பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகுப்புடன் 3 ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு மக்களை மகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது.
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது .ஆனால் 2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசு தொகை வழங்கப்படவில்லை. மாறாக அரிசி ,சர்க்கரை , கரும்பு மட்டுமே வழங்கப்பட்டது. இந்த சூழலில் தான் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு நிச்சயமாக ரேஷன் கடை வாயிலாக பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகின.

ஞாயிற்றுக்கிழமை அன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில் தைத்திருநாளை உற்சாகமாக கொண்டாடும் வகையில் அரிசி ரேஷன் அட்டை வைத்திருக்கக்கூடிய அனைவருக்கும் 3000 ரூபாய் பொங்கல் பரிசு தொகையாக வழங்கப்படும் என்றும் அதோடு ஒரு கிலோ பச்சரிசி ,ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீள கரும்பு வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
முதலமைச்சர் ஸ்டாலின் 8ஆம் தேதியிலிருந்து பொங்கல் பரிசு விநியோகத்தை தொடங்கி வைக்க இருக்கிறார் . சென்னையில் நடைபெறும் நிகழ்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்புடன் 3 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தையும் வழங்கி இந்த திட்டத்தை தொடங்கி வைக்க இருக்கிறார். பச்சரிசி சர்க்கரை ஆகியவை ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்டு ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் தற்போது கரும்பு கொள்முதல் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மற்றொருபுறம் டோக்கன்கள் விநியோகம் செய்யும் பணிகளும் நடைபெற்ற வருகின்றன.
வரும் 8ஆம் தேதி வரை டோக்கன் வழங்கப்படும் என்றும் ஜனவரி 13ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ஏதுவாக இந்த வாரம் வெள்ளிக்கிழமை ரேஷன் கடை இயங்கும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்க பணத்தை எப்படி விநியோகம் செய்ய வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களை தமிழ்நாடு உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குனர் அலுவலகம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை மூலம் அனுப்பி வைத்திருக்கிறது.
இதன்படி 1500 மற்றும் அதற்கு மேல் மற்றும் 2000 குடும்ப அட்டைகளுக்கு மேல் இணைக்கப்பட்டு இருக்கும் ரேஷன் கடைகளில் கூடுதல் பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. முதல் நாளில் ரேஷன் கடைக்கு அதிக அளவிலான மக்கள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் முற்பகலில் 100 பேருக்கும் பிற்பகலில் 100 பேருக்கும் என்றும் இரண்டாம் நாளிலிருந்து ஒரு நாளைக்கு 300 பேருக்கும் என பொங்கல் பரிசு தொகுப்பும் பொங்கல் பரிசு தொகையையும் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப அட்டைதாரர்கள் எந்த தேதியில் எந்த நேரத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பெற வரவேண்டும் என்பதை தெளிவாக டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும்போது குறிப்பிட்ட அந்த ரேஷன் அட்டைதாரரின் கைவிரல் ரேகை சரிபார்ப்பு நடத்தப்பட வேண்டும் .தொழில்நுட்ப காரணங்களால் கைரேகை சரிபார்ப்பு வேலை செய்யவில்லை என்றால் பதிவேட்டில் கையெழுத்து பெற்று வழங்க வேண்டும்.
பொங்கல் ரொக்கப் பணம் 3 ஆயிரம் ரூபாயை வழங்கும் போது ரூபாய் நோட்டுகளை கவர்களில் மறைமுகமாக வழங்க கூடாது பயனாளிகள் முன்பே நோட்டுகளை எண்ணி அவர்களின் கைகளிலேயே வழங்க வேண்டும் .உரிய அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு தொகையும் சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும் என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications