கொரோனா காலத்தில் தொடங்கியதை இன்னும் கடைபிடிக்கும் முகேஷ் அம்பானி! ரிலையன்ஸ் வெளியிட்ட சுவாரஸ்ய தகவல்

மும்பை: முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரி லிமிடெட் குழுமத்தின் தலைவராகவும் மேலாண் இயக்குனராகவும் செயல்பட்டு வருகிறார். இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராகவும் இவர் திகழ்ந்து வருகிறார்.

நிதி அறிக்கை: 2025 ஆம் நிதியாண்டில் ரிலையன்ஸ் குழுமம் முகேஷ் அம்பானிக்கு எவ்வளவு சம்பளம் வழங்கியது என்பது குறித்த சுவாரசியமான தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் 2025ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இந்த நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் தலைவர்களுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

கொரோனா காலத்தில் தொடங்கியதை இன்னும் கடைபிடிக்கும் முகேஷ் அம்பானி! ரிலையன்ஸ் வெளியிட்ட சுவாரஸ்ய தகவல்

முகேஷ் அம்பானி சம்பளம் எவ்வளவு: முகேஷ் அம்பானி 2025 ஆம் நிதி ஆண்டில் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து எந்த ஒரு சம்பளமும் பெறவில்லை என்பது இந்த நிதி அறிக்கை மூலம் வெளிவந்திருக்கிறது. 2021 ஆம் நிதி ஆண்டில் முகேஷ் அம்பானி கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டபோது தனக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வழங்க வேண்டிய சம்பளத்தை வேண்டாம் என மறுத்தார்.

கொரோனா காலம்: சம்பளம் மற்றும் அத்துடன் வரக்கூடிய எந்த ஒரு அலோவென்ஸ் மற்றும் நிதியும் எனக்கு வேண்டாம் என கூறி சம்பளம் பெறுவதை தவிர்த்தார். 2021 ஆம் நிதி ஆண்டில் தொடங்கிய அந்த நடைமுறையை தொடர்ந்து தற்போது வரை 2025 ஆம் ஆண்டு என தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக அவர் பின்பற்றி வருகிறார் . அதாவது கடந்த 5 ஆண்டுகளாக ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து முகேஷ் அம்பானி எந்த ஒரு சம்பளமும் பெறுவதில்லை.

நம்பர் 1 பணக்காரர்: முன்னதாக 2020 ஆம் ஆண்டில் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனத்திலிருந்து 15 கோடி ரூபாயை சம்பளமாக பெற்று வந்தார் . கொரோனா தோற்று காலத்தில் நிறுவனத்தின் சூழலை கருத்தில் கொண்டு நான்ல் சம்பளம் பெறப்போவதில்லை என அறிவித்தார் அதனை தற்போதும் தொடர்ந்து வருகிறார். முகேஷ் அம்பானியை பொறுத்தவரை 103.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்பு கொண்ட நபராக இருக்கிறார். இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராகவும் உலக அளவில் பதினெட்டாவது பணக்காரராகவும் திகழ்ந்த வருகிறார்.

பிள்ளைகளுக்கு சம்பளம்: முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானி மகன்கள் ஆகாஷ் அம்பானி மற்றும் ஆனந்த் அம்பானி ஆகியோர் 2025 ஆம் நிதி ஆண்டில் 2.31 கோடி ரூபாயை ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து சம்பளமாக பெற்று இருக்கின்றனர். இவர்கள் மூன்று பேருமே ரிலையன்ஸ் குழுமத்தில் எக்சிகியூடிவ் இயக்குனர்களாக பணிபுரிந்து வருகின்றனர். கடந்த ஆண்டு 1 கோடி ரூபாய் சம்பளம் பெற்ற இவர்கள் இந்த ஆண்டு சம்பள உயர்வு பெற்றுள்ளனர்.

அதே வேளையில் நிறுவனத்தின் முக்கியமான எக்ஸிகியூடிவ் டைரக்டராக செயல்பட்டு வரக்கூடிய நிகில் ஆர் மேஸ்வானி மற்றும் ஹிடல் ஆர் மேஸ்வானி ஆகிய இருவரும் தலா 25 கோடி ரூபாய் சம்பளமாக பெற்று இருக்கின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+