கணவன் - மனைவி கூட்டாக வருமான வரி தாக்கல் முறையை கொண்டுவாங்க – மத்திய அரசுக்கு கோரிக்கை

டெல்லி: பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில் பல்வேறு துறையை சார்ந்தவர்களும் பட்ஜெட்டில் என்ன எதிர்பார்க்கிறோம் என்பது குறித்து மத்திய அரசுக்கு தங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

மத்திய நிதி அமைச்சகம் பல்வேறு துறையை சார்ந்த பிரதிநிதிகளோடு ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறது. இந்த நிலையில் ஐசிஏஐ எனப்படும் பட்டய கணக்காளர்களுக்கான இந்திய நிறுவனம் மத்திய அரசுக்கு ஒரு கோரிக்கை மனுவை வழங்கியுள்ளது. அதில் திருமணமான தம்பதிகள் கூட்டாக தங்களுடைய வருமான வரி கணக்கு அறிக்கையை தாக்கல் செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

 கணவன் - மனைவி கூட்டாக வருமான வரி தாக்கல் முறையை கொண்டுவாங்க – மத்திய அரசுக்கு கோரிக்கை

புதிய வரி கணக்கு தாக்கல் நடைமுறையில் இவ்வாறு தம்பதிகள் கூட்டாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் முறையை கொண்டு வர வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். குடும்பத்தில் ஒரு நபர் மட்டுமே வேலைக்கு சென்று சம்பாதிப்பவராக இருக்கும் குடும்பங்களில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் வரி ஏய்ப்பு நடவடிக்கைகளை பெருமளவில் தடுக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது “joint taxation of married couples” என்ற ஒரு புதிய பிரிவினை ஏற்படுத்தி தரவேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வருமான வரி தாக்கல் செய்பவர்கள் விருப்பப்பட்டால் தம்பதி சமிதமாக கூட்டாக தாக்கல் செய்யலாம் அல்லது தனித்தனியாகவும் தாக்கல் செய்து கொள்ளலாம் என அதில் கூறியுள்ளனர். இவ்வாறு தம்பதிகளாக வருமான வரி கணக்கினை தாக்கல் செய்யும்போது அவர்களுக்கு 6 லட்சம் ரூபாய் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு வரி விதிக்க கூடாது என கேட்டு கொண்டுள்ளனர்.

6 முதல் 14 லட்சம் வரைவிலான வருமானத்திற்கு 5% , 14 முதல் 20 லட்சம் வரை நான் வருமானத்திற்கு 10% , 20 முதல் 24 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 15%, 24 முதல் 30 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 20%, 30 லட்சம் ரூபாய் மேல் உள்ள வருமானத்திற்கு 30% என்ற அளவில் வரி பிடித்தம் செய்யலாம் என பரிந்துரை வழங்கியுள்ளனர்.

கணவன் மனைவி இருவருமே ஊதியம் பெறக்கூடிய நபர்களாக இருந்தால் அவர்கள் இருவருக்குமே நிலையான கழிவுத்தொகை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். மேலும் கூடுதல் வரிக்கான வரம்பையும் உயர்த்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். உதாரணமாக 1 கோடி ரூபாய் வரையிலான வருமானத்திற்கு எந்தவித கூடுதல் வரியும் வசூலிக்க கூடாது என கேட்டுக் கொண்டுள்ளனர்.

பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஏற்கனவே இது போல தம்பதிகள் கூட்டாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை அமலில் இருக்கிறது என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதன் மூலம் மக்கள் வரி ஏய்ப்பு செய்யாமல் தானாகவே வருமான வரி தாக்கல் செய்ய முன் வருவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டாக கணக்கு தாக்கல் செய்தால் அதிகபட்ச வருமான வரம்பும் கிடைக்கும் என கூறியுள்ளனர்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+