இனி போனில் கிரிக்கெட் போட்டிகளை பார்க்க முடியாதா? ஜியோ ஹாட்ஸ்டார் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

இந்திய மக்களிடையே தொலைக்காட்சிகளை தாண்டி செல்போன்கள் முக்கியமான இடத்தை பிடித்து விட்டன. தொலைக்காட்சியில் பார்த்து வந்த அனைத்து நிகழ்வுகளும் தற்போது செல்போன்களிலேயே காணமுடிகிறது. இதற்காக பிரத்தியேக செயலிகள், இணையதளங்கள் உள்ளிட்டவை நமக்கு கிடைக்கின்றன.

அந்த வகையில் இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளை தொலைக்காட்சிக்கு நிகராக ஸ்மார்ட் போன்களில் பார்க்கக்கூடிய ரசிகர்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்துவிட்டது. குறிப்பாக ஜியோ ஹாட்ஸ்டார் செயலி இந்தியாவில் கிரிக்கெட் ஸ்ட்ரீமிங் தளங்களில் முதலிடத்தில் இருக்கிறது. ஜியோ ஹாட்ஸ்டார்-இல் திரைப்படங்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றைக் கடந்து அதிகமாக மக்கள் பார்க்கப்படும் ஒரு நிகழ்வாக கிரிக்கெட் போட்டிகள் இருக்கின்றன .

இனி போனில் கிரிக்கெட் போட்டிகளை பார்க்க முடியாதா? ஜியோ ஹாட்ஸ்டார் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

வீட்டில் இல்லாமல் டிராவல் செய்து கொண்டிருப்பவர்கள் அல்லது அலுவலகங்களில் இருப்பவர்கள் அவ்வப்போது ஜியோ ஹாட்ஸ்டார் செயலி வாயிலாக கிரிக்கெட் போட்டியை நேரலையில் பார்த்து என்ன ஸ்கோர் என்பதை தெரிந்து கொள்வார்கள். அந்த வகையில் கிரிக்கெட் ரசிகர்களின் போனில் தவறாமல் இடம்பெற்றிருக்கும் ஒரு செயலியாக ஜியோ ஹாட்ஸ்டார் தற்போது இடம் பிடித்திருக்கிறது.

ரிலையன்ஸின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய ஜியோ ஹாட்ஸ்டார் 2024 முதல் 2027 ஆம் ஆண்டு வரையிலான ஐசிசி நிகழ்வுகளுக்கான இந்திய ஒளிபரப்பு உரிமங்களை வாங்கி இருந்தது . கிட்டத்தட்ட 25,000 கோடி ரூபாய் மதிப்புக்கு ஜியோ ஹாட்ஸ்டார் இந்த உரிமங்களை பெற்றிருந்தது. இதில் ஏற்கனவே சாம்பியன்ஸ் டிராபி 2025, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் மற்றும் பெண்கள் உலக கோப்பை 2025 போட்டிகள் ஆகியவை ஒளிபரப்பப்பட்டு விட்டன .

2026 ஆம் ஆண்டில் ஆண்களுக்கான டி20 உலக கோப்பை போட்டி நடைபெற இருக்கிறது. கோடிக்கணக்கானவர்கள் பார்த்து ரசிக்க கூடிய ஒரு போட்டியாக இது இருக்கப் போகிறது. இந்த சூழலில் நிதி இழப்புகள் காரணமாக ஜியோ ஹாட்ஸ்டார் 2026 டி20 உலக கோப்பைக்கு முன்பாகவே ஒளிபரப்பு உரிமம் சம்பந்தப்பட்ட ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற விரும்புவதாக ஐசிசிக்கு தகவல் தெரிவித்துள்ளது.

இனி போனில் கிரிக்கெட் போட்டிகளை பார்க்க முடியாதா? ஜியோ ஹாட்ஸ்டார் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

விளையாட்டு போட்டிகளை ஒளிபரப்பு செய்வதில் கடுமையான இழப்பு ஏற்பட்டதாகவும் இந்த ஒப்பந்தத்தை இனி எங்களால் தொடர முடியாது என்றும் ஜியோ நிர்வாகம் ஐசிசி இடம் அறிவித்து விட்டதாக எக்னாமிக் டைஸ் செய்தி குறிப்பிடுகிறது. ஜியோவின் இந்த முடிவு ஐசிசி நிர்வாகத்திற்கே அதிர்ச்சியை தந்துள்ளது. எனவே ஐசிசி 2.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒளிபரப்பு உரிமத்தை ஜியோவுக்கு மாற்றாக வேறு நிறுவனத்திற்கு வழங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம்.

சோனி, அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற தளங்களுடன் ஐசிசி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் இவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்ய இந்த நிறுவனங்கள் முன்வருமா என்பது இனிவரும் நாட்களில் தெரியவரும். ஆண்களுக்கான டி20 உலக கோப்பை தொடர் பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது. இதில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெற உள்ளது . ஜியோ ஹாட்ஸ்டாரின் திடீர் முடிவால் கிரிக்கெட் ரசிகர்கள் டி20 கிரிக்கெட் போட்டிகளை போனில் கண்டு ரசிக்க முடியாதா என்ற குழப்பத்தில் உள்ளனர்.

ஜியோ ஹாட் ஸ்டார் நிறுவனம் விளையாட்டு போட்டிகள் சம்பந்தப்பட்ட ஒளிபரப்பு ஒப்பந்தத்தின் மூலம் 2023- 24 ஆம் ஆண்டில் 12,319 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்திருந்தது, அது 2024-25 ஆம் ஆண்டில் 25,760 கோடி ரூபாய் என இரண்டு மடங்காக உயரும் என கணித்துள்ளது. இதற்கிடையே அண்மையில் ரியல் மணி கேமிங் விளையாட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. எனவே இவர்களின் ஸ்பான்சர் மற்றும் விளம்பரங்கள் இனி கிடைக்காது. இதுவே சுமார் 7000 கோடி ரூபாய் வரை நஷ்டத்தை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+