மெட்டா நிறுவனம் தங்களுடைய சமூக ஊடக தளங்களில் Fact Checking பிரிவினை நீக்கி இருப்பது பயனாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் பல்வேறு பயனாளர்களும் தங்களுடைய பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களை டெலிட் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச அளவில் போலியான தகவல்கள் பரவி அதன்மூலம் பல்வேறு வன்முறைகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டதை அடுத்து சமூக ஊடகங்கள் வழியாக போலியான தகவல்கள் பகிரப்படுவதை தடுக்க ஃபேக்ட் செக்கிங் எனப்படும் உண்மை கண்டறியும் நடைமுறைகள் கடந்த சில ஆண்டுகளாகவே மிகவும் பிரபலமாகி வருகின்றன.

இந்த நிலையில் மெட்டா நிறுவனம் தங்களுடைய பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் ஜனவரி 7ஆம் தேதியிலிருந்து ஃபேக்ட் செக்கிங் எனப்படும் உண்மை கண்டறியும் நடைமுறைகள் செயல்படாது என தெரிவித்துள்ளது.
இது பேஸ்புக்கின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்குகிறது எனக்கூறி பல்வேறு பயனாளர்களும் தங்களுடைய பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை டெலிட் செய்து வருவதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. தேர்தல் காலங்கள் மற்றும் கொரோனா பெருந்தொற்று போன்ற காலங்களில் போலியான தகவல்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக எளிதாக பரவின. இது வன்முறைகளை தூண்டிவிட்டது அதோடு மக்களின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் நிகழ்வுகளுக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது.
எனவே தான் சமூக ஊடகங்களில் இதுபோன்ற போலியான தகவல்கள் பகிரப்படுவதை தடுக்க உண்மை கண்டறியும் கருவிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன. முதன்முறையாக மெட்டா நிறுவனம் தங்களுடைய பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இந்த உண்மை கண்டறியும் கருவிகளை ஒருங்கிணைத்தது. இதனால் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வரக்கூடிய தகவல்கள் நம்பகத்தன்மை கொண்டவை என்ற நம்பிக்கை மக்களிடையே பிறந்தது.
இந்த நிலையில் மார்க் ஸக்கர்பர்க் இந்த உண்மை கண்டறியும் கருவிகளை அகற்றுவதாக அறிவித்துள்ளார். எனவே பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்கள் பரவுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது என பயனாளர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் பல்வேறு வாடிக்கையாளர்களும் உண்மையான தகவல்களை வழங்குவதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் சமூக ஊடகங்களை நோக்கி மாறி வருகின்றனர் என டெக் கிரஞ்ச் என்ற தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
பலரும் கூகுளில் பேஸ்புக் பக்கத்தை நிரந்தரமாக எப்படி டெலிட் செய்வது என்பது குறித்து தேடி இருப்பதும் தெரியவந்துள்ளது. பேஸ்புக்கில் இருக்கும் போட்டோக்களை எப்படி டெலிட் செய்வது, பேஸ்புக்கிற்கு மாற்றாக அதே வேளையில் நம்பகமான சமூக ஊடக தளம் எது என்பன உள்ளிட்ட தேடுதல்கள் கூகுள் ட்ரெண்டில் அதிகரித்திருப்பதாக செய்தி குறிப்பிடுகிறது.
சமூக ஊடகங்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையின் அங்கமாகிவிட்ட நிலையில் அதன் மூலம் உண்மையான மக்களுக்கு பலன் தரும் தகவல்கள் பரவுவதை உறுதி செய்வது அதன் உரிமையாளர்களின் கடமை. ஆனால் மெடா அதில் இருந்து சற்றே விலகி இருப்பது பயனாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Story written by: Devika
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications