சென்னை: சிறு குறு நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அப்படி சிறு குறு நிறுவனங்களை நடத்துபவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும் வகையில் தனிப்பயனாக்கப்பட்ட கிரெடிட் கார்டு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டார்.
இதன்படி வரும் ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து சிறு குறு தொழில்களை நடத்துபவர்கள் இந்த கடன் அட்டைகளை வாங்க முடியும். யாரெல்லாம் இதற்கு விண்ணப்பம் செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மத்திய அரசு ஏற்கனவே விவசாயிகளுக்கு கடன் வழங்க கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தை செயல்படுத்துகிறது. அதே மாடல் தான் இந்த மைக்ரோ கிரெடிட் கார்டிலும் பின்பற்றப்படுகிறது. சிறு தொழில் முனைவோருக்காகவே இந்த பிரத்தியேக கடன் அட்டை திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. இந்த திட்டத்திற்காக அரசு அடுத்த சில ஆண்டுகளில் சுமார் 30,000 கோடி ரூபாய் வரை ஒதுக்க உள்ளது.
சிறு தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களுடைய தொழிலை விரிவாக்கம் செய்வதற்கும் தங்களுடைய தொழிலை மேம்படுத்துவதற்கும் இந்த கடன் அட்டை மூலம் 5 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம்.
யாரெல்லாம் பயன்பெறலாம்?
எந்தவித சிறு தொழில் முனைவோரும் இந்த கடன் அட்டைகளை பயன்படுத்தி எளிமையாகவும் வேகமாகவும் 5 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுக் கொள்ள முடியும்.
சிறு சிறு கடைகளை நடத்துபவர்கள், சிறு உற்பத்தி ஆலைகளை வைத்திருப்பவர்கள் இதன் மூலம் பயன் பெறலாம்.
தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் கூட இந்த திட்டத்தில் பயன்பெற முடியும் , ஆனால் அதற்கு முன்னதாக அவர்களுடைய வங்கிக் கணக்கு அறிக்கை மற்றும் அவர்கள் தொழிலின் தற்போதைய நிலை ஆகியவை ஆய்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வழங்கப்படக்கூடிய இந்த கிரெடிட் கார்டுகள் ஓராண்டு காலம் வேலிடிட்டி கொண்டவை.
ஆண்டுக்கு 10 - 25 லட்சம் ரூபாய்க்குள் வருமானம் ஈட்டும் சிறு தொழில் முனைவோர் அரசின் இந்த மைக்ரோ கிரெடிட் கார்டினை வாங்க முடியும் .
எப்படி விண்ணப்பம் செய்வது?:
மத்திய அரசின் உதயம் (Udyam portal) தளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
உதயம் தளத்தின் msme.gov.in. என்ற அதிகாரபூர்வ பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
அதில் Quick Links என்பதை கிளிக் செய்ய வேண்டும்
Udyam Registration என்பதை கொடுத்து அதில் கேட்கப்படும் தரவுகளை உள்ளீடு செய்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இந்தியாவில் அதிகமானவர்களுக்கு வேலை வாய்ப்பு தரக்கூடியவையாக சிறு நிறுவனங்கள் தான் இருக்கின்றன. எனவே தான் அரசு இவற்றை ஊக்குவிக்க பல சலுகைகளை வழங்குகிறது.
Story written by: Devika
More From GoodReturns

கொத்து கொத்தாக அமெரிக்கா விட்டு வெளியேறும் இந்தியர்கள்.. நேரா பெங்களூரில் லேண்டிங்.. என்ன காரணம்..?

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

அமெரிக்காவில் புது டிரெண்ட்..! ஷூ, செருப்பு இல்லாமல் ஆபீஸ்.. தெய்வீகமாக இருக்கு பாஸ்..!

AI நீங்க நினைக்கிற மாதிரி 'ஈசி' கிடையாது.. ரொம்ப கஷ்டம்.. உண்மையை உடைத்த விப்ரோ COO சஞ்சீவ்..!!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications