அமெரிக்காவை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம் டெல்லி அருகே குருகிராம் பகுதியில் 2,60,000 சதுர அடி அளவிலான அலுவலக தளத்தை குத்தகைக்கு எடுக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்திகள் டாடா ரியாலிட்டி நிறுவனத்தால் டிஆர்ஐஎல் டவர் பகுதியில் அலுவலக இடங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதில் 2, 60,000 சதுர அடி பரப்பு உள்ள அலுவலக இடத்தை குத்தகைக்கு எடுக்க ஐபிஎம் நிறுவனம் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது ஏ கிரேட் தரத்திலான அலுவலக இடங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.

சர்வதேச அளவிலான தொழில்நுட்ப நிறுவனங்கள் ஊழியர்கள் கட்டாயம் அலுவலகத்திற்கு வந்து தான் பணிபுரிய வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டு இருப்பதும் பல்வேறு நிறுவனங்களின் பன்னாட்டு திறன் கிளைகள் இந்தியாவில் நிறுவப்படுவதும் அலுவலக இடங்களுக்கான தேவை அதிகரித்திருப்பதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் இதற்கு ஒரு காரணமாகும்.
எனவே குருகிராம் பகுதியில் பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு அலுவலக இடங்களை நிரப்பி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி இந்தப் பகுதியில் அலுவலக இடங்களை குத்தகைக்கு எடுப்பதற்கு சர்வதேச நிறுவனங்களிடையே கடுமையான போட்டி நிலவுவதாகவும் சொல்லப்படுகிறது. அண்மையில் தான் டாடா ரியாலிட்டி நிறுவனத்தால் குருகிராமில் டிஆர்ஐஎல் டவர் நிறுவப்பட்டது. இதில் ஏ கிரேட் தரத்தில் அலுவலக இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே அமெரிக்காவை சேர்ந்த நெட்வொர்க்கிங் சிஸ்டம்ஸ் நிறுவனமான சியானா 1,35,000 சதுர அடி அலுவலக இடத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது. தற்போது ஐபிஎம் நிறுவனமும் இதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் 2024 ஆம் ஆண்டில் மட்டும் 83 முதல் 85 மில்லியன் சதுர அடி அளவிலான அலுவலக இடங்கள் குத்தகைக்கு எடுக்கப்பட்டு இருப்பதாக ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று வெளியிட்ட தரவு சுட்டிக்காட்டுகிறது. இது 2023 ஆம் ஆண்டை விட 13 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் அலுவலகம் சார்ந்த ரியல் எஸ்டேட் துறை மந்த நிலையில் இருக்கும்போது இந்தியாவில் மட்டும் இந்த பிரிவு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் திறன்மிகு ஊழியர்கள் அதிகரித்திருப்பதும் பன்னாட்டு நிறுவனங்களின் கிளைகள் அதிகரித்து வருவதும் இதற்கு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
More From GoodReturns

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications