ஆட்டோமொபைல் துறையை ஆட்டிப்படைத்து வரும் மந்த நிலையில், முன்னணி வாகன நிறுவனங்கள் பெரும்பாலும் சரிவையே சந்தித்து வருகின்றன.
இதன் எதிரொலியாக தொடர்ந்து விற்பனை ஒரு புறம் சரிந்து வருகிறது. மறுபுறம் பல ஆயிரம் பேர் வேலையையும் இழந்து வருகின்றனர்.
இத்தகைய கடுமையான சூழ்நிலையிலும் கூட, தென் கொரியாவைச் சேர்ந்த மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான ஹூண்டாய் நிறுவனம், இந்த கடுமையான மந்த நிலையிலும் கூட விற்பனை அதிகரித்துள்ளது.
விற்பனை அதிகரிப்பு
இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனம், கடந்த ஞாயிற்று கிழமையன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த நவம்பர் மாதத்தில் விற்பனை 7.2 சதவிகிதம் அதிகரித்து, 60,500 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 56,411 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்றுமதியும் அதிகரிப்பு
இதே உள்நாட்டு விற்பனை 2 சதவிகிதம் அதிகரித்து 44,600 யூனிட்கள் விற்[பனை செய்துள்ளதாகவும், இது கடந்த நவம்பர் 2018ல் 43,709 யூனிட்களாக விற்பனை செய்திருந்ததாகவும் தெரிவித்துள்ளது. இதே ஏற்றுமதி கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 25.2 சதவிகிதம் அதிகரித்து, 15,900 யூனிட்கள் ஏற்றுமதி செய்துள்ளதாகவும், இதுவே இதற்கு முந்தைய ஆண்டில் 12,702 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
பயணிகள் வாகனத்தில் வீழ்ச்சி தான்
நாட்டின் இரண்டாவது பெரிய பயணிகள் வாகன விற்பனையாளரான ஹூண்டாய், நவம்பரில் 2.2 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு, 63,610 யூனிட்களை விற்பனை செய்துள்ளதாகவும், இதுவே கடந்த ஆண்டு இதே காலாண்டில் 65,020 யூனிட்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவே கடந்த அக்டோபரிலும் வாகன விற்பனை 3.8 சதவிகிதம் குறைந்து 50,010 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்திருந்தது. இதுவே அக்டோபர் 2018ல் 52,001 யூனிட்கள் விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஹிமாலய சாதனை தான்
இதுவே இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தியாளரான மாருதி சுசூகி நிறுவனம் விற்பனை சரிந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக பயணிகள் வாகன விற்பனையானது கடந்த நவம்பரில் 3.3 சதவிகிதம் விற்பனை சரிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது தான் இப்படி எனில் மற்ற நிறுவனங்களும் பெரும் சரிவைக் சந்தித்துள்ளன. எனினும் இவற்றோடு ஒப்பிடும்போது ஹூண்டாய் நிறுவனம் விற்பனையை அதிகரித்திருப்பது ஹிமாலய சாதனை தான்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications