ரத்தன் டாடா உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான இந்திய கோடீஸ்வரர்களில் ஒருவர். டாடா குழுமத்தின் தலைவரான ரத்தன் டாடா அவரது நன்கொடை நடவடிக்கைகளுக்காக அடிக்கடி செய்திகளில் இடம் பெறுவார். கடந்த இரண்டு ஆண்டுகளில், நாடு முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் ஆர்வத்தைப் பெற்ற ஒரு இளைஞருடன் ரத்தன் டாடா அடிக்கடி காணப்பட்டார்.
அந்த இளைஞர் பெயர் சாந்தனு நாயுடு. பில்லியனர் ரத்தன் டாடாவின் நெருங்கிய உதவியாளர்களில் ஒருவர். சாந்தனு நாயுடு ரத்தன் டாடாவின் பிறந்தநாளைக் கொண்டாடும் வீடியோ வைரலான பிறகு முதலில் பொது வெளியில் அறியப்பட்டார்.

அப்போதிருந்து, சாந்தனு நாயுடு தொழில்துறையில் பிரபலமாகிவிட்டார். ரத்தன் டாடா திருமணம் செய்து கொள்ளவில்லை. அவருக்குக் குழந்தைகள் இல்லை என்றாலும், அவர் சாந்தனுவை எப்போதும் தனது மகனைப் போலவே நடத்தினார்.
சாந்தனு நாயுடுவுக்கு 29 வயது, அவர் மே 2022 இல் ரத்தன் டாடாவிடம் பணியாற்றத் தொடங்கினார். சாந்தனு நாயுடு புனேவில் பிறந்து வளர்ந்தவர். 2014 ஆம் ஆண்டில் புனே பல்கலைக்கழகத்தில் இஞ்சினியரிங் பட்டப்படிப்பை முடித்தார்.
அதன் பின்னர் 2016 ஆம் ஆண்டில் கார்னல் ஜான்சன் கிராஜுவேட் ஸ்கூல் ஆப் மேனேஜ்மெண்டில் மாஸ்டர் இன் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் படித்தார். பட்டப்படிப்பு முடித்த பின்னர் டாடா எல்க்ஸி நிறுவனத்தில் ஆட்டோமொபைல் டிசைன் இஞ்சினியராக புனேவில் வேலைக்கு சேர்ந்தார்.
தான் சாலையைக் கடந்து வரும்போது ஏராளமான நாய்கள் வேகமாகச் செல்லும் வாகனங்களில் அடிபட்டு இறந்து கிடந்ததைப் பார்த்ததாக சாந்தனு நாயுடு கூறினார். இப்படி நாய்கள் வாகனங்களில் அடிபட்டு சாவதைத் தடுக்க சாந்தனு நாயுடு ஒரு நடவடிக்கையை எடுத்தார்.
அதன்படி நாய்களுக்கு காலர்களை தயாரித்து அணிவித்தார். இதனால் இரவில் கூட நாய்களைக் கண்டுகொள்ளும்படி அந்த காலர் ஒளிரும்படி அமைத்தார். தனது இந்த ஐடியாவுக்கு முதலீட்டு ஆதரவு கேட்டு சாந்தனு நாயுடு, ரத்தன் டாடாவுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
ஆச்சரியப்படும்வகையில் நாயுடுவை தன்னை வந்து சந்திக்கும் படியும் பிசினஸ் குறித்து பேசலாம் என்று பதில் அனுப்பினார்.
இரண்டு நாய் விரும்பிகளின் சந்திப்பு நாயுடுவுக்கு ஒரு வேலையைப் பெற்றுத் தந்தது. ரத்தன் டாடாவின் உதவியாளராக வேலைக்கு சேர்ந்தார் நாயுடு. அவரை பொதுமேலாளராக ரத்தன் டாடா நியமித்தார். அதைத் தொடர்ந்து நாயுடு மூத்த குடிமக்களுக்கு உதவும் ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தொடங்கினார். அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.5 கோடி ஆகும்.
நாய்களுக்கு காலர் தயாரிக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தையும் சாந்தனு நாயுடு நடத்தி வருகிறார். அதற்கான மூலதனத்தை ரத்தன் டாடா அவருக்கு அளித்தார்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications