ஹூண்டாய் எலக்ட்ரிக் காருக்கு ஆதாரமாக விளங்கும் ஓசூர் நிறுவனம்..!!

அண்மை காலமாக இந்தியாவில் மின்சார வாகனங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்வு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை கருத்தில் கொண்டு மக்கள் மின்சார வாகனங்களுக்கு மாற வேண்டும் என அரசும் மக்கள் மின்சார வாகனங்களை வாங்க ஊக்குவிக்கிறது.

தற்போது சர்வதேச அளவில் மின்சார வாகனங்களுக்கான சந்தையாக இந்தியா மாறி இருக்கிறது. மின்சார இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார்கள் என பல வாகன தயாரிப்பு நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு மின்சார வாகனங்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து வருகின்றன.

 ஹூண்டாய் எலக்ட்ரிக் காருக்கு ஆதாரமாக விளங்கும் ஓசூர் நிறுவனம்..!!

இந்த போட்டியில் தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் இறங்கியுள்ளது. ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா என்ற பெயரில் ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் பெரிய அளவில் மின்சார வாகனங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக பேட்டரி செல்களை தயாரிக்கும் ஒப்பந்தத்தை எக்சைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் எக்சைட் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் துணை நிறுவனமான எக்சைட் எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தோடு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இதன்படி ஹுண்டாய் மோட்டார் நிறுவனத்தில் தயாரிக்கப்படக்கூடிய மின்சார வாகனங்களுக்கு தேவையான லித்தியம் செல்கள் மற்றும் பேட்டரி பேக்குகளை எக்சைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தயாரித்து வழங்க இருக்கிறது. எனவே ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் இந்தியாவில் தீவிரமாக மின்சார வாகன உற்பத்தியில் இறங்க இருப்பது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை அன்று ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் இந்த தகவலை பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பிடம் ஆவணமாக தாக்கல் செய்தது. இதன் மூலம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பேட்டரி செல்களை தங்களுடைய மின்சார வாகனத்தில் பயன்படுத்தும் முதல் இந்திய நிறுவனம் என்று பெருமை ஹூண்டாய் மோட்டார் இந்தியாவுக்கு கிடைக்க இருக்கிறது.

இவ்வாறு உள்நாட்டிலேயே மின்சார வாகனங்களுக்கான பேட்டரி செல்களை தயாரித்து பயன்படுத்துவதால் ஹூண்டாய் நிறுவனத்தின் மின்சார வாகனங்களின் விலை மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது குறைவாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

ஹூண்டாய் நிறுவனம் பல்வேறு மின்சார கார்களை இந்திய சந்தையில் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதற்கான பேட்டரி தயாரிப்பை தான் தற்போது எக்சைட் எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெற இருக்கிறது.

வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை தாண்டி இந்தியா தான் ஹூண்டாய் நிறுவனத்தின் மிகப்பெரிய சந்தையாக இருக்கிறது . இந்தியாவில் தற்போது ஹூண்டாய் நிறுவனம் Hyundai IONIQ 5 என்ற மின்சார காரை விற்பனை செய்கிறது. இதன் விலை சுமார் 46 லட்சம் ரூபாய் ஆகும்.

Story Written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+