என்னதான் UPI பேமெண்ட் தளங்கள் தற்போது அதிகரித்துவிட்டாலும் வங்கிகளில் இருந்து அவ்வப்போது பணம் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். உங்கள் வங்கி கணக்கிலிருந்து எந்தவித இடையூறும் இல்லாமல் பணம் எடுக்க வேண்டுமானால்.. பணம் எடுப்பதற்கான விதிமுறைகள் மற்றும் வரம்புகளை பற்றி தெரிந்து கொள்வது அவசியம். திடீர் செலவு அல்லது வேறு விஷயத்திற்காக பணம் எடுத்தல் என எதுவாக இருந்தாலும் வங்கிகளின் வழிகாட்டுதல்களை அறிந்து கொள்வது உங்கள் பரிவர்த்தனையை எளிதாகவும் எந்தவித சிக்கலும் இல்லாமலும் செய்வதற்கு உதவியாக இருக்கும். இந்தப் பதிவில் ஏடிஎம் மற்றும் வங்கியில் பணம் எடுப்பதற்கான வரம்புகள் என்ன? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.
பணம் எடுப்பதற்கான வரம்புகள்: வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுப்பதற்கு குறிப்பிட்ட வரம்புகள் உள்ளன.

ஏடிஎம்-களில் இருந்து பணம் எடுத்தல்: பொதுவாக, ஏடிஎம்-களில் பணம் எடுப்பதற்கு தினசரி வரம்பு இருக்கும். உதாரணமாக, ஒரு சில ஏடிஎம்மில் ஒரு நாளைக்கு ரூ.40,000 வரை பணம் எடுக்கலாம். மற்றும் சில ஏடிஎம்-களில் ரூ. 50,000 வரை பணம் எடுக்கலாம். உங்களுக்கு இதை விட அதிக பணம் தேவைப்பட்டால், நீங்கள் அடுத்த நாள் வரை காத்திருக்க வேண்டும்.
வங்கிகளில் பணம் எடுத்தல்: உங்களுக்கு உடனடியாக பெரிய தொகை தேவைப்பட்டால், உங்கள் வங்கிக் கிளைக்குச் செல்வது சிறந்த வழி. வெவ்வேறு வங்கிகளில் பணம் எடுப்பதற்கு வெவ்வேறு வரம்புகள் உள்ளன. சில வங்கிகளில் ரூ.1 லட்சம் வரை பணம் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்படுகின்றன. சில வங்கிகளில் ரூ. 5 லட்சம் வரை இருக்கலாம்.
அதிக தொகையை எடுக்கும்போது பிடித்தம் செய்யப்படும் வரி எவ்வளவு?:
ரூ.20 லட்சத்திற்கும் அதிகமான பணம் எடுத்தல்: நீங்கள் ரூ.20 லட்சத்திற்கும் அதிகமாக பணம் எடுக்கிறீர்கள் மற்றும் கடந்த 3 ஆண்டுகளுக்கான வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால், உங்களுக்கு TDS விதிக்கப்படும். டிடிஎஸ் விகிதம் ரூ.20 லட்சத்துக்கும் மேலான தொகைக்கு 2% மற்றும் ரூ.1 கோடி அல்லது அதற்கு மேல் எடுக்கப்படும் தொகைக்கு 5% விதிக்கப்படும்.
வரி தாக்கல் செய்துவிட்டு பணம் எடுத்தால் என்ன நடக்கும்?: நீங்கள் சரியான முறையில் வரி தாக்கல் செய்திருந்தால், TDS பிடித்தம் இல்லாமல் பணம் எடுக்கலாம்.
பணம் எடுத்தல் விதிமுறைகளைப் பற்றி தெரிந்துகொள்வது எதிர்பாராத இடையூறுகளிலிருந்து உங்களை காப்பாற்றும். உங்கள் வங்கியின் குறிப்பிட்ட வரம்புகளை எப்போதும் சரிபார்த்து, பெரிய தொகை எடுக்கும்போது உங்கள் ITR சரியாக தாக்கல் செய்யப்பட்டிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
More From GoodReturns

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications