மும்பை: அமெரிக்காவின் மத்திய வங்கியானது 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, வட்டி விகிதத்தினை அதிகரிக்கப்பட்டுள்ளது. இது ரெசசனுக்கு வழிவகுக்கலாமோ என்ற அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் மற்ற சில நாடுகளுடன் ஒப்பிடும்போது இன்னும் அமெரிக்காவில் வட்டி விகிதம் குறைவு தான் என நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
தொடர்ந்து 3வது முறையாக வட்டி விகிதமானது அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா காலத்தில் இருந்த குறைந்தபட்ச அளவினை எட்டிய நிலையில், அதில் இருந்து 3% என்ற அளவுக்கு உச்சத்தினை எட்டியுள்ளது.
அமெரிக்கா தான் டாப்
அமெரிக்கா மத்திய வங்கியின் இந்த முடிவானது இங்கிலாந்து, ஐரோப்பிய மண்டலம், தென் கொரியா, இந்தியா உள்பட மற்ற நாடுகளை காட்டிலும் அதிகமாகும். இந்தியா இதுவரையில் 140 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதே பிரேசில் 1175% வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது. ரஷ்யாவிலும் 325 அடிப்படை புள்ளிகளாக அதிகரித்துள்ளது. சீனாவிலும் இன்னும் வட்டி விகிதம் என்பது குறைவாகவே உள்ளது. தென் கொரியா, தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்தும் 150 அடிப்படை புள்ளிகளும், ஐரோப்பிய மண்டலம் 125 அடிப்படை புள்ளிகளும் வட்டி அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் அமெரிக்காவுக்கும், பிற நாடுகளுக்குமான இடைவெளியானது உச்சத்தினை எட்டியுள்ளது.
பணவீக்கம் எங்கு அதிகம்?
வட்டி விகித அதிகரிப்பில் பிரேசில், ரஷ்யாவில் அமெரிக்காவினை விட அதிகம் என்றாலும், மற்ற நாடுகள் அமெரிக்காவினை விட பின் தங்கியுள்ளன. இதே பணவீக்கத்தில் பார்க்கும்போது ரஷ்யா, இங்கிலாந்து ஐரோப்பிய மண்டலம், பிரேசில் உச்சத்தில் உள்ளன. இதன் பிறகே அமெரிக்கா உள்ளது.
ரஷ்யா - 14.3%
இங்கிலாந்து - 9.9%
ஐரோப்பிய மண்டலம் - 9.1%
பிரேசில் - 8.7%
அமெரிக்கா - 8.3%
தென் ஆப்பிரிக்கா - 7.6%
இந்தியா - 7%
தென் கொரியா - 5.7%
பாதிப்பா?
அமெரிக்காவின் மத்திய வங்கி நடவடிக்கையால் அது இந்தியா உள்பட மற்ற நாடுகளையும் வட்டி விகிதத்தினை அதிகரிக்க தூண்டலாம். குறிப்பாக இந்தியா உள்ளிட்ட நாடுகள் கட்டாயம் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர எடுக்கப்படும் நடவடிக்கையாக பார்க்கப்பட்டாலும், இந்திய சந்தையில் இருந்து முதலீடுகள் வெளியேறவும் வழிவகுக்கலாம்.
இந்தியாவில் என்ன பிரச்சனை?
இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தினை அதிகரித்தால் அது மீண்டும் வங்கிகளை வட்டி அதிகரிப்புக்கு தூண்டலாம். இது இந்தியாவில் வீட்டுக் கடன், வாகனக் கடன், கிரெடிட் கார்டு கடன் உள்ளிட்டவற்றிற்கும் வட்டியை அதிகரிக்க தூண்டலாம். இது வளர்ச்சியில் மெதுவான வளர்ச்சியினை தூண்டலாம். அதோடு தேவையிலும் சரிவினை ஏற்படுத்தலாம். இது பங்கு சந்தையிலும் தாக்கத்தினை ஏற்படுத்த கூடும். எனினும் அதிகளவில் முதலீடுகள் வெளியேறாமலும் தடுக்க இது வழிவகுக்கும்.
ரூபாயில் தாக்கம் இருக்கலாம்?
எப்படியிருப்பினும் தொடர்ந்து வட்டி அதிகரிப்பினை செய்து வரும் நிலையில் அமெரிக்க டாலரின் மதிப்பானது, பலத்த உச்சத்தில் காணப்படுகின்றது. இது மேற்கொண்டு இந்திய ரூபாயின் மதிப்பில் தாக்கத்தினை ஏற்படுத்த கூடும். இது ரூபாய் மதிப்பு மேற்கொண்டு சரிய வழிவகுக்கலாம்.
More From GoodReturns

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

பங்குச்சந்தை சரிவுக்கு மத்தியில் ஐபிஓ வெளியிடும் கோல் இந்தியா: முதலீடு செய்யலாமா?

இந்தியா நினைத்தால் ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர முடியுமா? மத்தியஸ்தராக மாறுகிறதா இந்தியா?

20 வருட ஹோம் லோனை 12 வருஷமா குறைக்கலாம்!லட்சங்களை மிச்சப்படுத்தும் ஒரு சூப்பர் EMI மேஜிக்!

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்



Click it and Unblock the Notifications