ஹெச்எஸ்பிசி என சுருக்கமாக அழைக்கப்படும் Hong Kong and Shanghai Banking Corp வங்கி எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் தனது தனியார் வங்கி வணிகத்தை மீண்டும் தொடங்கியுள்ளது. சமீபத்தில் சிட்டிபேங்க் குரூப் இந்திய வர்த்தகத்தை மூடிவிட்டு வெளியேறியது யாராலும் மாற்ற முடியாது..
இந்த நிலையில் HSBC 8 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் இந்தியாவில் தனது சேவையை துவங்க என்ன காரணம்..? 8 வருடத்திற்கு முன்பு HSBC இந்தியாவை விட்டு வெளியேற என்ன காரணம்..?

சுவிஸ் கிளையில் கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டு நாணயக் கணக்குகளை வைத்திருக்கும் நபர்களுக்கு எதிராக இந்திய வருமான வரி துறையின் விசாரணையின் மத்தியில் பல்வேறு காரணங்களுக்காக HSBC 8 ஆண்டுகளுக்கு முன்பு தனது பிரைவேட் பேங்கிங் பிரிவை மூடியது. இதை தொடர்ந்து தற்போது இந்தியாவில் மீண்டும் தனது தனியார் வங்கி வணிகத்தை தொடங்கியுள்ளது.
பிரைவேட் பேங்கிங் பிஸ்னஸ் என்பது 2 மில்லியன் டாலருக்கும் அதிகமான முதலீடு செய்யக்கூடிய சொத்துக்களை கொண்ட அதிக நிகர சொத்து மதிப்பு (HNW) மற்றும் அதி உயர் நிகர சொத்து மதிப்பு (UHNW) கொண்ட தனிநபர்களுக்கும் மற்றும் குடும்பங்களுக்கு மட்டுமே வழங்க கூடிய சிறப்பு நிகி சேவைகளாகும்.
உலகிலேயே மிகப்பெரிய மற்றும் வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உயர்ந்திருக்கும் வேளையில் நாட்டின் டிஜிட்டல் மயமாக்கல், வேகமாக வளரும் உள்கட்டமைப்பு ஆகியவற்றால் பணக்காரர்களின் எண்ணிக்கை கடந்த 10 வருடத்தில் பெரிய அளவில் அதரித்துள்ளது.
இத்தகைய சரியான நேரத்தில் HSBC நாட்டின் பெரும் பணக்காரர்கள் டார்கெட் செய்து 8 வருடங்களுக்கு பின்பு தனது பிரைவேட் பேங்கிங் சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதுக்குறித்து HSBC கூறுகையில் எங்களூடைய ரீடைல் மற்றும் கார்ப்பரேட் வங்கி சேவையுடன் இன்று அறிமுகம் செய்துள்ள ப்ரைவேட் பேங்கிங் சேவைகள் பெரிய அளவில் பலன் அளிக்கும் என HSBC ஆசியா-பசிபிக் பிரிவின் இணை தலைமை நிர்வாக அதிகாரி சுரேந்திரா ரேஷா தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டில் பிரிட்டன் நாட்டை பின்னுக்குத்தள்ளி உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்தது மட்டும் அல்லாமல் 2027-28 ஆம் ஆண்டில் ஜப்பான் மற்றும் ஜெர்மனியை முந்திவிடும் என்று ஐநா பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை தெரிவித்துள்ளது.
இதேவேளையில் இந்தியாவில் 30 மில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு செய்யக் கூடிய மிக உயர்ந்த நிகர மதிப்புள்ள தனிநபர்களின் எண்ணிக்கை 2027 ஆம் ஆண்டில் 58% சதவீதம் வரையில் உயரும் என Night Frank வெல்த் நிறுவனத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது. இப்படியிருக்கையில் HSBC இந்த வர்த்தகத்தை கைவிடுமா என்ன..?
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications