மும்பை: ஆட்டோமொபைல் துறையில் நீடித்து வரும் வீழ்ச்சியானது இன்று வரை மீள்ச்சியடைந்ததாக தெரியவில்லை. அதை நிரூபிக்கும் விதமாகவே டிசம்பர் மாதத்தில் கார் விற்பனை 10 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளதாக ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
இது கடந்த டிசம்பர் மாதத்தில் 10 சதவிகிதம் அதிகரித்து, 37,953 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு காரணம் இந்த நிறுவனம் சந்தையில் வரவிருக்கும் விதிமுறைகளுக்கு ஏற்ப புதிய வாகனங்களை உற்பத்தி செய்து வருவதாகவும், இதனால் இப்படி ஒரு வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
2019ம் ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த விற்பனையானது 7.2 சதவிகிதம் குறைந்து, 5,10,260 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவே 2018ம் ஆண்டில் 5,50,002 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதில் 2019ம் காலாண்டர் ஆண்டில் 1,81,200 வாகனங்கள் மட்டும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும், இது முந்தைய ஆண்டில் 1,60,010 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2019ம் ஆண்டு ஆட்டோமொபைல் துறைக்கு மிக சவாலான ஆண்டாகவே இருந்து வருகிறது என்றும் ஹூண்டாய் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் 2020ம் ஆண்டில் இது மீள்ச்சியடையலாம் என்றும், ஏனெனில் ஹூண்டாய் நிறுவனம் பிஎஸ் 6 விதிகளுக்கு ஏற்ப தற்போது கார்களை தயாரித்து வருவதாகவும் அறிவித்துள்ளது.
மேலும் தற்போது புதிய விதிகளின் படி தயாரிக்கப்பட்ட நான்கு மீட்டர் விளையாட்டு பயன்பாட்டு வாகனமானது இதுவரை ஒரு லட்சம் யூனிட்களுக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெறிவிக்கப்பட்டுள்ளது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா மட்டும் அல்ல. மற்ற வாகன நிறுவனங்களின் விற்பனையும் வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் வரவிருக்கும் மாதங்களில் இந்த மந்த நிலையானது குறைந்து, வாகன விற்பனை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த நிறுவனங்களின் பங்கு விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அதிலும் தற்போது ஹூண்டாய் உள்ளிட்ட பல நிறுவனங்கள் நிலவி வரும் பிரச்சனை தவிர்க்க பல வித சலுகைகளையும், தள்ளுபடிகளையும் வழங்கி வருகின்றன. அதிலும் வரவிருக்கும் பொங்கல் பண்டிகை காலத்தில் இந்த விற்பனையானது அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications