டெக் துறையில் 100 வருடங்களுக்கும் அதிகமாக செயல்பட்டு வரும் IBM நிறுவனம், 2023-ம் ஆண்டு 8,000 பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கியது. இது இயற்கையான வேலை முறைகளை செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் மாற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே செய்த முடிவு. வேலை நேரத்தை மிச்சப்படுத்தும், செலவுகளை குறைக்கும், உற்பத்தித் திறனை உயர்த்தும் என்ற நோக்கத்தோடு நடந்த இந்த முயற்சி, எதிர்பார்த்தது போலவே நடைபெறவில்லை.
AI-யால் மாற்றப்பட்ட HR வேலைகள்: இந்நிறுவனத்தை விட்டு வெளியேற்றப்பட்ட தொழிலாளர்களில் பெரும்பாலோர் மனித வள (HR) துறையில் இருந்தவர்கள். IBM நிறுவனம் AskHR என்ற AI அமைப்பை உருவாக்கி, ஊழியர்களின் சம்பள விவரங்கள், விடுப்பு விண்ணப்பங்கள், ஆவண நிர்வாகம் போன்ற சாதாரண வேலைகளை இதன்மூலம் செய்ய திட்டமிட்டது. இந்த AskHR அமைப்பு 94% சாதாரண HR பணிகளை நன்கு செய்தது. 2024-ம் ஆண்டு மட்டும் AskHR, 1 கோடியே 15 லட்சம் ஊழியர்களின் கேள்விகளை எதிர்கொண்டு தக்க பதில் அளித்தது. இதனால், ஊழியர் திருப்தி மதிப்பெண் (Net Promoter Score) -35 இருந்து +74 ஆக உயர்ந்தது.

ஆனால் ஏன் பின்னடைவு?:இணையத்தில் வெளியான தகவலின்படி, செயற்கை நுண்ணறிவு முறைகள் இன்னும் முழுமையாக மனிதர்களை மாற்றக்கூடிய அளவுக்கு முன்னேறவில்லை. குறிப்பாக சில வேலைகளில் மனிதர்கள் செய்யும் ஒத்துழைப்பு, சிந்தனை, உரையாடல் போன்றவை தேவைப்படுகின்றன. இதன் காரணமாக, IBM மீண்டும் அதே வேலைகளை செய்யக்கூடிய புதிய ஊழியர்களை நியமிக்கத் தொடங்கியது.
வேலைவாய்ப்பு வளர்ச்சி தொடர்ந்தது: இவ்வாறான மாற்றங்களுக்குப் பிறகும் IBM நிறுவனத்தில் மொத்த ஊழியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அரவிந்த் கிருஷ்ணா கூறியபடி, AI மூலமாக நம்மால் சில செலவுகளைச் சேமிக்க முடிந்தது. இதனால் நாம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க முடிந்தது என்று கூறினார்.
புதிய வேலைவாய்ப்பு துறைகள்: AI கையாள முடியாத, மனிதர்களின் திறமை தேவைப்படும் துறைகளில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகின. அவை, மென்பொருள் இன்ஜினியரிங், விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவை, விளம்பர மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவை அனைத்தும் மனிதர்களின் திறமை, சிந்தனை, உரையாடல் திறன் போன்றவை அவசியமாக இருக்கும் துறைகள்.
AI வேலைகளை மட்டும் இல்லாமல், வேலைகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதையும் மாற்றுகிறது: AI என்றால் வேலைகளை மட்டுமே நீக்கும் என்ற கருத்து தவறு. வேலைகளை உருவாக்குவதிலும் இது பங்கு வகிக்கிறது. உதாரணமாக, AI அமைப்புகளை வடிவமைக்கும் தொழில்நுட்ப நிபுணர்கள், AI பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு உதவுவோர், AI தயாரிப்புகளை விற்பனை செய்வோர் ஆகியவை மற்ற நிறுவனங்களுக்கும் பாடமாகிறது. Duolingo போன்ற நிறுவனங்களும் AI உதவியுடன் பணிகளைச் செய்ய முயன்ற போது, சில வேலைகளில் AI-க்கு வழிகாட்டுதல் தேவையாகி, மனிதர்களை மீண்டும் நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
IBM நிறுவனம் எடுத்த இந்த முயற்சி, நமக்கு ஒரு முக்கியமான உண்மையை எடுத்துக்காட்டுகிறது. AI சாதாரண மற்றும் மானிட்டர் செய்யக்கூடிய வேலைகளை செய்யலாம். ஆனால் மனிதர்கள் தேவையான வேலைகளும் இருக்கின்றன. இது போன்ற மாறுதல்கள், எதிர்காலத்தில் மற்ற நிறுவனங்களும் எவ்வாறு தொழில்நுட்பத்தையும் மனித திறமையையும் சமநிலையுடன் பயன்படுத்தலாம் என்பதற்கான பாடமாக அமைகிறது.
ஐபிஎம்-மின் மாறிவரும் மாதிரி, பணியிடத்தில் மனிதர்களையும் இயந்திரங்களையும் சமநிலைப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. தானியங்குமயமாக்கல் செயல்திறனை மேம்படுத்துகிறது, ஆனால் 6% மனிதவள கோரிக்கைகளுக்கு இன்னும் மனித தொடர்பு தேவைப்படுகிறது, இது AI அனைத்து சிக்கல்களையும் தீர்க்க முடியாது என்பதை நிரூபிக்கிறது.
ஐபிஎம் தனது 270,000+ உலகளாவிய பணியாளர்களை மறுவரையறை செய்து வருவதால், தொழில்நுட்பம் மற்றும் திறமையின் ஒருங்கிணைப்பில் அதன் கதை மற்ற நிறுவனங்களுக்கு ஒரு வழிகாட்டியாக உள்ளது. தலைமை நிர்வாக அதிகாரி கிருஷ்ணா இதைச் சிறப்பாகக் கூறினார்: மனித படைப்பாற்றல் மற்றும் தொடர்பு தேவைப்படும் இடங்களில் தானியங்குமயமாக்கல் எங்களுக்கு அதிக முதலீடு செய்ய உதவியது." இது எதிர்காலத்தில் மனித திறமைகளும் AI தொழில்நுட்பமும் இணைந்து செயல்படும் ஒரு புதிய பணியிட யதார்த்தத்தை உணர்த்துகிறது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications