இந்திய ஆட்டோமொபைல் துறையில் பல வருடங்களாக 2வது இடத்தை யாருக்கும் விட்டுக்கொடுக்காமல் கெட்டியாக பிடித்துக்கொண்டுள்ள ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் ஐபிஓ இன்று திறக்கப்பட உள்ளது. இந்திய முதலீட்டாளர்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட IPO ஆக இது இருந்தாலும் இதில் இருக்கும் ரிஸ்க்கான விஷயங்களை கட்டாயம் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
இந்த IPO மூலம் ஹூண்டாய் சுமார் 27,870.16 கோடி ரூபாய் அளவிலான நிதியை திரட்ட உள்ளது. இது இந்தியாவில் இதுவரை நடந்த மிகப்பெரிய IPO-வாக இருக்கப்போகிறது. இதற்கு முன்பு நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி தான் 21,008 கோடி ரூபாய் மதிப்பிலான ஐபிஓ வெளியிட்டு முதல் இடத்தில் இருந்தது. ஆனால் தற்போது இந்த இடத்தை ஹூண்டாய் கைப்பற்றுகிறது.

2009 ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பயணிகள் வாகன உற்பத்தியாளராக தொடர்ந்து இருக்கும் ஹூண்டாய் மோட்டார் இந்தியாவுக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இந்த ஐபிஓ விளங்குகிறது.
இந்த ஐபிஓ-வில், ஹூண்டாய் மோட்டார் கம்பெனி என்ற அதன் தென் கொரிய தாய் நிறுவனம் 14.22 கோடி பங்கு பங்குகளின் விற்பனை செய்வதன் மூலம் 27,870.16 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட உள்ளது. இந்த பங்குகளை முதலீட்டாளர்கள் 1,865 முதல் 1,960 ரூபாய் வரையிலான விலையில் வாங்க முடியும்.
2003 ஆம் ஆண்டு மருதி சுசூகி இந்தியாவின் IPO-க்குப் பிறகு இந்தியாவில் ஒரு கார் உற்பத்தியாளர் ஐபிஓ வெளியிடுகிறது என்றால் அது ஹூண்டாய் மோட்டார் இந்தியா தான். இதனாலேயே பெருமளவிலான ரீடைல் முதலீட்டாளர்கள் இந்த ஐபிஓ-வில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் ஹூண்டாய் ஐபிஓ-வில் முதலீடு செய்யும் முன்பு இதில் உள்ள ரிஸ்கான விஷயங்களை கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஒவ்வொரு ஐபிஓ முதலீட்டை போலவே, ஹூண்டாய் மோட்டார் இந்தியா IPO-விலும் சில முக்கிய அபாயங்கள் உள்ளன. இந்த நிறுவனத்தின் உற்பத்திக்குத் தேவையான உதிரிப்பாகங்கள் மற்றும் பொருட்களுக்காக குறைந்த எண்ணிக்கையிலான சப்ளையர்களை மட்டுமே அதிகம் நம்பியிருக்கின்றன. ஹூண்டாய் இந்தியா அதன் சப்ளையர் வலையமைப்பை பன்முகப்படுத்தாதது பெரும் பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.
இதேபோல் சப்ளையர் எண்ணிக்கை குறைவாக இருக்கும் காரணத்தால் உதிரிபாகங்கள் மற்றும் பொருட்களின் விலையில் ஏற்படும் உயர்வு அல்லது பொருட்களின் சப்ளையில் ஏற்படும் பாதிப்பு நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் லாப அளவீட்டில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும்.
மேலும், ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் செயல்பாடுகள், பாகங்கள் மற்றும் பொருட்களுக்காக அதன் தாய் நிறுவனமான தென் கொரியா நாட்டை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார் கம்பெனியை அதிகம் சார்ந்துள்ளது. இந்த நிலையில் ஐபிஓ-வுக்கு பின்பு இந்திய கிளைகும் - தென் கொரிய தாய் நிறுவனத்திற்குமான உறவு தொடர்ந்து சிறப்பாக இருக்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா IPO-வின் செயல்திறனை முதலீட்டாளர்கள் உன்னிப்பாக கவனிப்பார்கள், ஏனெனில் இதன் வெற்றி அடுத்தடுத்து ஆட்டோமொபைல் துறையில் இருக்கும் பிற நிறுவனங்களையும் IPO வெளியிட வழிநடத்தும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications