ஏதாவது ஒரு பிஸ்னஸ் செய்து வருமானம் பார்க்க வேண்டும் என்பது தான் பலரது எண்ணம். ஆனால் பெரும்பாலான பிஸ்னஸ் ஐடியாக்கள் நாம் அன்றாடம் சென்று வரக்கூடிய இடங்களிலேயே கொட்டி கிடக்கின்றன என்பது தான் உண்மை. இதற்கு பெரிய முதலீடும் தேவையில்லை. அப்படி ஒரு ஐடியா தான் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
தனே தாகூர் என்பவர் ஒரு கண்டண்ட் கிரியேட்டர். இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை பதிவிட்டு லட்சக்கணக்கான ஃபாலோவர்களை கொண்டிருக்கிறார். அவர் அண்மையில் ரிஷிகேஷில் Social Experiment என்ற பெயரில் ஒரு வீடியோவை பதிவு செய்து வெளியிட்டுள்ளார். இது தான் நெட்டிசன்கள் மத்தியில் ஹாட் டாபிக்காக மாறி இருக்கிறது.

தனே தாகூர் ரிஷிகேஷுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு திலகம் இட்டு, வெறும் 3 மணி நேரத்தில் ரூ.2,350 சம்பாதித்துள்ளார். ரிஷிகேஷின் புகழ்பெற்ற கங்கை ஆரத்தி நடைபெறும் பகுதிக்கு சென்ற அவர் பாரம்பரியமான உடைகளை அணிந்துகொண்டு, சுற்றுலாப் பயணிகளை அணுகி அவர்களுக்கு திலகம் இடும் பணியில் ஈடுபடுவது அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பதிவாகியுள்ளது.
தொடக்கத்தில் அவர் திலகம் இட முற்பட்டபோது பலரும் அதை ஏற்கவில்லையாம். முதல் ஒரு மணி நேரத்தில் சுமார் 20 பேருக்கு மட்டுமே திலகம் வைக்க முடிந்ததாம், ஆனால் கங்கை ஆரத்தி தொடங்கும் நேரம் வந்ததும், மக்கள் கூட்டம் அதிகரித்ததாம், அப்போது பலர் தாங்களாகவே முன்வந்து திலகம் இட்டுக் கொண்டார்களாம். அதற்கு அவருக்கு அன்பளிப்பாக 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை வழங்கியுள்ளனர். வீடியோவை பார்ப்பதற்கான லிங்க்(https://www.instagram.com/reel/DZ2cqarqnoK/?igsh=cnlyMDJpOTRnN3Qy).
கங்கை ஆரத்தி முடிந்த 3 மணி நேரத்தில் சுமார் 400 பேருக்குத் திலகம் இட்டதன் மூலம் அவர் மொத்தம் ரூ.2,350 ஈட்டியதாக வீடியோவில் தெரிவித்துள்ளார். இதை வேலையாக செய்தால் மாதத்திற்கு ரூ.70,000 வரை சம்பாதிக்க முடியும் என தாகூர் கூறியுள்ளார். அவரது வீடியோ வைரலான நிலையில் பலரும் இது நல்ல பிஸ்னஸ் என்றும் , எங்களுக்கு இண்டர்ன்ஷிப் கிடைக்குமா என்றும் பதிவிட்டுள்ளார். சிலர் மத நம்பிக்கையைத் தொழிலாக மாற்றாதீர்கள் என்றும், இது போன்ற செயல்கள் புனிதமான இடங்களின் தன்மையைக் கெடுக்கின்றன என்றும் விமர்சனம் செய்துள்ளனர்.
ரிஷிகேஷ் மட்டுமல்ல இந்தியாவின் பல்வேறு புனித தலங்களிலும் ஏராளமானவர்கள் இதனை ஒரு வேலையாகவே செய்கின்றனர். திருச்செந்தூர் முருகன் கோயில் உள்பட பல்வேறு கோயில்களிலும் பக்தர்களுக்கு வேல், நாமம் உள்ளிட்டவற்றை திலகமாக இடுபவர்கள் இருக்கிறார்கள். இதற்கு ஏற்ப 10 ரூபாய் முதல் கட்டணமாக வசூல் செய்கின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

