இது செம ஐடியாவா இருக்கே.. பயணிகள் மூலம் பார்சல் சேவை.. 22 வயது இளைஞரின் புதிய புரட்சி..!!

ஹைதராபாத்தில் ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், தன்னுடைய நண்பருடன் இணைந்து DeleMate என்ற செயலியை உருவாக்கியுள்ளார். இது பயணிகள் மூலம் பார்சல்களை டெலிவரி செய்யும் செயலி ஆகும். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இது எப்படி செயல்படுகிறது..? எவ்வளவு வருமானம் கிடைக்கும்..? என்பது பற்றி தெளிவாக பார்க்கலாம்.

DeleMate என்ற செயலியை உருவாக்கி, பயணிகள் மூலம் பார்சலை டெலிவரி செய்யும் புதிய தொழிலை தொடங்கியிருப்பவர் தான் தாரக் ராம். இவருக்கு வயது 22. இவர் ஒரு புதுமையான தொழிலை செய்ய விரும்பியுள்ளார். இதுதொடர்பாக தனது நண்பருடனும் கலந்துரையாடியுள்ளார். அப்போது இவர்களுக்கு ஒரு யோசனை வந்துள்ளது. அப்போது தான், இந்த புதிய செயலியை உருவாக்கியுள்ளனர்.

இது செம ஐடியாவா இருக்கே.. பயணிகள் மூலம் பார்சல் சேவை.. 22 வயது இளைஞரின் புதிய புரட்சி..!!

எப்படி செயல்படுகிறது..?: நீங்கள் யாருக்கேனும் ஒரு பார்சல் அனுப்ப வேண்டும் என்றால், அதன் முகவரி மற்றும் பார்சல் குறித்த விவரங்களை DeleMate செயலியில் பதிவு செய்ய வேண்டும். பின்னர், அந்த வழியாக பயணம் செய்யும் பயணிகள், உங்கள் பார்சலை நீங்கள் அனுப்ப விரும்பும் முகவரிக்கு எடுத்துச் செல்ல விருப்பம் தெரிவிப்பார். பின்னர், அந்த பார்சலை வாங்கிக் கொண்டு அந்த பயணி, சம்பந்தப்பட்டவர்களிடம் பாதுகாப்பாக கொண்டு சென்று ஒப்படைப்பார். இதற்கான பணம் செலுத்தும் முறை, செயலியின் மூலமே நடைபெறும். மேலும், பார்சல் அனுப்பும் நபரும், பயணியும் பார்சல் இப்போது எங்கே உள்ளது..? என்பதை நேரடியாக லைவ் டிராக்கிங் மூலம் கண்காணித்துக் கொள்ள முடியும். பார்சல் கிடைத்த பிறகு, இருவரும் ஒருவருக்கொருவர் ரேட்டிங் (rating) வழங்கிக் கொள்ள முடியும்.

DeleMate‑ன் நன்மைகள் : பார்சல்களை விரைவாகவும், சுலபமாகவும் அனுப்ப முடியும். வழக்கமான கூரியர் சேவையைவிட இது குறைந்த செலவு தான். அதேசமயம், பயணிகளுக்கும் கூடுதல் வருமான வாய்ப்பு கிடைக்கிறது. பயணிகள் தங்கள் பயணித்தின்போதோ அல்லது மற்ற நேரங்களிலோ பார்சல்களை எடுத்துச் செல்லலாம். பார்சலின் அளவு, தூரம் மற்றும் அவசர நிலை போன்ற காரணங்களால் வருமானம் மாறும். DeleMate செயலி உங்கள் பயணத்தின்போது, கூடுதல் பணம் சம்பாதிக்க உதவுகிறது. பல பார்சல்கள் எடுத்துச் செல்வதன் மூலம் நல்ல வருமானம் பெற முடியும்.

KYC சான்றிதழ் கட்டாயம் : DeleMate செயலி, பயனர்களின் பாதுகாப்பும் நம்பகத்தன்மையும் முதன்மையாகக் கருதுவதால், அனைத்து பயனர்களுக்கும் KYC சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது, நம்பிக்கையை ஏற்படுத்த ரேட்டிங் ஆப்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கான சம்பளமும் செயலி மூலம் பாதுகாப்பாக பரிமாற்றம் செய்யப்படுகிறது.

என்னென்ன பார்சல்களை அனுப்பலாம்..?: DeleMate செயலி மூலம் சிறிய ஆவணங்கள் முதல் பெரிய பெட்டிகள் வரை பலவிதமான பொருட்களை அனுப்ப முடியும். ஆனால், தடை செய்யப்பட்ட சட்டவிரோத பொருட்கள் மற்றும் ஆபத்தான பொருட்களை பார்சலாக அனுப்ப முடியாது.

DeleMate செயலியை பயன்படுத்துவது எப்படி..?: முதலில், கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பில் ஸ்டோர் மூலம் DeleMate செயலியை பதவிறக்கம் செய்ய வேண்டும். பிறகு, உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் போன்ற விவரங்களை கொடுத்து பதிவு செய்ய வேண்டும். பின்னர், உங்கள் சுயவிவரத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இதனைத் தொடர்ந்து, பார்சல் அனுப்ப விரும்புவோர் புதிய டெலிவரி கோரிக்கையை பதிவு செய்யலாம். பயணிகள் தங்களுக்கான பாதையில் உள்ள கோரிக்கைகளை தேடி ஏற்றுக் கொள்ளலாம். தற்போது இந்த சேவை ஹைதராபாத் நகரில் மட்டுமே செயல்பட்டு வருகிறது. விரைவில் மற்ற நகரங்களிலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+