மும்பை: இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் இந்தியா பிரைவேட் நிறுவனம் ஐபிஓ தாக்கல் செய்வதற்கான ஆவணங்களை வெள்ளிக்கிழமை (இன்று) செபியிடம் தாக்கல் செய்துவிடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஐபிஓ-விற்கு செபி ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் கடந்த இரண்டு தசாப்தங்களில் இந்தியாவில் கார் தயாரிப்பு நிறுவனம் வெளியிடும் முதல் ஐபிஓ-வாக இது இருக்கும் என தெரிய வந்துள்ளது.

ஹூண்டாய் இந்தியா தற்போது வெளியிட திட்டமிட்டுள்ள ஐபிஓ-வில் 142 மில்லியன் பங்குகள் இருக்கின்றன. அதாவது நிறுவனத்தின் பங்குகளில் இது 17.5% ஆகும். ஹூண்டாய் இந்தியாவின் தாய் நிறுவனம் தன் வசமுள்ள பங்குகளை விற்பனை செய்வதற்காக இந்த ஐபிஓ வெளியீட்டிற்கு விண்ணப்பிக்கிறது. இந்த ஐபிஓ மூலம் 2.5 பில்லியன் முதல் 3 பில்லியன் டாலர்கள் வரை நிதி திரட்ட இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ-வாக ஹூண்டாய் மோட்டார் ஐபிஓ இருக்கலாம் என முதலீட்டாளர்கள் கணிக்கின்றனர். நடப்பு ஆண்டில் இந்தியாவின் பட்டியலிடப்படக்கூடிய மிகப்பெரிய ஐபிஓவாக இருக்கும் என்றும் இதனை பெறுவதற்கு சந்தையில் கடுமையான போட்டி இருக்கும் என்றும் தெரிகிறது.
2003ஆம் ஆண்டில் ஜப்பானை சேர்ந்த மாருதி சுசுகி நிறுவனம் ஐபிஓ வெளியீடு செய்து இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டது. இதனை அடுத்து தென் கொரியாவை சேர்ந்த ஒரு கார் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் பங்குச் சந்தையில் ஐபிஓ வெளியிடுவது இது முதல் முறையாக இருக்கும். தென்கொரிய நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் 1998 ஆம் ஆண்டு தன்னுடைய சான்ட்ரோ கார்கள் மூலம் இந்திய சந்தையில் நுழைந்தது.
தற்போது இந்தியாவில் கார் உற்பத்தி நிறுவனங்களில் 15 சதவீத சந்தையை ஹூண்டாய் ஆக்கிரமித்துள்ளது. மாருதி சுசுகிக்கு அடுத்தபடியாக, இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரக்கூடிய வெளிநாட்டு கார் தயாரிப்பு நிறுவனம் ஹூண்டாய் ஆகும். இந்தியாவில் விற்பனையாக கூடிய நான்கு கார்களில் ஒரு கார் ஹூண்டாய் நிறுவனத்திற்கு சொந்தமானது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் தங்களது சொந்த நாடான தென் கொரியாவுக்கு நிகராக இந்தியாவிலும் கார் விற்பனை செய்துள்ளது.
கடந்த ஓராண்டு காலத்தில் இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனத்தின் கார் விற்பனை விகிதம் 10% உயர்ந்துள்ளது. அதாவது கடந்த ஆண்டு 50,201 யூனிட்டுகள் விற்பனையான நிலையில் நடப்பு ஆண்டில் அது 63,701 யூனிட்களாக அதிகரித்துள்ளது.கூடுதலாக 13,500 கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.
ஹூண்டாயின் ஐபிஓவிற்கு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் நடப்பாண்டில் ஐபிஓ சந்தையில் மிக பரபரப்பாக பேசப்படும் ஒரு ஐபிஓ-வாக இது இருக்கும்.
Story written by: Devika
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications