பிரபல ஹெச்பி (HP) நிறுவனம் தங்களுடைய ஊழியர்களில் 2500 பேரை பணியில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களும் ஊழியர் பணி நீக்க நடவடிக்கையை தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.
Hewlett Packard Enterprise எனப்படும் ஹெச்பி நிறுவனம் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் தங்கள் நிறுவனத்தில் இருந்து 2500 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அண்மையில் ஹெச்பி நிறுவனத்தின் நிதி நிலவரங்கள் வெளியிடப்பட்டன. அதில் எதிர்பார்த்த அளவு நிறுவனம் லாபம் அடையாததால் சிக்கன நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாகவும் அதன் ஒரு பகுதியாக ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் ஹெச்பி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து ஹெச்பி நிறுவனத்தின் பங்கு மதிப்பு 19% வரை குறைந்தது.

தரவுகளை சேமித்து பராமரிக்கக் கூடிய மிகப்பெரிய சர்வர்களை ஹெச்பி நிறுவனம் தயாரித்து வழங்கி வருகிறது. அண்மையில் இந்த நிறுவனம் தங்களுடைய கடைசி காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டது. அதில் நிறுவனத்தின் வருமானம் முந்தைய ஆண்டு விட 16 சதவீதம் அதிகரித்து இருந்தாலும் எதிர்பார்த்த அளவு வருமானம் உயரவில்லை என ஹெச்பி நிறுவனம் தெரிவித்துள்ளது.
என்விடியா நிறுவனத்தின் சமீபத்திய சிப்புகளுக்கு தேவைப்படும் வகையிலான செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட சர்வர்களை இந்த நிறுவனம் அதிக அளவில் உற்பத்தி செய்து வருகிறது. இதனால் தங்களுடைய பாரம்பரிய சர்வர்களை தள்ளுபடி விலையில் விற்பனை செய்கிறது. இதுவே நிறுவனத்தின் வருமானம் குறைந்ததற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் சிக்கன நடவடிக்கையாக 2500 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போவதாக கூறியுள்ளது. இதன் மூலம் 2027 ஆம் ஆண்டுக்குள் ஹெச்பி நிறுவனம் 150 மில்லியன் டாலர்களை மிச்சப்படுத்த முடியும் எனக் கூறுகிறது. ஹெச்பி நிறுவனத்தில் 61 ஆயிரம் பேர் பணிபுரியும் நிலையில் இந்த பணி நீக்க நடவடிக்கை மூலம் ஐந்து சதவீத ஊழியர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
ஹெச்பி நிறுவனம் தற்போது நவீன செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட சாதனங்களோடு போட்டியிட வேண்டி இருப்பதால் ஏற்கனவே இது தயாரித்து வைத்த பாரம்பரிய சாதனங்களை எல்லாம் தற்போது குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறது. இதனால் நிறுவனத்தின் வருமானமும் லாபமும் பெருமளவு சரிவடைந்துள்ளது. அதே வேளையில் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட சாதனங்களை உருவாக்குவதற்கு இந்த நிறுவனம் அதிக தொகையை முதலீடு செய்ய வேண்டி இருக்கிறது. எனவே இந்த நிறுவனத்தின் மீது முதலீட்டாளர்கள் படிப்படியாக நம்பிக்கையை இழந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Story Written: Devika
More From GoodReturns

லட்சக்கணக்குல சம்பளம் குடுக்கிறாங்கனு இந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க!! ஐடி ஊழியர்கள் தலையில் தொங்கும் கத்தி!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

ஈரான் போர்: மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் அமெரிக்கர்களுக்கு டிரம்ப் அரசு முக்கிய உத்தரவு!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications