முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் நிறுவனம், கொரோனா இரண்டாம் கட்ட பரவல் காரணமாக தனது சென்னை ஆலையை ஐந்து நாட்கள் நிறுத்தி வைத்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக, தமிழகத்தில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இரண்டாம் கட்ட பரவல் பாதிப்பு அதிகம் இருப்பதன் காரணமாக, இந்த உற்பத்தி நிறுத்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது.
உற்பத்தி நிறுத்தம்
இந்த நடவடிக்கையானது மே 25 முதல், மே 29 வரையில் 5 நாட்களுக்கு ஆலை உற்பத்தியை, தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று தமிழக அரசு லாக்டவுனை நீட்டிப்பதாக அறிவித்ததையடுத்து, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
கொரோனா தாக்கம்
தற்போதைய நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 34,867 பேருக்கு தாக்கம் அடைந்துள்ளனர். 404 பேர் பலி எண்ணிக்கையும் அடைந்துள்ளனர். புதிய வழக்குகளுடன் சேர்த்து மொத்தம் 18,77,211 ஆகவும், மொத்த இறப்பு எண்ணிக்கையானது 20,872 ஆகவும் அதிகரித்துள்ளது.
தொடர்ந்து பணி
தற்போது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், வாகனங்களில் வெளியே செல்லவும் இ-பதிவு கட்டாயமாக்கபப்ட்டுள்ளது. இந்த நிலையில் லாக்டவுன் காலகட்டத்திலும் தொடர்ந்து செயல்பட ஆட்டோமொபைல் உள்பட சில துறை சார்ந்த நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஹூண்டாய் ஊழியர்கள் தொடர்ந்து பணிக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
ஊழியர்கள் பாதிப்பு
இதனால் பலர் கொரோனாவினால் தாக்கம் அடையும் நிலைக்கு தள்ளப்பட்டனர். கொரோனாவால் சில ஊழியர்கள் இறந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனால் ஊழியர்கள் தங்களது அச்சம் காரணமாக போராட்ட களத்திலும் குதித்தனர். இதனையடுத்து தான் ஹூண்டாய் நிறுவனம் இப்படியொரு அதிரடியான முடிவினை எடுத்திருப்பதாக தெரிகிறது.
சம்பளம் பிடித்தம் இல்லை
மேலும் இந்த ஐந்து நாட்களுக்கு சம்பளம் பிடித்தம் எதுவும் இருக்காது என்றும் கூறப்படுகிறது. எனினும் ஹூண்டாய் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியிடவில்லை. ஆலை 5 நாட்களுக்கு இயங்காது என்று மட்டும் அறிவித்துள்ளது.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications