தமிழ்நாட்டின் ஆட்டோமொபைல் சந்தையில் ராஜாவாக விளங்கும் ஹூண்டாய் மோட்டர்ஸ் இந்தியா நிறுவனம் தனது CSR கிளை நிறுவனத்தின் வாயிலாகச் சுமார் 10 கோடி ரூபாய் அளவிலான நிதியை ரொரோனா நிவாரணமாக அளித்துள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் சென்னையில் இருக்கும் தொழிற்சாலை மூலம் இந்திய விற்பனைக்கு மட்டும் அல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது. இவை அனைத்திற்கும் தாண்டி இந்தியாவின் முன்னணி கார் விற்பனை நிறுவனமாகவும் ஹூண்டாய்த் திகழ்கிறது.
ஹூண்டாய் மோட்டார்ஸ்
கொரோனா-வை எதிர்த்துப் போராடும் ஹூண்டாய் கேர்ஸ் 3.0 திட்டத்தின் கீழ் 5 கோடி ரூபாயை முதல்வர் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடையாக அளித்துள்ளது. மீதமுள்ள 5 கோடி ரூபாய் தொகைக்குப் பல்வேறு மருத்துவ உபகரணங்கள் கொடுப்பதாகத் தெரிவித்துள்ளது.
5 கோடி ரூபாய்க்கு மருத்துவ உபகரணங்கள்
தற்போது வெளியான அறிவிப்பின் படி ஹூண்டாய் நிறுவனம் ஹைய் ப்லோ நேசல் ஆக்சிஜன் மெஷின், பிபாப் மெஷின், ஆக்சின் கான்சென்டிரேட்டார்ஸ் மற்றும் இரண்டு ஆக்சிஜன் பிளாட்களைத் தமிழ்நாட்டில் அமைத்துக்கொடுக்கவும் உள்ளது.
ஆக்சிஜன் பிளான்ட்
தமிழ்நாட்டில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் வேளையில் மிகவும் அவசியமான ஆக்சிஜன் பிளான்டுகளைத் தண்டையார்பேட்டை மற்றும் தாம்பரம் அரசு மருத்துவமனையில் அமைத்துக்கொடுக்க உள்ளது ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம்.
ஹூண்டாய் இந்தியா
இதுகுறித்து ஹூண்டாய் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் அனைத்து மோசமான காலகட்டத்திலும் ஹூண்டாய் துணை நின்றுள்ளது. இன்று கொரோனா 2வது அலை தொற்றுக்களை எதிர்த்துப் போராடி வரும் நிலையில் எங்களது உதவிகளைச் செய்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.