பங்குச் சந்தையிலிருந்து தங்கப் பத்திரங்களை எப்படி வாங்குவது? இதோ ஈஸி ஸ்டெப்ஸ்..!

சவ்ரின் தங்கப் பத்திரங்கள் (SGB) முதன்மை அல்லது இரண்டாம் நிலை சந்தையிலிருந்து ஒருவரால் வாங்க முடியும். முதன்மை சந்தை என்றால் மத்திய அரசு அறிவிக்கும் தேதியில் ஆர்பிஐ வெளியிடும் போது வாங்குவது. இரண்டாம் நிலை சந்தை என்றால் தேசிய பங்குச் சந்தை (NSE) மற்றும் மும்பை பங்குச் சந்தை (BSE) மூலம் வர்த்தகம் செய்யப்படும் தங்க பத்திரத்தை வாங்குவது. இது மற்ற பத்திரங்களைப் போலவே, இரண்டாம் நிலை சந்தையில் தங்கப் பத்திரங்களின் விலை வழங்கல் மற்றும் தேவையின் அடிப்படையில் அமைந்துள்ளது. பொதுவாக, இவை தங்கத்தின் ஸ்பாட் விலைக்குக் கீழே வர்த்தகம் செய்யப்படுகின்றன. இவற்றை எப்படி வாங்குவது, அதற்கான தகுதிகள் என்ன உள்ளிட்ட தகவல்களை விரிவாக காணலாம்

தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்வதற்கான தகுதி என்ன?: அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம், 1999 இன் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளபடி இந்தியாவில் வசிக்கும் நபர்கள் இறையாண்மை தங்க பத்திரத்தில் (SGB) முதலீடு செய்யலாம். தகுதியான முதலீட்டாளர்களில் தனிநபர்கள், HUFகள், அறக்கட்டளைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஆகியவை அடங்கும். வசிப்பவர் முதல் குடியுரிமை பெறாதவர் வரை குடியிருப்பு நிலை மாற்றத்துடன் தனிப்பட்ட முதலீட்டாளர்கள், முன்கூட்டியே திரும்பப்பெறுதல்/முதிர்வு வரை தங்கப் பத்திரங்களைதொடர்ந்து வைத்திருக்கலாம்.

பங்குச் சந்தையிலிருந்து தங்கப் பத்திரங்களை எப்படி வாங்குவது? இதோ ஈஸி ஸ்டெப்ஸ்..!

பங்குச் சந்தை மூலம் தங்கப் பத்திரங்களை எப்படி வாங்கலாம்?: பங்குச் சந்தை மூலம் தங்கப் பத்திரங்களை வாங்க, இந்த செயல்முறைகளை பின்பற்றலாம்:

படி 1: NSE அல்லது BSE இணையதளத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட SGB மற்றும் அதிக லாபம் தரும் SGB ஐ நீங்கள் காணலாம்

படி 2: அதில் உங்கள் டீமேட் கணக்கில் SGB ஸ்கிரிப் குறியீட்டைத் தேடி அதில் வாங்கவும்.

படி 3: பரிவர்த்தனையின் T+1 வேலை நாளுக்குள் உங்கள் டிமேட் கணக்கில் பத்திரங்கள் வரவு வைக்கப்படும்.

தங்கப் பத்திரம் ​​வர்த்தகம் செய்ய முடியுமா?: ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்படும் தேதியிலிருந்து பத்திரங்கள் வர்த்தகம் செய்யப்படுகின்றன. அரசுப் பத்திரங்கள் சட்டம், 2006 இன் விதிகளின்படி பத்திரங்களை விற்கவும் மாற்றவும் முடியும். பத்திரங்களின் பகுதி பரிமாற்றமும் சாத்தியமாகும். டிபாசிட்டரிகளுடன் டி-மேட் வடிவத்தில் வைத்திருக்கும் பத்திரங்களை மட்டுமே பங்குச் சந்தைகளில் வர்த்தகம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலீட்டாளர்களுக்கு தங்கப்பத்திரங்களுக்கான பாதுகாப்பு எவ்வாறு கிடைக்கும்?: முதலீட்டாளர்களின் சார்பாக ஏலத்தை வைக்க டெபாசிட்டரி முறை மற்றும் பிசிகல் முறை ஆகியவற்றிற்கு இடையே தேர்வு செய்யலாம். டெபாசிட்டரி முறையில், RBI தங்கப் பத்திரங்களை வாடிக்கையாளரின் டிமேட் கணக்கில் வரவு வைக்கும். பிசிகல் முறையில், ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு தங்கப் பத்திரச் சான்றிதழை வழங்கும். ஒரு தங்கப் பத்திரம் ஆனது எட்டு ஆண்டுகள் செல்லுபடியாகும். முன்பாகவே, தங்கப் பத்திரங்களை வாங்கிய முதலீட்டாளர்கள், எட்டு ஆண்டு கால முழுப் பத்திரங்களை வைத்திருக்க முடியாமல் போகலாம். இந்த நபர்கள் தங்களுக்குச் சொந்தமான சொத்துக்களை விற்க பங்குகளை போல்வே, பரிமாற்றங்களைப் பயன்படுத்திகொள்ளலாம்

எப்போது வேண்டுமானாலும் பத்திரத்தை பணமாக்க முடியுமா?: முன்கூட்டியே திரும்பபெறுதல் அனுமதிக்கப்படுமா?
பத்திரத்தின் காலம் 8 ஆண்டுகள் என்றாலும், கூப்பன் செலுத்தும் தேதிகளில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஐந்தாவது ஆண்டிற்குப் பிறகு பத்திரத்தை முன்கூட்டியே பணமாக்குதல்/மீட்பது அனுமதிக்கப்படும். டிமேட் வடிவத்தில் வைத்திருந்தால், பத்திரம் எக்ஸ்சேஞ்ச்களில் வர்த்தகம் செய்யப்படும். இது வேறு எந்த ஒரு தகுதியான முதலீட்டாளருக்கும் மாற்றப்படலாம்.

Disclaimer: The recommendations made above are by market analysts and are not advised by either the author, nor Greynium Information Technologies or GoodReturns. The author, nor the brokerage firm nor GoodReturns would be liable for any losses caused as a result of decisions based on this write-up. https://tamil.goodreturns.in/ advises viewers to consult with certified experts before making any investment decision.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+