ஜெனரேட்டிவ் AI அறிமுகம் பல துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வரும் வேளையில், சில தொழில்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் டெக் துறை வல்லுனர்கள் இதை மாறுபட்ட கோணத்தில் பார்க்கிறார்கள்.
ஐபிஎம் நிறுவனத்தின் இந்தியா மற்றும் தெற்காசியாவின் நிர்வாக இயக்குநர் சந்தீப் படேல் கூறுகையில், AI உண்மையில் வேலைவாய்ப்பு எண்ணிக்கையை நீக்குவதை விட, அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று தான் நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

சந்தீப் படேல் செய்தி நிறுவனமான IANS உடனான உரையாடலில், தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் குறித்துப் பேசுகையில், AI தொழில்நுட்பத்தின் மூலம் வேலைவாய்ப்பில் மொத்தமாகவே நிகர எண்ணிக்கை உயர்த்தும் என்று தான் உறுதியாக நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.
மக்கள் புதிய வேலை வாய்ப்புகளை எதிர்கொள்ளும் போது பெரும்பாலான நேரத்தில் அச்சத்தை வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார். இணையத்தின் வருகையின் போதும் இது நடந்தது, உதாரணமாக இப்போது செய்தித்தாள் அச்சிடுதல் போன்ற சில துறைகளில் வேலைகள் குறைவதற்கு வழிவகுத்தது.
ஆனால் அதே நேரத்தில் வெர் டிசைனிங், டேட்டா சையின்ஸ், டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் வெப் பப்ளிஷிங் போன்ற முற்றிலும் புதிய வேலைகள் உருவாக்கியது.

இந்தப் புதிய துறைகளில் தற்போது பல கோடி பேர் பணியாற்றி வருகின்றனர். இந்தச் சூழலில் AI கண்டு அஞ்சும் மக்கள் தங்களுடைய திறன் மேம்படுத்திக்கொள்ளப் படேல் வலியுறுத்தினார்.
தற்போது, 46% இந்திய நிறுவனங்கள், ஆட்டோமேஷன் மற்றும் AI கருவிகளுடன் தங்கள் ஊழியர்களுக்குத் தீவிரமாகப் பயிற்சி அளித்து வருகின்றன அல்லது ரீஸ்கில்லிங் செய்து வருகின்றன.
ஆனால் இப்போது இருக்கும் பெரும் சவாலானது, ஒரு பெரிய பணியாளர்கள் கூட்டத்திற்குப் பயிற்சி அளிப்பது தான். எல்லோரும் CODER அல்லது AI டெவலப்பராகவோ இருக்க முடியாது. இந்த வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப கற்றுக்கொள்வது அவசியம்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications