இந்தியாவில் கிராமப்பகுதிகளுக்கு சென்றால் கண்டிப்பாக டிவிஎஸ்50 வாகனம் நம் கண்களில் தென்படாமல் இருக்காது. அந்த அளவுக்கு சாமானிய மக்களின் அன்றாட வாழ்வின் அங்கமாக இருக்கிறது டிவிஎஸ் நிறுவனம்.
114 ஆண்டுகளாக இந்திய வாகன விற்பனை துறையில் அசைக்க முடியாத நிறுவனமாக டிவிஎஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்தியா மட்டுமில்லாமல் பல்வேறு நாடுகளுக்கும் தன்னுடைய கிளைகளை பரப்பி உள்ளது. இருசக்கர வாகனம், ஆட்டோ என வாகன உற்பத்தியும், வாகன உதிரிபாக உற்பத்தியிலும் கால் பதித்து வருவாய் அடிப்படையில் மூன்றாவது பெரிய மோட்டார் சைக்கிள் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இதற்கு வித்திட்டவர் டிவி சுந்தரம் ஐயங்கார்.

வழக்கறிஞராக இருந்து வங்கியாளராக பணியாற்றி பின்னர் டிவிஎஸ் மோட்டார்ஸ் என்ற மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனத்தை உருவாக்கிய பெருமை இவரையே சாரும். டி வி சுந்தரம் ஐயங்கார் 1877 ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்தில் திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் பிறந்தவர். முதலில் சட்டப் படிப்பை படித்த இவர் பின்னர் இந்திய ரயில்வே மற்றும் வங்கிகள் என பல இடங்களிலும் வேலை செய்தார். தானே சொந்தமாக ஒரு நிறுவனத்தை தொடங்க வேண்டும் என முடிவு செய்து 1911 ஆம் ஆண்டு டிவி ஐயங்கார் அண்ட் சன்ஸ் லிமிடெட் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை தொடங்கினார்.
மதுரை மாவட்டத்தில் பேருந்து சேவை வழங்கும் நிறுவனமாகத்தான் இது முதலில் தொடங்கப்பட்டது. மெட்ராஸ் மாகாணத்தில் தொடங்கப்பட்ட முதல் பேருந்து சேவையும் இவர்களுடைய தான். பின்னாளில் இவர் வாகன உற்பத்தி துறையில் கால் பதிக்க விரும்பினார். அப்படித்தான் 1962 ஆம் ஆண்டு லண்டனை சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு இருசக்கர வாகனங்களுக்கு தேவையான கம்ப்ரஸர்கள் மற்றும் பிற உதிரி பாகங்களை தயாரிக்க தொடங்கினார்.
1976 ஆம் ஆண்டு ஓசூர் நகரில் டிவிஎஸ் உற்பத்தி ஆலையை நிறுவி மொபெட்டுகள் தயாரிப்பில் இறங்கினார். 1980 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தின் முதல் இருசக்கர வாகனமான டிவிஎஸ் 50 உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வந்தது. அப்போது முதல் விற்பனையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. 1989 ஆம் ஆண்டு டிவிஎஸ் நிறுவனம் சுசுகி மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனத்தோடு இணைந்து இருசக்கர வாகன உற்பத்தியில் தீவிரமாக இறங்கியது.
அப்படி தான் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான வாகனங்களை உற்பத்தி செய்ய தொடங்கியது. 2001 ஆம் ஆண்டு இரண்டு நிறுவனங்களும் தனித்தனியாக பிரிந்து விட்டன. இதனை அடுத்து இந்த நிறுவனம் டிவிஎஸ் மோட்டார் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. டிவி சுந்தரத்தை பொருத்தவரை ஒரு தொழிலதிபராக மட்டுமில்லாமல் பிரச்சினைகளை திறம்பட கையாள்வதில் வல்லவராக இருந்தவர்.
இரண்டாம் உலகப் போரின் போது மெட்ராஸ் மாகாணத்தில் எரிபொருளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டது அப்போது டிவிஎஸ் கேஸ் பிளாண்ட் என்பதை உருவாக்கி அந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டார். அந்த காலத்திலேயே தன்னுடைய மகளுக்கு மறுமணம் செய்து வைத்து மிகப்பெரிய சமூக சீர்த்திருத்தத்திற்கு வித்திட்டவர்.
தற்போது டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் 60,000 க்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர். 8.5 பில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டும் நிறுவனமாகவும் மாறி இருக்கிறது. டிவிஎஸ் நிறுவனம் தமிழ்நாட்டின் அடையாளமாக இன்றும் திகழ்கிறது. டிவி சுந்தரம் பல தலைமுறையினருக்கும் வாகன உற்பத்தி பிரிவில் முன்னோடியாக நிற்கிறார்.
Story written by: Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications