இந்தியாவில் கார் என்பது ஆடம்பரம் என்ற நிலையை கடந்து, தற்போது அத்தியாவசியமான ஒரு விஷயமாக மாறியுள்ளது. இதனால் வீட்டுக்கு ஒரு கார் என்ற நிலையை இந்தியாவில் கொண்டுவர அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறது. சாமானிய மக்களும் காரை வாங்கி சொந்தமாக்க வேண்டும் என்பதற்காக சிறிய வகை கார்களுக்கு சமீபத்தில் ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டது. இதன் மூலம் கார் விலை குறைந்து நவம்பர், டிசம்பர் மாதத்தில் அதிகப்படியான கார்கள் விற்பனையானது. ஆனால் 2026ல் ஜிஎஸ்டி வரி குறைப்பை திரும்ப பெறும் வகையில் ஹூண்டாய் முதல் பல முன்னணி நிறுவனங்கள் கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
ஹூண்டாய் மோட்டார் நிறுவனம், 2026 ஜனவரி 1 முதல் தனது அனைத்து கார் மாடல்களின் விலையை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் விளக்கம் கொடுத்துள்ளது. உலகளாவில் உற்பத்தி செய்யப்படும் பொருள் விலைகள், குறிப்பாக உலோகங்கள் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், கார் உற்பத்தி நிறுவனங்கள் பெரும் அழுத்தத்தை சந்தித்து வருகின்றன. இதனால் பல நிறுவனங்கள் தனது buffer அளவை கடந்து சென்றதால் விலை உயர்வை வாடிக்கையாளர் மீது வைத்துள்ளது.

விலை உயர்வின் அளவு
ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, அனைத்து மாடல்களிலும் சராசரியாக 0.6 சதவீதம் விலை உயரும் என அறிவித்துள்ளது. இந்த உயர்வு உற்பத்தி செலவுகளில் ஏற்பட்ட அதிகரிப்பை ஈடுகட்டும் நோக்கில் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்தின் கார்கள் அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களையும் ஈர்க்க வேண்டும் என்பதற்காக என்டரி மாடலான ஹேட்ச்பேக் மாடல் கிராண்ட் ஐ10 விலை ரூ.5.47 லட்சம் முதல் தொடங்குகிறது, அதிகப்பட்சமான எலக்ட்ரிக் காரான அயோனிக் 5-ஐ ரூ.46.30 லட்சம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்த விலை உயர்வு முதன்முதலாக கார் வாங்குபவர்கள் மத்தியில் பெரும் சுமையாக மாறும்.
இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகளவில் கார் உற்பத்தி துறை பல சவால்களை சந்தித்து வருகிறது. ஒருப்பக்கம் சீனாவின் அதிரடி முதலீடுகள், மறுமுனையில் அமெரிக்காவில் வரி விதிப்பு ஆகியவை மொத்த ஆட்டோமொபைல் சப்ளை செயினை பாதித்துள்ளது. இதோடு மூலப்பொருட்கள் விலை உயர்வு, விநியோகச் சங்கிலியில் இருக்கும் சிக்கல்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களில் முதலீடு ஆகியவை ஆட்டோமொபைல் நிறுவனங்களின் கார் உற்பத்தி செலவுகளை அதிகரித்து வருகின்றன.
ஹூண்டாய் போலவே ரெனால்ட் 2சதவீதம் வரை, நிசான் 3சதவீதம் வரை, மெர்சிடிஸ்-பென்ஸ் 2சதவீதம் வரை, பிஎம்டபிள்யூ 6சதவீதம் வரை, ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார்ஸ் 2 சதவீதம் வரை விலையை ஜனவரி 2026 முதல் உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளன.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications