பல ஊழியர்களும் கிராஜுவிட்டி என்ற வார்த்தையை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் அதன் முழு விளக்கம் மற்றும் அது எப்படி கால்குலேட் செய்யப்படுகிறது என்ற விபரங்கள் குறித்து தெரியாமல் இருப்பீர்கள். உங்களுக்காகத்தான் இந்த பதிவு. இன்று கிராஜுவிட்டி என்றால் என்ன? மற்றும் ரூ.50,000 சம்பளம் பெறும் ஒருவர் 9 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நிறுவனத்தில் இருந்து வெளியேறினால் கிராஜுவிட்டி எவ்வளவு கிடைக்கும் என்ற விவரங்கள் குறித்து பார்ப்போம்.
கிராஜுவிட்டி என்றால் என்ன?: கிராஜுவிட்டி என்பது ஒரு நிறுவனத்தில் தொடர்ந்து நீண்ட காலமாக பணி புரியும் ஊழியர்களை கௌரவிக்கும் விதமாக நிறுவனம் வழங்கும் தொகையாகும். ஒரு நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர் 5 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியேறும் போது அவர்களுக்கு கொடுக்கப்படும் தொகையே கிராஜுவிட்டி தொகை என்று கூறப்படுகிறது. அரசு ஊழியர் ஆனாலும் சரி.. தனியார் ஊழியர் ஆனாலும் சரி ஒரே மாதிரியாகத்தான் கிராஜுவிட்டி கணக்கிடப்பட்டு வழங்கப்படும்.

கிராஜுவிட்டி பெற யார் தகுதியுடையவர்கள்?: ஒரு நபர் 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஒரு நிறுவனத்தில் பணியாற்றி இருந்தால் அவர் கிராஜுவிட்டி பெற தகுதியுடையவர். ராஜினாமா அல்லது விருப்ப ஓய்வு பெற்றதன் காரணமாக நிறுவனத்தை விட்டு வெளியேறுபவர்களும் கிராஜுவிட்டி தொகையை பெறுவதற்கு தகுதியுடையவர்கள் ஆவார்கள். இறப்பு அல்லது ஊனமுற்ற சந்தர்ப்பங்களில் ஐந்தாண்டு சேவை பெற்ற ஊழியர்கள் அல்லது அதற்கு குறைவாக வேலை செய்த ஊழியர்களால் பரிந்துரைக்கப்பட்டவர்கள் கிராஜுவிட்டி பலனைக் கோரலாம்.
கிராஜுவிட்டி வழங்க வேண்டிய நிறுவனங்கள்: கிராஜுவிட்டி சட்டத்தின் கீழ் தொழிற்சாலைகள், சுரங்கங்கள், ஆயில் மில்கள், தோட்டங்கள், துறைமுகங்கள், ரயில்வே போன்ற நிறுவனங்கள் மற்றும் 10 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் பணி புரியும் எந்த நிறுவனமாக இருந்தாலும் அங்கு ஊழியர்களுக்கு கிராஜுவிட்டி கொடுக்க வேண்டியது கட்டாயமாகும்.
எவ்வாறு கணக்கிடப்படுகிறது?: இதனை மிக எளிமையாக கணக்கிடலாம். உங்களுடைய அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி ஆகியவற்றை சேர்ப்பதன் மூலம் நீங்கள் எளிதாக கிராஜுவிட்டியை கணக்கிடலாம். கிராஜுவிட்டியைக் கணக்கிட ஒரு ஃபார்முலா பயன்படுத்தப்படுகிறது.
கிராஜுவிட்டி = அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி x (15/26) x (நீங்கள் நிறுவனத்தில் வேலை பார்த்த ஆண்டுகளின் எண்ணிக்கை).
இதற்கு ஒரு உதாரணத்தை பார்ப்போம். ஒருவர் 9 வருடமாக ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் கடைசியாக பெற்ற சம்பளம் 50,000 எனில்,
கிராஜுவிட்டி தொகை = 50,000 x (15/26) x 9 = ரூ. 2,59,615.38-ஆக இருக்கும்.
ஒரு ஊழியரின் விசுவாசத்தை அங்கீகரித்து நிறுவனத்தால் கிராஜுவிட்டி தொகை வழங்கப்படுகிறது. ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் ஓய்வு பெறும்போது அல்லது நிறுவனத்தில் இருந்து ரிசைன் செய்யும்போது நிதி பாதுகாப்பாக இந்த தொகை விளங்குகிறது. அதுமட்டுமின்றி ஒரு நிறுவனத்தை பொறுத்தவரையில் ஊழியர்களின் அர்ப்பணிப்புக்கு ரிவார்டு கிடைக்கும் என்பதை அறிந்து ஊழியர்களை நீண்ட காலம் பணிபுரிவதற்கு இந்த கிராஜுவிட்டி தொகை ஊக்குவிக்கும்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications