பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு, டொனால்டு டிரம்பின் முதல் ஆட்சிக் காலத்தில் (2017-2021), அமெரிக்காவுக்கு வரும் ஸ்டீல் மற்றும் அலுமினியம் விதிக்கப்பட்ட வரிகளுக்கு பதிலடியாக இந்தியா அமெரிக்க பொருட்களுக்கு பழிவாங்கும் விதமாக எதிர்த்து வரிகளை விதித்தது. இந்த நடவடிக்கை, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளில் பதற்றத்தை உருவாக்கியது.
இதேபோல் டிரம்ப்-ன் 2வது ஆட்சியில் தற்போது இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் பொருட்களுக்கு சுமார் 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டு உள்ளது. டிரம்ப் 60க்கும் அதிகமான நாடுகளில் வரியை விதித்திருக்கும் வேளையில் இந்தியா - பிரேசில் ஆகிய நாடுகளுக்கு தான் அதிகப்படியாக 50 சதவீத வரி விதிக்கப்பட்டு உள்ளது.

இன்று காலை பிரதமர் மோடி இந்திய விவசாயிகள் நலன் தான் முக்கியம் என வெளிப்படையாகவும், அழுத்தமாகவும் தெரிவித்துள்ள வேளையிலும், மத்திய வெளியுறவு துறையும் அமெரிக்காவின் வரி விதிப்புக்கு சரியான நடவடிக்கைகளை எடுக்கும் என அறிவித்துள்ளது. இதனால் இந்திய அரசின் அடுத்தடுத்து நடவடிக்கை மிகவும் முக்கியமாக உள்ளது. மேலும் இதன் மூலம் இந்திய-அமெரிக்க வர்த்தக உறவின் எதிர்காலம் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
டிரம்ப்-ன் முதல் ஆட்சி
2018 ஆம் ஆண்டு, டிரம்ப் நிர்வாகம் தேசிய பாதுகாப்பு காரணங்களை கூறி, அமெரிக்க வர்த்தக விரிவாக்கச் சட்டம் பிரிவு 232-ன் கீழ் எஃகு இறக்குமதிக்கு 25% மற்றும் அலுமினியத்திற்கு 10% வரி விதித்தது. இந்த முடிவு, உலகளாவிய வர்த்தகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மற்றும் இந்தியாவைப் போன்ற நாடுகளுக்கு பொருளாதார அழுத்தத்தை உருவாக்கியது.
இதற்கு பதிலடியாக, இந்தியா அமெரிக்காவிடம் இருந்து வரும் பல்வேறு பொருட்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வரிகளை விதிக்க முடிவு செய்தது, இது இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை சிக்கலாக்கியது.
இந்தியாவின் பதிலடி
இந்தியா, அமெரிக்காவின் 28 பொருட்களுக்கு பதிலடி வரிகளை விதித்தது, இதில் பாதாம், வால்நட்ஸ் போன்ற விவசாய பொருட்கள் அடங்கும். இந்த வரி நடவடிக்கை, அமெரிக்காவின் வரி உயர்வுக்கு எதிராக இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது.
அதே நேரத்தில், பேச்சுவார்த்தைகளின் போது, அமெரிக்கா இந்தியாவில் ஹார்லி-டேவிட்சன் மோட்டார் சைக்கிள்கள், பொர்ஃபன் விஸ்கி, பால் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு சந்தை அணுகலை அதிகரிக்க விரும்பியது. ஆனால், இந்தியா தனது உள்நாட்டு விவசாயத் துறையை பாதுகாக்கும் நோக்கத்தில் இதற்கு மறுப்பு தெரிவித்து, இதேவேளையில் சில இறக்குமதி கடன்களை குறைத்தது.
2018-ல், முழுமையாக இறக்குமதி செய்யப்படும் மோட்டார் சைக்கிள்களுக்கு விதித்திருந்த 100% இலிருந்து 50% க்கு குறைக்கப்பட்டது, மேலும் செயற்கைகோள் தரைத்தள கட்டமைப்புகள், சிந்தடிக் ப்ளேவரிங் எசன்ஸ் மற்றும் மீன் ஹைட்ரோலைசேட் போன்ற பொருட்களுக்கும் வரி குறைப்பு அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இரு நாடுகள் மத்தியிலான வர்த்தக பதற்றம் குறைந்தது.
டிரம்ப் 2வது ஆட்சி காலம்
ஆனால் டிரம்ப் தனது இரண்டாவது ஆட்சிக் காலத்தில் ஆரம்பம் முதல் இந்தியா மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். ஏற்கனவே ரெசிப்ரோக்கல் வரி என 25 சதவீத வரி விதித்திருந்த நிலையில், இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் வர்த்தகத்தை காரணம் காட்டி கூடுதலாக 25 சதவீதம் என மொத்தம் 50 சதவீத வரிகளை அறிவித்துள்ளார்.
இந்தியா இந்த வரிகளை "நியாயமற்ற, சரியற்ற மற்றும் காரணமற்ற" என்று கண்டித்து, தனது தேசிய நலன்களை பாதுகாக்க அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முடிவு, இந்திய-அமெரிக்க வர்த்தக உறவுகளில் புதிய சவால்களை உருவாக்கியுள்ளது.
பொருளாதார மற்றும் உலகளாவிய தாக்கம்
டிரம்பின் முதல் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் பதிலடி வரி நடவடிக்கைகள், உள்ளூர் பொருளாதாரத்தை பாதுகாக்கும் நோக்கத்தில் எடுக்கப்பட்டன, ஆனால் அது இரு நாடுகள் மத்தியிலான பரஸ்பர வர்த்தக உடன்பாட்டை எட்டுவதில் தடையாக அமைந்தது.
இப்போது, 2025 ஆம் ஆண்டு சூழலில், 50% வரி உயர்வு இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் அழுத்தத்தை தருகிறது. இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு, உள்நாட்டு விவசாயிகளை பாதுகாக்கும் முயற்சியாக இருக்கிறது. ஆனால் இந்தியாவுக்கு அமெரிக்கா முக்கிய வர்த்தக நாடாக இருக்கும் காரணத்தால் தற்போதை வர்த்தக பாதிப்பு அதிகமாக உள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு? செய்தியாளர்களிடம் உண்மையை போட்டுடைத்த டிரம்ப்

ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா? வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் டிவிஸ்ட்!!

ரஷ்யாவின் மாஸ்டர் பிளான்! 40% தள்ளுபடியில் காஸ்.. இந்தியா, வங்கதேசத்துக்கு ஜாக்பாட்!அமெரிக்கா ஷாக்!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?



Click it and Unblock the Notifications