அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு மத்திய அரசு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு ஏப்ரல் 1, 2025 முதல் நடைமுறைக்கு வரும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இதன் மூலம் ஜனவரி 1, 2004க்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் ஓய்வூதியமாக 50% சம்பளத்தைப் பெறலாம்.
வரும் நிதியாண்டு முதல் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை (UPS) தேர்வு செய்து, உறுதியான ஓய்வூதியத் திட்டத்தின் நன்மைகளைப் பெற முடியும். மத்திய அரசு வரும் நிதியாண்டு முதல் UPS மற்றும் NPS ஆகியவற்றைத் தேர்வு செய்யும் வாய்ப்பை அரசு ஊழியர்களுக்கு வழங்க உள்ள நிலையில், இந்த இரு திட்டங்களுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடுகள் என்ன என்பதைக் கட்டாயம் அனைத்து தரப்பு மக்களும் தெரிவித்துக்கொள்ள வேண்டும்.

உறுதியான நிலையான ஓய்வூதியத் தொகை: தேசிய ஓய்வூதியத் திட்டத்தையா (NPS) தேர்வு செய்தவர்கள், வரும் நிதியாண்டு முதல் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (UPS) தகுதியானவர்களாக இருப்பார்கள். UPS, ஜனவரி 1, 2004க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு, சம்பளத்தில் 50% உறுதியான ஓய்வூதியம் வழங்குகிறது.
ஆனால், NPS என்பது பங்குச்சந்தை உடன் இணைப்பு கொண்ட ஒரு முதலீட்டுத் திட்டம். NPS இலிருந்து வரும் பணம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுவதால், ஓய்வூதியத் தொகை நிலையானதாக இல்லை, சந்தை நிலைமைகளைப் பொறுத்து ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளாகிறது.
ஊழியர்களின் பங்களிப்பு: NPS என்பது ஊழியரின் அடிப்படை சம்பளத்தில் 10% பங்களிப்பு தேவைப்படுகிறது, இதற்கு அரசாங்கத்தின் 14% பங்களிப்பு சமமாக இருக்கும். புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில், அரசு UPS க்கு பங்களிப்பு 14% இலிருந்து 18.5% ஆக அதிகரிக்கும். அதே சமயம், ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளம் மற்றும் DA இல் 10% தொடர்ந்து பங்களிப்பு செய்வார்கள்.
NPS vs UPS தகுதி: மத்திய அமைச்சரவை அறிவித்த UPS, ஜனவரி 1, 2004க்கு பிறகு பணியில் சேர்ந்த அனைத்து அரசு ஊழியர்களுக்கும் கிடைக்கும்.
தேசிய ஓய்வூதியத் திட்டம் அரசு ஊழியர்களுக்குக் கட்டாயமானது, ஆனால் மத்திய சுயாட்சி அமைப்புகளில் (Autonomous Bodies) இருக்கும் ஊழியர்களுக்கும் இது கிடைக்கிறது. ஆனால் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் என்பது மாநில அரசு ஊழியர்கள்/மாநில சுயாட்சி அமைப்புகளின் ஊழியர்களுக்கும், மாநிலம்/UT இதைத் தேர்வு செய்யும் பட்சத்திலும் கிடைக்கும்.
தனியார் ஊழியர்கள் UPS அல்லது NPS க்கு தகுதியானவர்களா?: UPS, NPS ஐத் தேர்வு செய்த அரசு ஊழியர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயம், தனியார் ஊழியர்களுக்கு, அவர்கள் பணியாற்றும் நிறுவனத்தின் நிர்வாகம் பங்களிப்பை ஏற்றுக்கொண்டால், பழைய NPS கிடைக்கும். இல்லையெனில், எந்தவொரு இந்தியக் குடிமகனும் (18 முதல் 70 வயது வரை) தனது சொந்த விருப்பத்தின் அடிப்படையில் NPS ஐத் தேர்வு செய்யலாம்.
வரிச் சலுகை: NPS க்கு பங்களிப்பு செய்யும் ஊழியர்கள், பிரிவு 80 CCD(1) இன் கீழ் சம்பளத்தில் (அடிப்படை + DA) 10% வரை வரிச் சலுகை பெற தகுதியானவர்கள், பிரிவு 80 CCE இன் கீழ் ரூ. 1.50 லட்சத்தின் ஒட்டுமொத்த உச்சவரம்புக்குள் இது வரும். இதோடு பிரிவு 80 CCD(1B) இன் கீழ் ரூ.50,000 வரை வரி விலக்கு பெறலாம், பிரிவு 80 CCE இன் கீழ் ரூ. 1.50 லட்சத்தின் ஒட்டுமொத்த உச்சவரம்பிற்குக் கூடுதலாக இது கிடைக்கும்.
ஆனால் மத்திய அரசு, UPS இன் கீழ் வரிச் சலுகைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications