இந்தியாவில் சொகுசு கார் மார்க்கெட் கணிசமாக வளர்ந்து விட்டது. மெர்சிடஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ, லேண்டு ரோவர் போன்ற பிராண்டு கார்கள் கடந்த சில ஆண்டுகளாக மிக அதிக அளவில் தனது கார்களை விற்றுள்ளது.
சொகுசு கார்களின் தேவை அதிகரித்து வரும் நிலையில் ஹூண்டாய் நிறுவனம் தனது பிரீமியம் பிராண்டான ஜெனிசிஸ்ஸை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. ஜெனிசிஸ் காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தும் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்காக ஹூண்டாய் நிறுவனம் ஒரு புதிய டீமை உருவாக்கி இந்தியாவில் ஜெனிசிஸ் பிராண்டை விற்பனை செய்ய உருவாக்கியுள்ளது. எஸ்யூவி கார்களுக்கு அதிக டிமாண்ட்இருப்பதால் ஜெனிசிஸ் இந்தியாவில் எஸ்யூவிக்களை அதிகளவில் விற்க திட்டமிட்டுள்ளது.
மக்களின் வரவேற்பை அறிவதற்காக இந்த மாடல்கள் முதலில் சிபியூக்களாக அறிமுகப்படுத்தப்படும். பின்னர் சென்னையில் உள்ள ஹூண்டாய் ஆலையில் எஸ்யூவிக்கள் அசெம்பிள் செய்யப்படும். இப்போது ஜெனிசிஸ் பிராண்டு 3 எஸ்யூவிக்களைக் கொண்டுள்ளது.
முதலில் ஜிவி70 மாடல் 2020இல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஜிபி70 மாடல் மெர்சிடஸ்ஸின் ஜிஎல்சி மற்றும் ஆடி க்யூ5 கார்களுடன் போட்டியிடுகிறது.
இரண்டாவது மாடல் ஜிவி80ம் 2020இல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஜிவி80 மாடல் மெர்சிடஸ் பென்ஸ் ஜிஎல்இ மற்றும் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 கார்களுடன் போட்டியிடுகிறது.
ஜெனிசிஸ் பிராண்டு இப்போது ஜிவி90 மாடல் காரை உலகம் முழுவதும் அறிமுகப்படுத்துவதற்கு தயாராகி வருகிறது. ஜிவி90 கார் ஜெனிசிஸ்ஸின் பிரதான மாடலாக விளங்கும். மெர்சிடஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் மற்றும் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 மாடல்களுக்குப் போட்டியாக இருக்கும்
இந்தியாவில் ஜெனிசிஸ் பிராண்டை அறிமுகப்படுத்துவது குறித்து ஹூண்டாய் சில காலமாகவே கூறிவருகிறது.
கடந்த ஆண்டு, ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அன்சூ கிம், ஜெனிசிஸ் பிராண்டை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதில் நிறுவனம் தயங்காது என்று தெரிவித்தார்.
அதை இந்தியாவுக்கு எப்போது கொண்டுவருவது என்பது தான் பிரச்னை என்றும் அவர் கூறினார். இந்தியாவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டுக்காக மாநில தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் பயன்படுத்துவதற்காக 68 ஜெனிசிஸ் கார்களை ஹூண்டாய் நிறுவனம் கொண்டு வந்தது.
Story written by: I.jayachandran
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications