தேசிய ஓய்வூதிய திட்டம் - ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்: இரண்டுக்கும் என்ன வித்தியாசம்..?!

அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு மத்திய அரசு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு ஏப்ரல் 1, 2025 முதல் நடைமுறைக்கு வரும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இதன் மூலம் ஜனவரி 1, 2004க்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் ஓய்வூதியமாக 50% சம்பளத்தைப் பெறலாம்.

வரும் நிதியாண்டு முதல் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை (UPS) தேர்வு செய்து, உறுதியான ஓய்வூதியத் திட்டத்தின் நன்மைகளைப் பெற முடியும். மத்திய அரசு வரும் நிதியாண்டு முதல் UPS மற்றும் NPS ஆகியவற்றைத் தேர்வு செய்யும் வாய்ப்பை அரசு ஊழியர்களுக்கு வழங்க உள்ள நிலையில், இந்த இரு திட்டங்களுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடுகள் என்ன என்பதைக் கட்டாயம் அனைத்து தரப்பு மக்களும் தெரிவித்துக்கொள்ள வேண்டும்.

தேசிய ஓய்வூதிய திட்டம் - ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்: இரண்டுக்கும் என்ன வித்தியாசம்..?!

உறுதியான நிலையான ஓய்வூதியத் தொகை: தேசிய ஓய்வூதியத் திட்டத்தையா (NPS) தேர்வு செய்தவர்கள், வரும் நிதியாண்டு முதல் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (UPS) தகுதியானவர்களாக இருப்பார்கள். UPS, ஜனவரி 1, 2004க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு, சம்பளத்தில் 50% உறுதியான ஓய்வூதியம் வழங்குகிறது.

ஆனால், NPS என்பது பங்குச்சந்தை உடன் இணைப்பு கொண்ட ஒரு முதலீட்டுத் திட்டம். NPS இலிருந்து வரும் பணம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுவதால், ஓய்வூதியத் தொகை நிலையானதாக இல்லை, சந்தை நிலைமைகளைப் பொறுத்து ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளாகிறது.

ஊழியர்களின் பங்களிப்பு: NPS என்பது ஊழியரின் அடிப்படை சம்பளத்தில் 10% பங்களிப்பு தேவைப்படுகிறது, இதற்கு அரசாங்கத்தின் 14% பங்களிப்பு சமமாக இருக்கும். புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில், அரசு UPS க்கு பங்களிப்பு 14% இலிருந்து 18.5% ஆக அதிகரிக்கும். அதே சமயம், ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளம் மற்றும் DA இல் 10% தொடர்ந்து பங்களிப்பு செய்வார்கள்.

NPS vs UPS தகுதி: மத்திய அமைச்சரவை அறிவித்த UPS, ஜனவரி 1, 2004க்கு பிறகு பணியில் சேர்ந்த அனைத்து அரசு ஊழியர்களுக்கும் கிடைக்கும்.

தேசிய ஓய்வூதியத் திட்டம் அரசு ஊழியர்களுக்குக் கட்டாயமானது, ஆனால் மத்திய சுயாட்சி அமைப்புகளில் (Autonomous Bodies) இருக்கும் ஊழியர்களுக்கும் இது கிடைக்கிறது. ஆனால் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் என்பது மாநில அரசு ஊழியர்கள்/மாநில சுயாட்சி அமைப்புகளின் ஊழியர்களுக்கும், மாநிலம்/UT இதைத் தேர்வு செய்யும் பட்சத்திலும் கிடைக்கும்.

தனியார் ஊழியர்கள் UPS அல்லது NPS க்கு தகுதியானவர்களா?: UPS, NPS ஐத் தேர்வு செய்த அரசு ஊழியர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயம், தனியார் ஊழியர்களுக்கு, அவர்கள் பணியாற்றும் நிறுவனத்தின் நிர்வாகம் பங்களிப்பை ஏற்றுக்கொண்டால், பழைய NPS கிடைக்கும். இல்லையெனில், எந்தவொரு இந்தியக் குடிமகனும் (18 முதல் 70 வயது வரை) தனது சொந்த விருப்பத்தின் அடிப்படையில் NPS ஐத் தேர்வு செய்யலாம்.

வரிச் சலுகை: NPS க்கு பங்களிப்பு செய்யும் ஊழியர்கள், பிரிவு 80 CCD(1) இன் கீழ் சம்பளத்தில் (அடிப்படை + DA) 10% வரை வரிச் சலுகை பெற தகுதியானவர்கள், பிரிவு 80 CCE இன் கீழ் ரூ. 1.50 லட்சத்தின் ஒட்டுமொத்த உச்சவரம்புக்குள் இது வரும். இதோடு பிரிவு 80 CCD(1B) இன் கீழ் ரூ.50,000 வரை வரி விலக்கு பெறலாம், பிரிவு 80 CCE இன் கீழ் ரூ. 1.50 லட்சத்தின் ஒட்டுமொத்த உச்சவரம்பிற்குக் கூடுதலாக இது கிடைக்கும்.

ஆனால் மத்திய அரசு, UPS இன் கீழ் வரிச் சலுகைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+