வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் நீங்கள் வருமான வரி ஒழுங்குமுறைகள் படி எவ்வளவு பணம் டெபாசிட் அளவுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். மற்ற கணக்குகளைப் போலவே சேமிப்புக் கணக்கிலும் பணமாக டெபாசிட் கட்டுவதற்கு வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதிகாப்பூர்வ வழிகாட்டுதல்களின் படி உங்களது சேமிப்பு கணக்கில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் செலுத்த நேரிட்டால் அது வருமான வரி பிடித்தத்துக்கு உள்ளாகும். ஒரு குறிப்பிட்ட காலத்துக்கள் வரி விதிப்புக்கு ஆளாகாமல் அதிகபட்சமாக பணத்தை டெபாசிட் செய்வதற்கு வரம்பு உள்ளதாக வரித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணப்பரிவர்த்தனையை தடுப்பதற்காகவும் பணப்புழக்கத்தை முறைப்படுத்தவும் இதுபோன்ற வரம்புகள் நிர்ணயிக்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சத்தை உங்களது சேமிப்பு கணக்கில் ரொக்கமாக செலுத்தலாம். எப்போதாவது ஒரு முறை என்றால் இந்த வரம்பு ரூ.2.5 லட்சம் வரை அதிகரிக்கும்.
வருடாந்திர வரம்பின்படி ஒரு சேமிப்புக் கணக்கில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இதற்கு வருமான வரித்துறைக்கு எந்த வரியையும் செலுத்த வேண்டியதில்லை.
மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் வழிகாட்டுதல்களின் படி ஒரு நிதியாண்டில் ரூ.10 லட்சத்துக்கும் மேல் பணமாக டெபாசிட் செய்திருந்தால் அதுபற்றி வங்கிகள் தகவல் தரவேண்டும். வரிவிதிப்பானது உங்கள் சேமிப்புக் கணக்கில் உள்ள தொகை மீது வராது ஆனால் வங்கியிலிருந்து நீங்கள் பெறும் வட்டியின் மீது வரி விதிப்பு இருக்கும்.
வங்கியில் வாடிக்கையாளர்கள் பணத்தை வைத்திருப்பதற்காக வங்கிகள் குறிப்பிட்ட வட்டியை அளிக்கின்றன. இவ்வாறு வங்கியில் கிடைக்கும் வட்டியானது உங்களது வருமானவரி ரிட்டர்னில் லாபமாகக் குறிப்பிடப் படும்.
இருப்பினும் அதற்கு ஒரு அளவு உள்ளது. வங்கி டெபாசிட்கள் மூலம் ரூ.10,000க்கு மேல் வட்டி வந்தால் அது வரிவிதிப்புக்கு ஆளாகும். பொதுவாக ரூ.49999 வரை பணமாக சேமிப்புக் கணக்கில் டெபாசிட் செய்யும்போது உங்களது பான் எண் தேவையிருக்காது.
ஆனால் 50000 அல்லது அதற்குமேல் டெபாசிட் செய்யும்போது உங்களது பான் கார்டு எண்ணை வங்கிக்குத் தெரிவிக்க வேண்டும். அதைவைத்து வருடாந்திர டெபாசிட் கண்காணிக்கப்பட்டு அது ரூ.10 லட்சத்தைத் தாண்டினால் வரிவிதிப்புக்காக வருமானவரி துறைக்கு வங்கிகள் தெரியப்படுத்தும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications