ஈரான் போர் காரணமாக சரக்கு போக்குவரத்து தடைபட்டு இந்தியாவில் எல்பிஜி தட்டுப்பாடு நீடிக்கிறது. இந்த சூழலில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடமோ என்ற அச்சம் மக்களிடையே நிலவுகிறது. நாட்டில் போதுமான அளவு கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு இருக்கிறது பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம் என அரசு தொடர்ச்சியாக கூறி வருகிறது.
இந்திய எண்ணெய் விற்பனை நிறுவனங்களும் போதிய இருப்பு இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளன. இருந்தாலும் அவ்வப்போது திடீரென மக்களிடையே பதற்றம் ஏற்பட்டு பெட்ரோல் பங்க்குகளில் குவிகின்றனர். நேற்று மற்றும் நேற்று முன்தினம் தெலுங்கானா, குஜராத் உள்பட பல்வேறு மாநிலங்களிலும் எரிபொருள் தட்டுப்பாடு என தகவல் பரவியதால் ஏராளமான வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிலையங்களில் குவிந்தனர். இதனால் ஒரு விதமான பதட்டமான சூழல் ஏற்பட்டது.

இந்த சூழலில் பெட்ரோல் பங்குகளில் பதற்றத்தோடு வாகன ஓட்டிகள் குவிவதை அடுத்து தெலுங்கானா மாநில அரசு ஒரு முக்கியமான முடிவினை அறிவித்து இருக்கிறது. அதாவது பொதுமக்கள் தனியார் வாகனங்களை அதிகமாக பயன்படுத்துவதை தவிர்த்து பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு தெலுங்கானா மாநிலத்தின் சாலை போக்குவரத்து கழகம் ஹைதராபாத் நகரில் இயங்கக்கூடிய ஏசி மற்றும் மெட்ரோ டீலக்ஸ் பேருந்துகளின் கட்டணத்தை 30 சதவீதம் வரை குறைத்திருக்கிறது.
பேருந்து கட்டணங்கள் குறைந்து இருப்பதால் மக்கள் தனிப்பட்ட முறையில் ஒரு நபருக்காக வாகனங்களை பயன்படுத்துவது நிறுத்துவார்கள், பெட்ரோல் டீசல் வாங்குவதற்காக பங்குகளில் குவிவது உள்ளிட்டவை தடுக்கப்படும் என தெலுங்கானா மாநில போக்குவரத்து கழகம் கூறுகிறது.

பொதுமக்கள் தேவை இல்லாமல் பெட்ரோல் நிலையங்களில் சென்று பதற்றத்தோடு பெட்ரோல் வாங்குவதை விடுத்து பாதுகாப்பான சவுகரியமான அரசு பேருந்துகளை பயன்படுத்துங்கள் என தெலுங்கானா மாநில அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது. கட்டணங்கள் குறைந்து இருப்பதால் ஏராளமான மக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த முன் வருவார்கள் என்றும் இது எரிபொருள் சேமிப்புக்கு வழிவகுப்பு என்றும் தெலுங்கானா மாநில அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மக்கள் தனிப்பட்ட வாகனங்களை விடுத்து பொது போக்குவரத்தை பயன்படுத்த முன் வருவதால் போக்குவரத்து நெரிசல் குறையும் , சுற்றுச்சூழல் மாசடைவது குறையும் , இது போன்ற ஒரு சவாலான சூழலில் ஒட்டுமொத்த நாட்டிற்கே பெரிய உதவியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.இதற்கிடையே ஹைதராபாத் நகரில் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி தட்டுப்பாடு இல்லை என்றும் பொதுமக்களுக்கு 60 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு இருக்கிறது எனவே பதற்றம் அடைய வேண்டாம் என்றும் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பொது போக்குவரத்துக்கு தேவையான பெட்ரோல் டீசலும் கையிருப்பில் உள்ளது என கூறி இருக்கிறது.
More From GoodReturns

பெட்ரோல், டீசல் விலை உயர்வா? : நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதாக தகவல்

டீசல் விலை லிட்டருக்கு 22 ரூபாய் உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்..!

இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்-யின் உண்மையான விலை 160 டாலர்.. அதிர்ச்சி அளிக்கும் தகவல்..!!

பெட்ரோல் விலை ரூ.40 வரை உயர வாய்ப்பு? ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்.. மீண்டும் வருகிறதா Oil Bond?

நாடு முழுவதும் உயர்த்தப்பட்டது பிரீமியம் பெட்ரோல் விலை: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!



Click it and Unblock the Notifications

