பிரபல அமேசான் நிறுவனம், செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் தன்னுடைய திட்டங்களை வேகமாக முன்னெடுத்து வருகிறது. 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அமேசான் நிறுவனம் 11,300 வெளிநாட்டு பணியாளர்களை ஏஐ தொடர்பான வேலைகளுக்கு பணியமர்த்தியுள்ளது. இந்த ஏஐ துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.1.59 கோடி முதல் ரூ.2.27 கோடி வரை சம்பளம் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அவர்களுக்கு கூடுதலாக சலுகைகள் மற்றும் பங்குத்தொகைகள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, கடந்த ஜூன் மாதம் அமேசான் CEO ஆண்டி ஜாஸி கூறுகையில், "சில துணை நிறுவனங்களின் ஊழியர்கள், பதவி உயர்வுக்காக விண்ணப்பிக்கும்போது, தாங்கள் ஏஐ-யை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கட்டாயம் விளக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். ஏஐ துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்புகளின் எண்ணிக்கையில், அமேசான் தற்போது மெட்டா, கூகுள் மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களை விட மூன்று மடங்கு முன்னிலையில் உள்ளது. இது, அமேசானின் ஏஐ-க்கு திறமையான தொழில்நுட்ப நிபுணர்களை உலகம் முழுவதும் தேடும் முயற்சிக்கும் ஒரு முக்கிய எடுத்துக்காட்டாக உள்ளது.

அமேசான் நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு, மென்பொருள் மேம்பாடு மற்றும் தகவல் விஞ்ஞானம் போன்ற துறைகளில் பணிபுரியும் தொழில்நுட்ப நிபுணர்களுக்கு மிகவும் உயர்ந்த சம்பளங்கள் வழங்கப்படுவதாக Business Insider வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அமேசான் வெப் சர்வீஸ் (AWS)-ல் பணிபுரியும் மென்பொருள் பொறியாளர்களுக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.59 கோடி சம்பளம் வழங்கப்படுகிறது.
Amazon.com-இல் மென்பொருள் மேம்பாட்டு பொறியாளர்களுக்கு சுமார் ரூ.2.27 கோடியும், Data Scientists மற்றும் நிதி ஆய்வாளர்களுக்கு ரூ.1.76 கோடி முதல் ரூ.1.99 கோடி வரையும் சம்பளம் வழங்கப்படுகிறது. அதேபோல், தொழில்நுட்ப தயாரிப்பு மேலாளர்களுக்கு சுமார் ரூ.2.02 கோடி ஆண்டு சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. சம்பளம் மட்டுமின்றி அவர்களுக்கு அலவன்ஸ்கள், பங்கு விருப்பங்கள் (stock options), இன்சூரன்ஸ் போன்ற கூடுதல் சலுகைகளும் உண்டு.
அமேசான் நிறுவனம், தனது தொழில்நுட்ப வளர்ச்சியை வலுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் சிறந்த நிபுணர்களை, குறிப்பாக செயற்கை நுண்ணறிவு துறையில், உயர்ந்த சம்பளத்தில் நியமிக்கிறது. இது போன்ற வேலைவாய்ப்புகள், குறிப்பாக H-1B விசா மூலம் அமெரிக்காவில் வேலை தேடுபவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக உள்ளது.
இதுதொடர்பாக அமேசான் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பேச்சாளர் கூறுகையில், "பணியாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் பணியின் வகை, பதவி நிலை, பணியாளர் இருப்பிடம், அவர்களின் வேலை திறன் மற்றும் பல்வேறு காரணிகள் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த சம்பளம் பணியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக உள்ளது. இதனால், நிறுவனத்திற்கு திறமையான ஆட்கள் சேர முடிகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications