ஒரு நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைய வேண்டுமெனில் வேகமான, மலிவான மற்றும் பல தரப்பு போக்குவரத்து அவசியம். இதுதான் அடிப்படை, இதற்காகவே இந்தியாவில் பல போக்குவரத்துத் திட்டங்கள், மேம்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இதனால் போக்குவரத்துச் செலவுகள் குறைவது மட்டும் அல்லாமல் மக்களின் இயக்கமும் வேகமாக இருக்கும், இதனால் வர்த்தகம், முதலீடுகள், வேலைவாய்ப்பு என அனைத்தும் வளர்ச்சி அடையும். இந்தப் பார்மூலா ஆதிகாலத்தில் சக்கரம் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் இருந்து இருக்கிறது.

இப்படி, உலகையைத் தனது வேகமான போக்குவரத்து முறை மூலம் வியக்கவைத்தது Hyperloop One நிறுவனம். டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் ஒரு மேதை என்பது எல்லோருக்கும் தெரியும், இவர் 2013ல் Hyperloop என்ற வேகமான போக்குவரத்து முறையைக் குறித்த ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தார். இதன் அடிப்படையில் தான் Hyperloop One நிறுவனம் உருவாக்கப்பட்டது.
Hyperloop One நிறுவனம் மூடப்படுவதற்கு முன்பு, Hyperloop என்றால் என்ன எனத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். இந்தப் போக்குவரத்து முறை ஒரு டியூப் வாயிலாக நடக்கும் உதாரணமாகக் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் மெட்ரோ பாலம் போல் ஒரு டியூப் அமைத்து அதில் ஒரு கேப்சியூல் போன்ற வாகனத்தில் அமர்ந்துகொண்டால் LOW PRESSURE வாயிலாக இந்தக் கேப்சியூல் வேகமாகச் செல்லும்.
எந்த அளவுக்கு வேகமாகச் செல்ல முடியும் என்றால்.. ஜூலை 2019ல் செய்த சோதனையில் இந்தக் கேப்சியூல் டியூப் வாயிலாக 463 km/h வேகத்தில் செல்லக் கூடியது எனக் கண்டுபிடிக்கப்பட்டது. அப்படியானால் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான 3676 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 8 மணிநேரத்தில் கடந்துவிடலாம். கேட்கும்போதே பிரம்மிப்பாக இருக்குதுல்ல.
இந்த வேகமான போக்குவரத்து முறையைப் பலருக்கும் வியப்பை கொடுத்த நிலையில், பல நிறுவனங்கள் இத்துறையில் இறங்கியது. 2014 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனம் ஹைப்பர்லூப் அமைக்கப் பல நாடுகள் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தாலும், இதுவரையில் எந்தொரு நாடும் கட்டுமானத்தைத் துவங்கவில்லை.
ஏன் இந்தியாவில் மகாராஷ்டிர அரசு மும்பை டூ புனே மத்தியில் ஹைப்பர்லூப் அமைப்பு Hyperloop One நிறுவனத்துடன் விருப்பம் தெரிவித்து 2018ல் ஒப்பந்தம் செய்தது. ஆனால் இதுவரையில் எந்த ஒப்பந்தமும் பெறவில்லை.
இதனால் Hyperloop One நிறுவனத்தை மூடவும், இதன் சொத்துக்களை விற்கவும், டிசம்பர் 31 ஆம் தேதி உடன் இதன் ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்கவும் திட்டமிட்டு உள்ளது. 2020ல் முதல் முறையாக Hyperloop One நிறுவனத்தின் கேப்சியூல் வாயிலாக 171 கிலோமீட்டர் வேகத்தில் மனிதன் சோதனையும் நடந்தது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications