குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்குத்தான் ஐஸ்கிரீம் பிடிக்காது. அனைவருக்குமே பிடித்த ஒரு உணவுப்பொருள் என்றால் அது ஐஸ்கிரீம்கள் தான். அதுவும் கோடை நாட்களில் ஐஸ்கிரீம் நிறுவனங்கள் மற்றும் குளிர்பான நிறுவனங்களுக்கு கொண்டாட்டம் தான். வெயிலில் வெளியே சென்று விட்டாலே நமக்கு ஏதாவது குளுகுளுவென சாப்பிட்டால் இதமாக இருப்பது போல தோன்றும் அல்லவா? அதுவும் தற்போது திருமண விழாக்களிலும் ஐஸ்கிரீமை சேர்த்து வைப்பது வழக்கமான நடைமுறையாகி விட்டது.
இதிலிருந்தே ஐஸ்கிரீம்களுக்கு இருக்கும் ஃபேன் பேஸை நாம் தெரிந்து கொள்ளலாம். எனவே சுய தொழில் தொடங்க வேண்டும் என்று ஆசைப்பட்டு கொண்டிருப்பவர்கள் ஐஸ்கிரீம் கோன் மற்றும் கப்புகளை விற்பனை செய்யலாம். இதன் மூலம் வீட்டிலிருந்து 1 நாளைக்கு 1000 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை லாபம் பெற முடியும்.

வாடிக்கையாளர் தேவையை உணர்ந்து உங்களுடைய தொழில் இருக்க வேண்டும். ஐஸ்கிரீம் கப் மற்றும் கோன் தயாரிப்பதற்கு தேவைப்படும் மூலப் பொருட்கள், செலவுகள், சந்தை விலைகள் அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள். ஐஸ்கிரீம் கோன்கள் மற்றும் கப்களை தயாரிக்க தேவையான பொருட்களான மைதா, சர்க்கரை, நெய், பால் மற்றும் இதர பொருட்களையும் ஆராயுங்கள். இவற்றைப் பொறுத்து தான் உங்களுடைய பொருளின் தரம் இருக்கும். தரத்தில் எந்தவித குறைவும் இல்லாமல்.. அதே நேரத்தில் விலை குறைவான இடங்களில் பொருட்களை வாங்குங்கள்.
தேவையான பொருட்களை மொத்தமாக ஸ்டாக் செய்து கொள்ளுங்கள். ஏனெனில் எந்த ஒரு பொருளானாலும் மொத்தமாக வாங்கும்போது விலை சற்று குறையும். இதன் மூலம் உங்களுடைய லாபம் அதிகரிக்கலாம். அதன் பின் கோன்கள் மற்றும் கப்களை செய்த பிறகு பேக்கேஜிங் செலவுக்கு 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை ஆகலாம். இது தவிர மின்சாரம், எலக்ட்ரிசிட்டி, தண்ணீர், பணியாளர்களுக்கான சம்பளம் போன்ற இதர செலவுகளும் இதில் அடங்கும்.
சிறு தொழில் தொடங்க வங்கிகள் கடன் வழங்குகின்றன. நுன்கடன் நிறுவனங்கள் மூலமாகவும் நீங்கள் உங்கள் நிறுவனத்திற்கு தேவையான முதலீட்டைப் பெற முடியும். எந்த ஒரு உணவுப் பொருட்களை தயார் செய்யும் நிறுவனமாக இருந்தாலும் அதற்கு FSSAI உரிமம் முக்கியம்.
எனவே ஐஸ்கிரீம் கோன் மற்றும் கப் தயாரிக்கும் நிறுவனத்தை அமைக்க விரும்பினால் நீங்கள் FSSAI உரிமம் பெற வேண்டும். இது இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் மூலம் வழங்கப்படுகிறது. அவற்றுடன் பஞ்சாயத்து அனுமதியும்.. ஒரு வேளை நகரத்தில் வசித்தால் நகராட்சி அனுமதியும் பெற்றிருக்க வேண்டும்.
ஐஸ்கிரீம் கோன் செய்யும் இயந்திரம் நிமிடத்திற்கு 10 முதல் 30 கோன்களை உற்பத்தி செய்கிறது. இதன் உற்பத்தி செலவு ஒரு கோனுக்கு 50 பைசா முதல் 2 ரூபாய் வரை இருக்கும். சந்தையில் ஒரு கோனை 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை விற்பனை செய்யலாம். அதே போல ஐஸ்கிரீம் கப் தயாரிக்கும் போது கப் ஒன்றுக்கு 75 பைசா முதல் 2 ரூபாய் வரை செலவாகலாம். இவற்றை சந்தையில் 3 ரூபாய் வரை முதல் 6 ரூபாய் வரை விற்பனை செய்யலாம்.
அதுவே ஒரு கோன் 2 ரூபாய்க்கு உற்பத்தி செய்யப்பட்டால் அவற்றை சந்தையில் 5 ரூபாய் வரை விற்பனை செய்யலாம். இதன் மூலம் ஒரு கோனுக்கு 3 ரூபாய் வரை லாபம் கிடைக்கும். மேலும் ஒரு கப்பை 2 ரூபாய் செலவில் தயாரித்தால்.. அவற்றை 6 ரூபாய் வரை விற்பனை செய்யலாம். அதாவது ஒரு கப்புக்கு 4 ரூபாய் லாபம் கிடைக்கும். இப்படி ஒரு நாளைக்கு 1000 கோன்கள் அல்லது கப்களை விற்பனை செய்தால் இதன் மூலம் 1000 முதல் 3000 ரூபாய் வரை லாபம் பெறலாம்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?



Click it and Unblock the Notifications