சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரித்தது, புதிய தொழில்நுட்பங்களின் வருகை உள்ளிட்டவை காரணமாக வேலைவாய்ப்பு சந்தையே பெரிய அளவில் மாற்றம் கண்டு இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பல்வேறு வேலைகளை பறித்திருக்கிறது, புதிதாக பல்வேறு வேலைகளை உருவாக்கி இருக்கிறது.
வேலைவாய்ப்பு: பாரம்பரியமாக கல்லூரி படிப்பை முடித்துவிட்டு ஒரு வேலைக்கு சென்று செட்டிலாவது என்ற நிலை மாறி வேலைக்கு சென்றாலும் புதிய புதிய விஷயங்களை கற்றுக் கொண்டே இருந்தால் மட்டுமே அதை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நிலை வந்திருக்கிறது. ஸெரோதா நிறுவனர் நிகில் காமத்தும் இதையே தான் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார் . அதில் 2030ஆம் ஆண்டுக்குள் எந்த வகையான வேலைகளுக்கெல்லாம் ஆட்கள் தேவைப்படுவார்கள் என்பது குறித்து அவர் விவரித்து இருக்கிறார்.

எதிர்கால வேலைவாய்ப்புகள்: தனிப்பட்ட முறையில் நான்கு ஆண்டுகள் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு செல்வது என்பது என்ற காலம் மலை ஏறிவிட்டது இனி வாழ்க்கை முழுவதும் நாம் புதுப்புது விஷயங்களை கற்றுக் கொண்டிருந்தால் மட்டுமே வேலையை தக்க வைத்துக் கொள்ள முடியும் என அறிவுரை வழங்கியிருக்கிறார். உலக பொருளாதார கூட்டமைப்பு எதிர்கால வேலை வாய்ப்புகள் என்ற பெயரில் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி 2030 ஆம் ஆண்டு உலக அளவில் வேளாண்மை பிரிவில் அதிக அளவு வேலை வாய்ப்பு உருவாகும் என தெரிவித்திருக்கிறார்.
டெலிவரி சேவைகள்: அடுத்ததாக மென்பொருள் மற்றும் செயலிகளை மேம்படுத்தும் பிரிவுகளில் வேலை வாய்ப்புகள் அதிகமாகும் என்றும் டெலிவரி சேவைகளில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் தெரிவித்து இருக்கிறார். வேளாண்மையையும் தொழில்நுட்பத்தையும் இணைக்கக்கூடிய வகையிலான வேலை வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன என அவர் கூறியிருக்கிறார். மக்கள் நவீன வாழ்க்கை முறையை நோக்கி மாறி வருகின்றனர், அனைத்தையும் ஒரு கிளிக்கில் ஆர்டர் செய்து பெறுகின்றனர். இது நகரங்களை கடந்து கிராமங்களையும் சென்றடைந்து விட்டது எனவே டெலிவரி வேலைகளுக்கு அதிக டிமாண்ட் இருக்கும் என தெரிவித்திருக்கிறார் .
எந்த வேலைகள் மறையும்: கிளார்க், அட்மின், கேஷியர் போன்ற வேலைகள் எல்லாம் படிப்படியாக மறைந்து விடும் என்றும் டேட்டா சார்ந்த , தொழில்நுட்பம் சார்ந்த வேலைகள் அதிகரிக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார் .2030ஆம் ஆண்டுக்குள் 178 மில்லியன் வேலை வாய்ப்புகள் புதிதாக உருவாகும் என்றும் 92 மில்லியன் வேலை வாய்ப்புகள் பறிபோகும் என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.
ஏஐ கருவிகள்: தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஐடி உள்ளிட்ட துறைகளில் மனிதர்களின் வேலைகளை செய்ய தொடங்கிவிட்டது 2030-ம் ஆண்டுக்குள் இது இன்னும் அதிகரிக்கும் என்றும் நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை பாதியாக குறைத்து விட்டு அதற்கு நிகராக செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்த தொடங்கி விடும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
சைபர் செக்யூரிட்டி: 2030 ஆம் ஆண்டுக்குள் என்னென்ன வகையிலான வேலையை என்னென்ன திறன்களை வளர்த்துக் கொண்டால் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதையும் அவர் பட்டியலிட்டுள்ளார். அதன்படி ஏஐ மற்றும் டேட்டா சம்பந்தப்பட்ட திறன்களை கொண்டவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும் என கூறியிருக்கிறார். அடுத்ததாக சைபர் செக்யூரிட்டி பிரிவில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் டெக்னாலஜிக்கல் லிட்ரசி பிரிவில் வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் கூறுகிறார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீடித்த நிலைத்தன்மை கொண்ட பூமிக்கு தீங்கு ஏற்படுத்தாத தொழில்கள் நல்ல வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

ஆந்த்ரோபிக் எடுத்த முடிவு.. கடுப்பான டிரம்ப்.. ஆடிப்போன பென்டகன்..!!

இரவோடு இரவாக நடந்த டீலிங்.. பென்டகன் உடன் கைகோர்த்த OpenAI.. சாம் ஆல்ட்மேன் டிவீட்..!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications