருக்கும் நம்பர் ஏதேனும் பிரச்சினை காரணமாக நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால் அதற்கு பதிலாக வேறொரு நம்பரை இணைத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரே ஒரு ஆதார் கார்டுக்கு ஒரே ஒரு நம்பர் தான். 10 வருடங்களுக்கு ஒரு முறை ஆதார் கார்டு விவரங்களை புதுப்பித்துக் கொள்ளுமாறு UIDAI பரிந்துரைக்கிறது.
இதற்கான முக்கிய காரணம் சிலர் வீடு மாறி இருப்பார்கள், சிலர் திருமணம் ஆகி தங்கள் கணவரின் பெயரை பயன்படுத்த தொடங்கி இருப்பார்கள், இப்படி சில சூழ்நிலைகளில் ஆதார் கார்டு தகவல்களில் மாற்றம் செய்யப்பட வேண்டும். உங்கள் ஆதார் கார்டு, பான் கார்டு, ஓட்டர் ஐடி போன்ற அரசாங்க ஆவணங்களில் அனைத்து தகவல்களும் துல்லியமானதாக இருக்க வேண்டும். அப்படி இல்லை எனும் பட்சத்தில் இ-கேஒய்சி செயல்முறை செய்வதில் சிக்கல்கள் எழலாம். இதன் காரணமாக வங்கிகளில் உங்களுடைய அக்கவுண்ட் பிளாக் செய்யப்படுவதற்கும் வாய்ப்புள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications