சாமானிய மக்கள் முதல் வல்லரசு நாடுகளையும் பயமுறுத்தி வரும் இந்தக் கொடிய கொரோனா வைரஸ் பல ஆயிரம் உயிரை காவு வாங்கியதோடு உலக நாடுகளை மொத்தமாக முடங்கச் செய்துள்ளது.
Recommended Video
உலகம் முழுவதும் பரவி வரும் இந்தக் கொரோனா தடுக்கப் பல நாடுகள் பல முயற்சிகள் எடுத்து வந்தாலும் இன்னும் கொரோனாவை அழிக்க முழுமையான ஒரு மருத்து கண்டுபிடிக்க முடியவில்லை. இப்படியிருக்கும் சூழ்நிலை கொரோனா பாதிக்கப்பட்டால் அதற்கான சிகிச்சைக்கு எவ்வளவு செலவாகும் என்பதைத் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
தனியார் மருத்துவமனை
இந்தியா முழுவதும் கொரோனா பரவி வரும் நிலையில் நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது நிலையில் அரசு மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டோர் நிரம்பியுள்ளனர். அரசும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப் படுக்கை எண்ணிக்கையை அதிகரித்தாலும் தனியார் மருத்துவமனையின் அவசியம் தற்போது இருக்கிறது.
அரசு அறிவிப்பு
பொதுவாக இதுபோன்ற நோய்த் தொற்றுக்குச் சிகிச்சை அளிக்கத் தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு குறிப்பிட்ட கட்டணத்தில் அளவில் தான் சிகிச்சை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தும். ஆனால் தற்போது இதுகுறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில் தோராயமாக ஒரு மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலில் கொரோனா-விற்கான சிகிச்சை மற்றும் இதர செலவுகள் எவ்வளவு ஆகும் என்பதைத் தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம்.
மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்
ஒரு தனியார் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலில் கொரோனா-விற்கான சிகிச்சைக்கு ஜெனரல் வார்ட்டில் 11,000 ரூபாயும், ஐசியூ-வில் 50,000 ரூபாய் வரை ஆகும். இதுவே சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் என்றால் கட்டணம் இன்னும் அதிகம்.
15 நாள்
கொரோனா பாதிப்பு இருந்தால் 15 நாள் கண்டிப்பாக முழுச் சிகிச்சை மற்றும் கண்காணிப்பில் இருக்க வேண்டும். அப்படியானால் 15 நாளுக்கு ஜெனரல் வார்ட்டில் இருக்கும் ஒரு நபர் 1,65,000 ரூபாயும், ஐசியூ-வில் 7,50,000 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியிருக்கும்.
இதைத் தான் வென்டிலேட்டர் கட்டணம் தனி.
மக்கள்
ஒறு சாமானிய மக்களுக்கு இந்தக் கட்டணம் பெரிய நிதியியல் சுமையைக் கொடுக்கும் என்றால் மிகையல்ல. தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அதிகளவிலான கட்டணம் இருக்கும் நிலையில் அரசு இதை முறையாகக் கையாண்டு மக்களுக்குச் சரியான ஒரு பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.