சுகுணா என்றாலே சுகுணா சிக்கன் என்ற பிராண்ட் தான் நம் மனதில் தோன்றும். அந்த அளவுக்கு இந்த பிராண்டை மக்கள் மனதில் நிலை நிறுத்த செய்து பெரிய தொழில் சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கி இருக்கிறார்கள் சகோதரர்கள் சௌந்தரராஜன் மற்றும் சுந்தரராஜன்.
1982ஆம் ஆனு சுந்தரராஜன் கோழி வளர்ப்பு துறையில் கால்பதித்தார். கோவை அருகே உடுமலைப்பேட்டையில் 5000 ரூபாய் முதலீட்டில் இந்த தொழிலை அவர் தொடங்கினார். 1984ஆம் ஆண்டு சுகுணா ஏஜென்சீஸ் என்ற பெயரில் முட்டை, கோழி, கோழிகளுக்கான தீவனம் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தை தொடங்கினார். 1994ஆம் ஆண்டு சுந்தரராஜன் தன்னுடைய சகோதரர் சௌந்தரராஜனுடன் இணைந்து Suguna Poultry Farm Pvt. Ltd என்ற நிறுவனத்தை உருவாக்கினார்.

இந்த சகோதரர்கள் கோழி வளர்ப்பு முறையில் பல்வேறு நவீனங்களை கொண்டு வந்து இந்த துறையில் பெரிய புரட்சியையே உருவாக்கினர். அதாவது ஒப்பந்த முறையில் கோழி வளர்ப்பு முறையை அறிமுகம் செய்து முன்னோடியாக மாறினர். தொடக்கத்தில் இவர்களுக்கு தொழிலில் வெற்றி கிடைக்கவில்லை. பல்வேறு நிதி சார்ந்த சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. அதனை சமாளித்த போது தான் பல்வேறு விவசாயிகளும் கோழி வளர்ப்பை கைவிடுவதை கண்டனர்.
அப்போதுதான் ஒப்பந்த கோழி வளர்ப்பு முறையை கொண்டு வர வேண்டும் என்ற யோசனை வந்தது. எனவே நேரடியாக விவசாயிகள் தங்களை அணுகி ஒப்பந்த முறையில் கோழி வளர்ப்பில் ஈடுபடலாம் என அறிவித்தனர். 1990ஆம் ஆண்டு சுகுணா ஃபுட்ஸ், மூன்று பண்ணைகளுடன், ஒப்பந்தக் கோழி வளர்ப்பைத் தொடங்கியது. அதில் விவசாயிகளுக்கு கோழிகளை வளர்ப்பதற்குத் தேவையான தீவனம் முதல் மருந்துகள் வரை அனைத்தையும் வழங்கியது.
இந்த சகோதரர்களின் தொடர் முயற்சியால் பல விவசாயிகளும் ஒப்பந்த முறையில் கோழி வளர்ப்பில் ஈடுபட தொடங்கினர். சுந்தரராஜன் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்டவர். எனவே வெளிநாடுகளில் எந்த வகையான தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது என்பதை தேடி தேடி ஆய்வு செய்து அதனை தமிழ்நாட்டிற்கும் கொண்டு வந்தார்.
கோழி வளர்ப்பில் இவர் கொண்டு வந்த நவீனம் தான் சுகுணா நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சியை எட்ட காரணம். படிப்படியாக நிறுவனத்தின் வருமானம் உயர்ந்து 10,000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் நிறுவனமாக மாறியது. தற்போது இந்தியாவின் பல மாநிலங்களிலும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் சுகுணா ஃபுட்ஸ் மூலம் ஒப்பந்த முறையில் கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருமானம் பார்க்கின்றனர்.
சுகுணா இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் முழு தானியங்கு தீவன ஆலையை கர்நாடகாவின் ஹோஸ்கோட்டில் அமைத்துள்ளது. மதுரையிலும் சுற்றுச்சூழல் கட்டுப்பாடு கொண்ட பிராய்லர் கோழி வளர்ப்பு பண்ணையை நிறுவியுள்ளது. இந்தியாவில் கோழிப்பண்ணை சந்தையில் 18% பங்கை சுகுணா கொண்டிருக்கிறது. சுகுணா ஃபுட்ஸ் நிறுவன பொருட்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications