சாமானிய மக்கள் முதல் வல்லரசு நாடுகளையும் பயமுறுத்தி வரும் இந்தக் கொடிய கொரோனா வைரஸ் பல ஆயிரம் உயிரை காவு வாங்கியதோடு உலக நாடுகளை மொத்தமாக முடங்கச் செய்துள்ளது.
Recommended Video
உலகம் முழுவதும் பரவி வரும் இந்தக் கொரோனா தடுக்கப் பல நாடுகள் பல முயற்சிகள் எடுத்து வந்தாலும் இன்னும் கொரோனாவை அழிக்க முழுமையான ஒரு மருத்து கண்டுபிடிக்க முடியவில்லை. இப்படியிருக்கும் சூழ்நிலை கொரோனா பாதிக்கப்பட்டால் அதற்கான சிகிச்சைக்கு எவ்வளவு செலவாகும் என்பதைத் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
தனியார் மருத்துவமனை
இந்தியா முழுவதும் கொரோனா பரவி வரும் நிலையில் நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது நிலையில் அரசு மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டோர் நிரம்பியுள்ளனர். அரசும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப் படுக்கை எண்ணிக்கையை அதிகரித்தாலும் தனியார் மருத்துவமனையின் அவசியம் தற்போது இருக்கிறது.
அரசு அறிவிப்பு
பொதுவாக இதுபோன்ற நோய்த் தொற்றுக்குச் சிகிச்சை அளிக்கத் தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு குறிப்பிட்ட கட்டணத்தில் அளவில் தான் சிகிச்சை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தும். ஆனால் தற்போது இதுகுறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில் தோராயமாக ஒரு மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலில் கொரோனா-விற்கான சிகிச்சை மற்றும் இதர செலவுகள் எவ்வளவு ஆகும் என்பதைத் தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம்.
மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்
ஒரு தனியார் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலில் கொரோனா-விற்கான சிகிச்சைக்கு ஜெனரல் வார்ட்டில் 11,000 ரூபாயும், ஐசியூ-வில் 50,000 ரூபாய் வரை ஆகும். இதுவே சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் என்றால் கட்டணம் இன்னும் அதிகம்.
15 நாள்
கொரோனா பாதிப்பு இருந்தால் 15 நாள் கண்டிப்பாக முழுச் சிகிச்சை மற்றும் கண்காணிப்பில் இருக்க வேண்டும். அப்படியானால் 15 நாளுக்கு ஜெனரல் வார்ட்டில் இருக்கும் ஒரு நபர் 1,65,000 ரூபாயும், ஐசியூ-வில் 7,50,000 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியிருக்கும்.
இதைத் தான் வென்டிலேட்டர் கட்டணம் தனி.
மக்கள்
ஒறு சாமானிய மக்களுக்கு இந்தக் கட்டணம் பெரிய நிதியியல் சுமையைக் கொடுக்கும் என்றால் மிகையல்ல. தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அதிகளவிலான கட்டணம் இருக்கும் நிலையில் அரசு இதை முறையாகக் கையாண்டு மக்களுக்குச் சரியான ஒரு பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications